Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவன் பாதத்தை ராவணன் வணங்கிய இடம் 5,000 ஆண்டுகள் பழமையான சிவன் கோவில் 5,000 ஆண்டுகள் பழமையான சிவன் கோவில்
முதல் பக்கம் » துளிகள்
காட்டை காக்கும் துர்கா பரமேஸ்வரி
எழுத்தின் அளவு:
காட்டை காக்கும் துர்கா பரமேஸ்வரி

பதிவு செய்த நாள்

18 நவ
2025
08:11

தட்சிண கன்னடா பெல்தங்கடி தாலுகாவில் ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி கோவில் உள்ளது. இந்த கோவில் நேத்ராவதி ஆற்றங்கரைக்கு அருகே அமைந்து உள்ளது. கோவில் 800 ஆண்டுகள் பழமையானது. கோவிலின் முக்கிய தெய்வமாக துர்கா பரமேஸ்வரி உள்ளார். துர்காதேவி கோவில் எனவும் அழைக்கின்றனர்.


அமைப்பு கோவில் தென்னிந்திய கட்டட கலையை பிரதிபலிக்கிறது. கோவில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிக்கு அருகே அமைந்து உள்ளது. மலைகளுக்கு நடுவே காட்சி தரும் கோவிலுக்கு எதிர் திசையில் நேத்ராவதி ஆறு ஓடுகிறது. எனவே, இந்த கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கோவில் அமைந்துள்ள இடத்தை பார்த்ததுமே மன நிம்மதி ஏற்படும். அந்த அளவிற்கு இயற்கை எழிலில் கோவில் காட்சி அளிக்கிறது.


இந்த கோவில் அருகே 5 ஏக்கர் பரப்பளவில், ‘தேவரகாடு’ எனும் வனப்பகுதி உள்ளது. இங்கு அதிக எண்ணிக்கையில் வவ்வால்கள் உள்ளன. இந்த காட்டுப் பகுதிக்கு செல்வதற்கே மக்கள் அச்சம் அடைவர். ஏனெனில், இங்கு தீயசக்தி இருப்பதாக நம்புகின்றனர். தீயசக்திகளிடம் இருந்து துர்கா தேவி பாதுகாப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர். காட்டையும், வீட்டையும் பாதுகாக்கும் துர்கா தேவி என, பக்தர்கள் அழைப்பதை கோவில் வளாகத்தில் நம்மால் கேட்க முடியும்.


இங்கு விநாயகர், சுப்பிரமணியர், நாக தேவதைகளுக்கும் சன்னிதிகள் உள்ளன. தசராவின் போது கோவிலுக்கு அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வருகை தருகின்றனர். அமாவாசை, வெள்ளி கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடக்கும். கோவில் காலை 6:00 மணியில் இருந்து மாலை 6:00 மணி வரை திறந்திருக்கும்.


இந்த கோவில் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனாலும், இன்றும் கம்பீரமாக காட்சி அளிப்பதை நம்மால் பார்க்க முடியும். கோவிலுக்கு சாதாரண நாட்களில் வரும் பக்தர்கள் பெரும்பாலும் உள்ளூர் வாசிகளாகவே இருக்கின்றனர். பண்டிகை நாட்களில் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். எப்படி செல்வது? 


பஸ்: முதலில் தட்சிண கன்னடா பஸ் நிலையத்திற்கு வரவும். அங்கிருந்து டாக்சி மூலம் 40 கி.மீ., தொலைவில் உள்ள கோவிலை அடையலாம்.


ரயில்: எங்கிருந்தாலும் எடுகேமேரி ரயில் நிலையத்திற்கு வர வேண்டும். அங்கிருந்து டாக்சி மூலம் 60 கி.மீ., தொலைவில் உள்ள கோவிலை அடையலாம்.

 
மேலும் துளிகள் »
temple news
மைசூரு: சாமுண்டி மலையில் உள்ள நந்தி சிலைக்கு, 32 மங்கல பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.மைசூரு சாமுண்டி ... மேலும்
 
temple news
சிவனுடன் மகரிஷி ரிஷ்ய சிருங்கர், ஒளியாக கலந்து மான் கொம்பு, மீசை, தாடியுடன் காட்சியளிக்கும் சிவனை ... மேலும்
 
temple news
மாண்டியாவின் கே.எம். தொட்டி அருகே அனுமந்த நகர் கிராமத்தில் அமைந்துள்ளது ஆத்ம லிங்கேஸ்வரா கோவில். ... மேலும்
 
temple news
அம்பாள் அவதாரங்களில், திரிபுர சுந்தரியும் ஒன்றாகும். பண்டகாசுரன் என்ற அரக்கனை வதம் செய்வதற்காக, ... மேலும்
 
temple news
சிவனின் சக்திகளில் ஒன்றான பைரவர் பிறந்த தினமே காலபைரவாஷ்டமி. இந்நாளில் அஷ்ட லட்சுமியரும் பைரவரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar