Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news காளவாய் பொட்டல் சந்தன ... ராம்நகர் ராமர் கோயிலில் அபங்க சங்கீர்த்தன ஹரிகதை ராம்நகர் ராமர் கோயிலில் அபங்க ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கோஷ்டியூர்: தங்க விமானத்திற்கு கும்பாபிஷேகம் யாகசாலைக்கு முகூர்த்த கால்
எழுத்தின் அளவு:
திருக்கோஷ்டியூர்: தங்க விமானத்திற்கு கும்பாபிஷேகம் யாகசாலைக்கு முகூர்த்த கால்

பதிவு செய்த நாள்

01 டிச
2025
10:12

திருக்கோஷ்டியூர்: சிவகங்கை மாவட்டம் திருப்புத்துார் அருகே திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயில் அஷ்டாங்க தங்க விமானத்திற்கு 2026 பிப்., 6 கும்பாபிேஷகம் நடக்கவுள்ளதையடுத்து யாகசாலை அமைப்பதற்கு முகூர்த்தக்கால் நடும் உற்ஸவம் நேற்று நடந்தது.


சிவகங்கை தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் சிறப்பு மிக்க மூலவர் அஷ்டாங்க விமானம் உள்ளது. இந்த விமானத்திற்கு தங்க தகடு வேயும் திருப்பணி நடந்து வருகிறது.


தேவஸ்தானம், ஹிந்து அறநிலையத்துறை, சவுமிய நாராயண பெருமாள் சாரிடபிள் டிரஸ்ட் ஆகியவை திருப்பணியை செய்து வருகின்றன.


விமானத்தின் மூன்று நிலைகளில் தற்போது முதல் நிலையில் தங்கத்தகடு வேயும் பணி நடக்கிறது. அஷ்டாங்க விமானத்தில் 3600 சதுர அடிக்கு தாமிரத்தகடு அடித்து கவசம் செய்யப்பட்டுள்ளது.


நான்கு மூலைகளிலும் வேதங்களைப் போல கருடன்கள், இரு இதிகாசங்கள் போல கருடனுக்கு இரு புறமும் சிங்கங்கள், விமானத்தின் எட்டு திசைகளிலும் எட்டு கந்தர்வ கன்னிகள், அனைத்து கந்தர்வ பிம்பங்கள், விமானத்தின் உச்சியில் ஆயிரம் ஆண்டு பழமையான தங்க ஸ்துாபி, கிழக்கே லட்சுமி வராக பெருமாள், தெற்கே லட்சுமி நரசிம்மர், மேற்கே லட்சுமி நாராயணன், வடக்கே வைகுண்டபதி உட்பட 18 விக்ரகங்களுக்கு தாமிர தகடு பொருத்தப்படுகிறது.


இத்திருப்பணிகள் நிறைவடைந்து பிப்., 6ல் தங்க விமானத்திற்கு கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. அதற்காக 8 கால யாகசாலை பூஜைகள் பிப்., 1 முதல் 5 நாட்கள் நடக்கவுள்ளன.


யாகசாலை அமைப்பதற்கான முகூர்த்தக்கால் நேற்று காலை ஊன்றப்பட்டது. முன்னதாக காலை 8:00 மணிக்கு சிம்ம மண்டபத்தில் பட்டாச்சார்யர்களால் சிறப்பு ஹோமம் நடந்தது. தொடர்ந்து முகூர்த்தக்கால் மூலவரிடம் சாத்தி எடுக்கப்பட்டு கிராம பிரதட்சணம் நடந்தது.


சிவகங்கை தேவஸ்தான அறங்காவலர் மதுராந்தகி நாச்சியார் தலைமையில் முகூர்த்தக்கால் நடப்பட்டது. மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் சரவண கணேசன், நிர்வாகிகள், பட்டாச்சார்யார்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்திரமேரூர்: பெருநகர், பிரம்ம புரீஸ்வரர் கோவிலில் தைப்பூச விழாவையொட்டி, 63 நாயன் மார்கள் உத்சவம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச திருவிழாவையொட்டி, திருக்கல்யாணம் உற்சவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், திரூர் அருகே திருநாவாயா நாவாமுகுந்தர் கோவில் மஹாமக ... மேலும்
 
temple news
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பெரியநாயகி அம்மன் கோயிலில் ... மேலும்
 
temple news
சிவகங்கை: காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர், சொர்ணவல்லி அம்பாள் கோயில் தைப்பூச விழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar