Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நுாற்றுக்கணக்கான கும்பாபிஷேகம் ... பொள்ளாச்சியில் பொன்னர், சங்கர் திருக்கல்யாண உற்சவம் பொள்ளாச்சியில் பொன்னர், சங்கர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா
எழுத்தின் அளவு:
அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா

பதிவு செய்த நாள்

05 டிச
2025
12:12

அன்னூர்: அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா நேற்றுமுன்தினம் நடந்தது.


திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, அன்னூர் மன்னீஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள முருகப்பெருமான் சன்னதியில் நேற்று முன்தினம் இரவு சிறப்பு வழிபாடு நடந்தது. முருகனுக்கு அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடந்தது. முருகன் வள்ளி தெய்வானை சமேதரராக கோவில் உட்பிரகாரத்தில் இருந்து தீப கம்பம் வரை உலா வந்து அருள் பாலித்தார். தீப கம்பத்தில் மகா தீபம் ஏற்றப்பட்டது. பக்தர்கள் முருகனுக்கு அரோகரா என பக்தி கோஷம் எழுப்பினர். இதை அடுத்து 20 அடி உயரத்திற்கு சொக்கப்பனை வைக்கப்பட்டு கொளுத்தப்பட்டது. வாண வேடிக்கை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். குன்னத்தூர் புதூர் வீரமாத்தி அம்மன் கோவிலில் மகா தீபம் ஏற்றப்பட்டு அம்மனுக்கு அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடந்தது. பிரசித்தி பெற்ற சாலையூர் பழனி ஆண்டவர் கோவிலில் புதிதாக நிறுவப்பட்ட தீப கம்பத்தில் மகாதீபம் ஏற்றப்பட்டது. பழனி ஆண்டவருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். கோவில்களில் கார்த்திகை ஜோதி ஏற்றி வழிபாடு சூலூர் சூலூர் வட்டார கோவில்களில், கார்த்திகை ஜோதி ஏற்றி, வழிபாடுகள் நடந்தன. சூலூர் வட்டாரத்தில் உள்ள முருகன் கோவில்களில், கார்த்திகை மாத கிருத்திகை அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. காங்கயம் பாளையம் சென்னி யாண்டவர் கோவில், வேல்முருகன் கோவில், பழனியாண்டவர் கோவில் மற்றும் சுற்றுவட்டார முருகன் கோவில்களில் கிருத்திகை அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. மேலும், கணியூர் பொன் காளியம்மன் கோவில், சின்னியம் பாளையம் பிளேக் மாரியம்மன் கோவில் உள்ளிட்ட கிராம கோவில்களில் கார்த்திகை ஜோதி ஏற்றப்பட்டது. பூஜிக்கப்பட்ட விளக்கு ஏற்றப்பட்டு கோவிலை சுற்றி எடுத்து வரப்பட்டு, தீபத்தூணில் வைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டன. பக்தர்கள் அரோஹரா கோஷம் எழுப்பி வழிபட்டனர். சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அம்மன் அருள்பாலித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவில் அய்யங்குளத்தில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் வரும் 8ம் தேதி நடைபெற உள்ள கும்பாபிஷேகத்தையொட்டி, ... மேலும்
 
temple news
பழநி; பழநி திருஆவினன்குடி கோயிலில் கும்பாபிஷேக பூஜைகள் துவங்கியது.பழநி முருகன் கோயில் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற நேற்றுமுன்தினம் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருக்கார்த்திகை உற்ஸவம் நடந்தது.இதனை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar