Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ‘சிம்மாசனம்’ என பெயர் வந்தது ... வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு;  திருப்பாவை பாடி வழிபட்ட மாணவர்கள் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் ...
முதல் பக்கம் » செய்திகள்
அதிகாலையில் மார்கழி ராமர் பஜனை: இளைஞர்கள் ஆர்வம்
எழுத்தின் அளவு:
அதிகாலையில் மார்கழி ராமர் பஜனை: இளைஞர்கள் ஆர்வம்

பதிவு செய்த நாள்

29 டிச
2025
12:12

கூடலூர்; கூடலூர் கிராமங்களில் அதிகாலை மார்கழி மாத ராமர் பஜனை ஊர்வலத்தில் இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர்.


கூடலூர், பந்தலூர் அரசு தேயிலை தோட்டங்கள் மற்றும் கிராம பகுதிகளில் வசிக்கும் தாயகம் திரும்பிய மக்கள், ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் ராமர் பஜனை நடத்தி வருகின்றனர். கிராமம் பகுதியில் உள்ள கோவில்களில் இருந்து இளைஞர்கள், பக்திமயத்துடன் மார்கழி 1ம் தேதி முதல் நாள்தோறும் அதிகாலை ராமர் விளக்கு ஏற்றி (கம்பம் விளக்கு) அதனை வீடுகளுக்கு எடுத்துச் சென்று பூஜை பெற்று சூரிய உதயத்துக்கு முன் கோவிலுக்கு வந்தடைகின்றனர். நடப்பாண்டு, பகுதிகளில்மார்கழி 1ம் தேதி ராமர் பஜனை துவங்கி நடைபெற்று வருகிறது. பஜனை ஊர்வலத்தில் இளைஞர்கள் டோலாக் இசையுடன் ராமரை போற்றி பாடல்களை பாடி வருகின்றனர். அதிகாலையில் செல்ல முடியாத சில பகுதிகளுக்கு, சூரிய உதயத்துக்கு பின் மாலை நேரத்தில் ராமர் விளக்கு எடுத்துச் சென்று பூஜை பெற்று வருகின்றனர். மார்கழி மாதம் இறுதி வரை நடைபெறும். தொடர்ந்து, தை 1ம் தேதி பொங்கல் விழாவை முன்னிட்டு நிறைவு விழா நடைபெறும். அதில், கம்பம் விளக்கு ஏற்றி செல்ல அலங்கரிக்கப்பட்ட தேரில் (சப்பரம்) ராமரை ஊர்வலமாக வீடுகளுக்கு எடுத்துச் சென்று வருவதுடன் விழா நிறைவு பெறுகிறது. மக்கள் கூறுகையில், கிராமப் பகுதி சேர்ந்த இளைஞர்கள் மார்கழி 1 தேதி முதல், அதிகாலை ராமர் பஜனை ஊர்வலத்தில் நடத்துவது தொடர்ச்சியாக செய்து வருகின்றனர். கிராம இளைஞர்கள், மார்கழி மாதம் முழுவதும் சைவ உணவு சாப்பிடுவதுடன், கோவில் அல்லது பொதுவான இடத்தில் தங்கி ஊர்வலம் பங்கேற்று வருகின்றனர். தை ஒன்றாம் தேதி விழா நடைபெறும் என்றார்.

 
மேலும் செய்திகள் »
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் இருந்து பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் வீதி பஜனை ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் பஜனை மடத்தில் மார்கழி வழிபாடு நடக்கிறது. இங்குள்ள ... மேலும்
 
temple news
பந்தலூர்; பந்தலூர் அருகே நெல்லியாலம் சுற்று வட்டார பகுதிகளில், கடும் குளிரிலும் இளைஞர்கள் ராமர் பஜனை ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர பந்தலில், சாணக்யா குரு சேனல் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகர் லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நடந்து வரும் மார்கழி மாத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar