Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உடுமலை சவுந்திரராஜ பெருமாள் ... கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் திருவிழா : ஏற்பாடுகள் தீவிரம் கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலில் தங்க தேரோட்டம் நடைபெறுவதில் சிக்கல்!
எழுத்தின் அளவு:
காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலில் தங்க தேரோட்டம் நடைபெறுவதில் சிக்கல்!

பதிவு செய்த நாள்

22 ஜன
2026
12:01

காஞ்சிபுரம்: ஹிந்து சமய அறநிலையத் துறையின் அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதால், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் ரதசப்தமியான, வரும் 25ம் தேதி தங்க தேரோட்டம் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. திட்டமிட்டபடி தங்க தேரோட்டம் நடத்த வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு, ஏகாம்பரநாதர் இறைப்பணி அறக்கட்டளை சார்பில், 36 கோடி ரூபாய் செலவில், புதிதாக தங்க தேர் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு டிச., 6ம் தேதி வெள்ளோட்டம் நடத்தப்பட்டு, கோவில் நிர்வாகத்திடம் தங்க தேர் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், ரதசப்தமியான வரும் 25ம் தேதி மாலை ஏகாம்பரநாதர் கோவிலில் தங்க தேரோட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நிர்வாக காரணங்களுக்காக தங்க தேரோட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக கோவில் தரப்பில் கூறப்பட்டது. வரும் 25ம் தேதி காஞ்சிபுரத்தில் நடைபெறும் தி.மு.க., கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார். இதனால்தான் தேரோட்டத்தை ரத்து செய்துள்ளனர். திட்டமிட்டபடி வரும் 25ம் தேதி தங்க தேரோட்டத்தை நடத்த வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர். 


இதுகுறித்து ஹிந்து சமய அறநிலையத்துறை காஞ்சிபுரம் இணை ஆணையர் குமரதுரை கூறுகையில், ‘‘தேரோட்டம் நடத்த கமிஷனர் அலுவலகத்திற்கு அனுமதி கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி வந்த பிறகுதான் உறுதியாக சொல்ல முடியும்,’’ என்றார். இதுகுறித்து ஏகாம்பரநாதர் இறைப்பணி அறக்கட்டளையினர் கூறியதாவது: தங்க தேரோட்டத்திற்கான ஏற்பாட்டை செய்யுமாறு நான்கு நாட்களுக்கு முன், வாய்மொழியாக கோவில் நிர்வாகத்தினர் உத்தரவு வழங்கினர். இந்நிலையில், நேற்று மதியம் திடீரென நிர்வாக காரணங்களுக்காக ஒத்தி வைக்கப்படுவதாக தெரிவித்தனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று சதுர்த்தி விரதம். முகுந்த, வர சதுர்த்தி. தை அமாவாசைக்கு பின் வரும் சதுர்த்தி வரசதுர்த்தி ஆகும். ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; வெள்ளியங்கிரி மலை ஏற, பிப்., 1ம் தேதி முதல் பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்படும் என, ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்திற்கு கட்டுப்பாட்டில் உள்ள வடக்கு கிரி வீதியில் எழுந்தருளியுள்ள ... மேலும்
 
temple news
அயோத்தி (உ.பி.), குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, வரும் மார்ச் 19 அன்று அயோத்தி ராமர் கோயில் வளாகத்தில் ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி ஐ.டி.ஐ., எதிரில் மரக்காயர்பட்டணம் பகுதியில் சீதாராம சுவாமிகள் ஞான யோகானந்த ஆசிரமம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar