Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தீவினைகளை அழிக்கும் ஜுவாலாமுகி ... ராமரும் – ஹனுமனும் சந்தித்த இடம் ராமரும் – ஹனுமனும் சந்தித்த இடம்
முதல் பக்கம் » துளிகள்
பாம்புகளின் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கவுரிபிதனுார் விதுராஷ்வதா கோவில்
எழுத்தின் அளவு:
பாம்புகளின் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கவுரிபிதனுார் விதுராஷ்வதா கோவில்

பதிவு செய்த நாள்

03 பிப்
2026
02:02

சிக்கபல்லாபூர் மாவட்டம், கவுரிபிதனுார் தாலுகா ஹலகனஹள்ளி கிராமத்தில், பிரசித்தி பெற்ற விதுராஷ்வதா கோவில் உள்ளது. இக்கோவில் பாம்புகளின் கடவுளான நாகேந்திரா சுவாமிக்கு அர்ப்பணிக்கப்பட்டு உள்ளது. கடந்த 11ம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோவில், பழமை மாறாமல் இன்னும் அப்படியே உள்ளது. பக்தர்கள் கோவில் வளாகத்திற்குள் நுழைந்ததும், பாம்பு உருவங்களை கொண்ட ஏராளமான சிலைகளை காணலாம். ஒவ்வொரு சிலையும் வெவ்வேறு வடிவங்களை கொண்டது.


அனைத்து வகையான நாகதோஷங்களால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து, நாகர் சிலைகளை தரிசித்தால், தோஷங்கள் நீங்கும் என்ற நம்பிக்கை உள்ளது. கோவில் கருவறையிலும் நாக சிலையும், சிவலிங்கமும் உள்ளது. இந்த கோவிலுக்கும், பல புராண கதைகளுக்கும் இடையில் நேரடி தொடர்பு இருக்கிறது. கோவிலில் நுழைந்ததும் முதலில் நாக சிலைகளை வழிபட்டு, பூக்கள், துாப குச்சிகள், பழங்களை காணிக்கையாக செலுத்தலாம். பாலையும் காணிக்கையாக கொடுக்கலாம்.


கோவிலில் நடக்கும் ஆரத்தியில் பங்கேற்பது பக்தர்களுக்கு மிகவும் நல்லது. கோவிலின் கட்டடக் கலை மிகவும் சிக்கலானது. ஆனாலும், அழகிய வேலைப்பாடுகளை உள்ளடக்கியது. ஆண்டிற்கு ஒரு முறை இங்கு நடக்கும் விதுராஷ்வதா திருவிழாவும், ரத உத்சவமும் மிகவும் பிரசித்தி பெற்றது. கோவிலின் அருகே உத்தர பினாகினி ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றில் குளித்துவிட்டு, நாக சிலைகளை தரிசித்தால் நல்லது நடக்கும் என்று நம்பப்படுகிறது. தினமும் காலை 7:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை கோவில் நடை திறந்து இருக்கும்.


எப்படி செல்வது: 

பெங்களூரில் இருந்து 92 கி.மீ., துாரத்தில் கோவில் உள்ளது. மெஜஸ்டிக்கில் இருந்து கவுரிபிதனுாருக்கு அடிக்கடி கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்கள் இயக்கப்படுகின்றன.

ஆந்திராவின் ஹிந்துபூர் செல்லும் பஸ்சில் சென்றால், ஹலகனஹள்ளி கிராமத்தில் இறங்கி கொள்ளலாம். பெங்களூரில் இருந்து கவுரிபிதனுாருக்கு மெமு ரயில் சேவையும் உள்ளது. 

 
மேலும் துளிகள் »
temple news
நம் அடையாளமான திருநீறு, திருமண் அணிய கூச்சப்படக் கூடாது. தினமும் கோயில் வழிபாடு செய்யுங்கள்.  ... மேலும்
 
temple news
கர்நாடகாவின் முக்கிய நகரங்களில் ஒன்று துமகூரு. இது, ஆன்மிகம் மற்றும் பாரம்பரியம் இரண்டும் கலந்த ... மேலும்
 
temple news
விஜயநகரா மாவட்டம், ஹம்பியில் உள்ள விருபாக் ஷா கோவில் மிகவும் பிரபலமான தலம். இந்த கோவிலில் இருந்து 2 ... மேலும்
 
temple news
மைசூரு என்றவுடன் சாமுண்டி மலை மற்றும் அங்குள்ள சாமுண்டீஸ்வரி கோவிலும், நம் கண் முன்னே தோன்றும். இந்த ... மேலும்
 
temple news
முருகப் பெருமானுக்குரிய சிறப்பான விரதங்களில் ஒன்று சஷ்டி. சஷ்டி விரதம் இருந்து வழிபட குறைகள் யாவும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar