Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மொண்டிபாளையம் பெருமாள் கோவிலில் ... ராகல்பாவி கிராமத்தில் பாரம்பரிய விழா கோலமிட்டு சிறப்பு வழிபாடு ராகல்பாவி கிராமத்தில் பாரம்பரிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆனைமலை மாசாணியம்மன் கோவில் குண்டம் விழா; நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
எழுத்தின் அளவு:
ஆனைமலை மாசாணியம்மன் கோவில் குண்டம் விழா; நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

பதிவு செய்த நாள்

04 பிப்
2026
10:02

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, ஆனைமலை மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள், பூக்குண்டம் இறங்கி அம்மனை வழிபட்டனர்.


கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகேயுள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், குண்டம் திருவிழா கடந்த, 18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த, 31ம் தேதி மயான பூஜை நடந்தது. நேற்று முன்தினம் காலை 10:30 மணிக்கு குண்டம் கட்டுதல், மாலையில் சித்திர தேர் வடம் பிடிக்கப்பட்டது. முக்கிய வீதிகள் வழியாக தேர் வீதி உலா சென்று, குண்டம் அருகில் நிறுத்தப்பட்டது. இரவு 10:30 மணிக்கு குண்டம் பூ வளர்த்தல் துவங்கியது. இரவு முழுவதும் குண்டத்தில் பூ வளர்க்கப்பட்டு, அதிகாலையில் குண்டம் முழுவதும் பரப்பப்பட்டது. விரதம் இருந்த பக்தர்கள், காப்பு கட்டி, ஆற்றில் நீராடி அம்மனை வழிபட்டு குண்டம் இறங்கும் இடத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். தலைமை முறைதாரர் மனோகரன், அம்மன் அருளாளி குப்புசாமி, மயான அருளாளி அருண் ஆகியோர் கோவிலிலிருந்து, அம்மனின் சூலத்துடன் வலம் வந்து குண்டம் இறங்கும் இடத்திற்கு வந்தனர். காலை 8:20 மணிக்கு குண்டம் இறங்குதல் துவங்கியது. முறைதாரர் மற்றும் அருளாளி குண்டத்தில் பூச்செண்டு உருட்டி இறங்கினர். அவர்களை தொடர்ந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘மாசாணி தாயே’ என கோஷமிட்டபடி குண்டத்தில் இறங்கி வேண்டுதல் மற்றும் நேர்த்திக்கடனை செலுத்தினர். விரதம் இருந்த போலீசார் உள்ளிட்டோரும் குண்டம் இறங்கினர். குண்டம் இறங்குவதை காண திரண்ட பக்தர்களும், ‘மாசாணி தாயே... அருள் புரிவாய்,’ என கோஷமிட்டனர். விழாவில், தக்கார் ராஜ்குமார், முன்னாள் அமைச்சர் வேலுமணி, எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன், துாய்மை பணியாளர்கள் நல வாரிய தலைவர் ஆறுச்சாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் வரும் மார்ச் 6ம் தேதி மகா யாகம் ... மேலும்
 
temple news
அரியலூர்; ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஜப்பானை சேர்ந்த மிகவும் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தை பவுர்ணமியையொட்டி மூன்று நாட்கள் நடந்த ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் பாரதப்புழா நதிக்கரையில் நடக்கும் மஹாமக கும்பமேளா, ... மேலும்
 
temple news
வடலூர்; வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில், திருஅறை தரிசனம் நடந்தது.கடலூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar