Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பெரியகுளம் லெட்சுமி நாராயணப் ... சபரிமலையில் பங்குனி உத்திர திருவிழா :பம்பையில் ஆராட்டுடன் நிறைவு சபரிமலையில் பங்குனி உத்திர திருவிழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கமுதி முத்துமாரியம்மன் கோயிலில் சேத்தாண்டி வேடமணிந்து வினோத நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
கமுதி முத்துமாரியம்மன் கோயிலில் சேத்தாண்டி வேடமணிந்து வினோத நேர்த்திக்கடன்

பதிவு செய்த நாள்

01 ஏப்
2026
04:04

கமுதி: கமுதி முத்துமாரியம்மன் கோயில் பொங்கல் விழாவை முன்னிட்டு பக்தர்கள் வினோதமான முறையில் சேத்தாண்டி வேடம் அணிந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.


கமுதி முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் துவங்கியது.பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து வந்தனர்.தினமும் மூலவரான முத்துமாரியம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்று குதிரை, யானை, ரிஷபம், அன்னப்பறவை, வெள்ளிக் குதிரை உள்ளிட்ட வாகனங்களில் வீதிஉலா நடந்தது. பொங்கல் விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பக்தர்கள் ஊருணி கரையிலிருந்து உடல் முழுவதும் சேறு பூசி வேப்பிலையை கையில் ஏந்தி வினோதமான முறையில் சேத்தாண்டி வேடம் அணிந்து முக்கிய வீதிகளில் ஊர்வலமாக கோயிலுக்கு சென்றனர். பக்தர் ஹேமந்திரபாலன் கூறியதாவது, முத்துமாரியம்மன் பங்குனி பொங்கல் விழாவில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக விரதம் இருந்து சேத்தாண்டி வேடம் அணிந்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகிறேன்.இதன் மூலம் உடல் வெப்பம்,அம்மை நோய் உட்பட பல்வேறு நோயிலிருந்து பாதுகாப்பு கிடைக்கிறது.குடும்பத்தின் மகிழ்ச்சி ஏற்படும்.இதனால் தொடர்ந்து குடும்பத்துடன் நேர்த்திக்கடன் செலுத்தி வருகிறேன்.இதேபோல் 500க்கும் மேற்பட்டோர் சேத்தாண்டி வேடம் அணிந்து வந்தனர் என்றார்.மாலை அக்னிசட்டி,வேல் குத்தி ஊர்வலமாக வந்து கோயில் முன்பு பூக்குழி இறங்கினர். விழாவில் மதுரை,சென்னை, காரைக்குடி உட்பட பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் பங்குனி உத்திர உற்ஸவம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், பங்குனி மாத பவுர்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்று ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்: பங்குனி உத்திர திருவிழாவை யொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி ... மேலும்
 
temple news
குஜிலியம்பாறை: ராமகிரி கல்யாண நரசிங்க பெருமாள், ஸ்ரீதேவி பூதேவி கோயிலில் பங்குனி உற்சவ தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவம் பத்தாம் திருநாளில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar