மணக்கோலத்தில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர்: பங்குனி விழாவில் திருக்கல்யாணம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஏப் 2026 01:04
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர்: பங்குனி விழாவில் திருக்கல்யாண வைபவம் நடந்தது. இதில், மணக்கோலத்தில் கற்பகாம்பாள் - கபாலீஸ்வரர் அருள்பாலித்தனர்.
சென்னையில் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி பெருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏப்.1ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த விழாவில் தினமும் சுவாமி பல்வேறு வாகனத்தில் உலா வந்து அருள்பாலித்து வருகிறார். விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் கடந்த 25ம் தேதி நடைபெற்றது. 26ம் தேதி அறுபத்து மூவர் திருவிழா உற்சாகத்துடன் நடைபெற்றது. இந்நிலையில், பங்குனி பெருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான திருக்கல்யாண உற்சவம் நேற்று இரவு நடைபெற்றது. கபாலீஸ்வரர் - கற்பகாம்பாள் திருக்கல்யாண வைபவத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பக்தி பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.