Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கீழக்கரை அருகே தட்டார் மடத்தில் ... சூலூர் கோவில்களில் பூச்சாட்டு திருவிழா ; பக்தர்கள் பரவசம் சூலூர் கோவில்களில் பூச்சாட்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெரிய வியாழன் தின ஆசரிப்பு: பக்தி பரவசத்துடன் நடைபெற்ற கால் கழுவும் சடங்கு
எழுத்தின் அளவு:
பெரிய வியாழன் தின ஆசரிப்பு: பக்தி பரவசத்துடன் நடைபெற்ற கால் கழுவும் சடங்கு

பதிவு செய்த நாள்

02 ஏப்
2026
04:04

பாலக்காடு: புனித வாரத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான பெசஹா திருநாளை (பெரிய வியாழன்) முன்னிட்டு, பாலக்காடு மாவட்டம் ஸ்ரீகிருஷ்ணபுரம் செயின்ட் ஜோசப் தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனைகளும், கால் கழுவும் சடங்கும் பக்தி உணர்வுடன் நடைபெற்றது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பாக தனது சீடர்களுடன் அருந்திய இறுதி விருந்தை நினைவு கூரும் வகையில் இந்த நாள் ஆசரிக்கப்படுகிறது. இதையொட்டி தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு புனித திருப்பலிக்கு இடவகை விகார் பாதிரியார் வின்சென்ட் ஒல்லூக்காரன் தலைமை தாங்கினார்.


மனிதாபிமானத்தையும் பணிவையும் போதிக்கும் வகையில், இயேசு தனது சீடர்களின் பாதங்களைக் கழுவியதை நினைவுகூர்ந்து, தேவாலயத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பக்தர்களின் பாதங்களை பாதிரியார் வின்சென்ட் ஒல்லூக்காரன் கழுவி முத்தமிட்டார். இதில் ஏராளமான கிறிஸ்துவர்கள் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்தனர். தேவாலய நிகழ்வுகளைத் தொடர்ந்து, கிறிஸ்துவர்களின் வீடுகளில் பெசஹா அப்பம் முறிக்கும் பாரம்பரிய சடங்குகளும் நடைபெற்றன. புனித வாரத்தின் தொடர்ச்சியாக நாளை இயேசுவின் சிலுவைப்பாடுகளை நினைவுகூரும் துக்க வெள்ளி ஆசரிக்கப்படுகிறது. வரும் ஞாயிற்றுக்கிழமை இயேசு உயிர்த்தெழுந்த திருநாளான ஈஸ்டர் (உயிர்ப்புப் பெருவிழா) கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் பங்குனி உத்திர உற்ஸவம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், பங்குனி மாத பவுர்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்று ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்: பங்குனி உத்திர திருவிழாவை யொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி ... மேலும்
 
temple news
குஜிலியம்பாறை: ராமகிரி கல்யாண நரசிங்க பெருமாள், ஸ்ரீதேவி பூதேவி கோயிலில் பங்குனி உற்சவ தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவம் பத்தாம் திருநாளில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar