திருத்தணி கோதண்ட ராம சுவாமி கோவிலில் சீதா – ராமர் திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஏப் 2026 08:04
திருத்தணி: திருத்தணி கோதண்ட ராம சுவாமி கோவிலில் இன்று ராமநவமியை, ஒட்டி சீதா – ராமர் திருக்கல்யாணம் விமரிசையாக நடந்தது.
திருத்தணி கோதண்டராம சுவாமி கோவிலில் ராமநவமி விழா கடந்த ஒரு வாரமாக நடந்து வருகிறது. தினமும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடக்கிறது. அதைத்தொடர்ந்து கோவில் வளாகத்தில், இன்று காலை சீதா – ராமர் திருக்கல்யாணம் விமரிசையாக நடந்தது. முன்னதாக சிறப்பு ஹோமம் மற்றும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று சுவாமியை தரிசித்தனர். இரவு உற்சவர்கள் ராமர் – சீதாதேவி சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.