விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நேற்று காலை ஆழத்து விநாயகர், சுவாமி, அம்பாள், சண்முக சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. பக்தர்கள் புத்தாடை அணிந்து வந்து, விளக்கேற்றி, நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனர். மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவிலில் சித்தி விநாயகர், சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், வெள்ளி கவசம் சாற்றி தீபாராதனை நடந்தது. மாலையில் சுவாமிகள் சந்தனக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். பக்தர்கள் வெற்றிலையில் விளக்கேற்றியும், முடி காணிக்கை செலுத்தியும் வழிபட்டனர். இதேபோல், தென்கோட்டைவீதி மோகாம்பரி அம்மன், சாந்த ஆஞ்சநேயர், கருவேப்பிலங்குறிச்சி சாலையில் உள்ள வேடப்பர், ஏகநாயகர், கண்டியங்குப்பம் வெண்மலையப்பர், ஆஞ்சநேயர், தே.கோபுராபுரம் ஆதிசக்தீஸ்வரர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.