* எதற்கும் உணர்ச்சி வசப்படாதே. மனதை உன் வசப்படுத்து. * மனதில் உறுதி இருந்தால் லட்சியத்தை அடையலாம். * நல்ல குணம் கொண்டவர் வாழும் வீடு கோயிலுக்கு சமம். * சத்திய வழியில் நடப்பவர் வாழ்வில் அமைதி தவழும். * ஏற்றுக் கொண்ட கொள்கைக்காக உயிரைக் கூட தியாகம் செய். * கருணையே உயர்ந்த குணம்; குற்றத்தை மன்னிப்பதே மகத்தான செயல். * மனதில் அமைதி இருந்தால் வெற்றி உன்னைத் தேடி வரும். * பணிவும் எளிமையும் இருந்தால் தெய்வம் உன்னை தேடி வரும். * நல்லவர்களிடம் பழகு; நல்ல நுால்களை படி; பிறவிக்கடலை தாண்டலாம். * எந்த நிலையிலும் கடவுளை குறை சொல்லாதே. * எது நல்லது, எது கெட்டது என்பதை அறிந்தவர் கடவுள் ஒருவரே. * பெயர், புகழ், பணம் எனும் ஆசைகளை விட்டால் அன்பை உணரலாம். * மனதின் பக்குவத்திற்கு ஏற்ப கடவுளின் அருள் கிடைக்கும். * இரக்கம், அடக்கம், வாய்மை, நேர்மை, துாய்மை ஆகியவையே வாழ்வின் ஆதார குணங்கள்.