மதுரை மன்னர் மலையத்துவஜ பாண்டியன், காஞ்சன மாலை தம்பதி குழந்தைப் பேறுக்காக புத்திர காமேஷ்டி யாகம் செய்தனர். யாகத் தீயில் பார்வதி குழந்தையாக அவதரித்தாள். தடாதகை என பெயரிட்டு வளர்த்தனர். மகளுக்கு இளவரசி பட்டம் சூட்டி போர் பயிற்சி அளித்தனர். அவள் எட்டுத் திசை காவலர்களையும் போரில் வென்றாள். இறுதியாக, சிவலோகமான கைலாயத்தின் மீது போர் தொடுத்தாள். அங்கு சிவபெருமானின் அழகைப் பார்த்ததும் நாணம் அடைந்தாள். அப்போது ‘உன் மணாளன் இவரே’ என அசரீரி ஒலித்தது. அதன்படி சிவபெருமானுடன் மதுரையில் திருமணம் நடந்தது. இவர்களே மீனாட்சி சுந்தரேஸ்வரராக மதுரையில் கோயில் கொண்டு மதுரை ஆட்சி செய்கின்றனர். ஏப்.28, 2026ல் நடக்க உள்ள மீனாட்சி திருக்கல்யாணத்தை ‘இது நம்ம வீட்டு கல்யாணம்’ என அனைவரும் கொண்டாட இருக்கின்றனர்.