* கடவுளை சரணடைவதே கல்வியின் பயன். * உழைத்த பணத்தில் தர்மம் செய். நல்வாழ்வு அமையும். * பிறவிக்குணம் என்பது ஒருவரை விட்டு எப்போதும் போகாது. * பணிவு கொண்டவனுக்கு இயற்கை துணைசெய்யும். * பேராசையை கைவிடு. இல்லாவிட்டால் ஆபத்து நேரும். * தர்மம் உள்ள இடத்தில் கடவுள் குடியிருக்கிறார். * தர்மத்தை நம்புபவனுக்கு வாழ்வில் பிடிப்பு ஏற்படும். * ஒழுக்கமுடன் வாழ கற்றுக் கொள்; நற்கதி அடைவாய். * வீண்பேச்சு கூடாது. எப்போதும் கடவுளின் திருநாமத்தைச் சொல். * கடவுளுக்கு நைவேத்யம் செய்த பிறகே சாப்பிட வேண்டும். * புத்தியால் மனதை அடக்கு; உனக்கு வெற்றி உறுதி. * கோபத்தை கைவிடு; துன்பம் உன்னை நெருங்காது. * தர்மம் வகுத்த வழியில் பணம் தேடு; மகிழ்ச்சியாக வாழலாம். * வேதம் விதித்த வழியில் வாழ்வு நடத்து; நிம்மதி காண்பாய். * நல்லவர்கள் இருக்கும் வரையில் உலகில் மழை பெய்யும்.