பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் முகூர்த்தக்கால் நடும் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஏப் 2026 05:04
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஏப்., 26 சித்திரை திருவிழா காப்பு கட்டுதல் நடக்கும் நிலையில், இன்று முகூர்த்தக்கால் நடும் விழா நடந்தது.
மதுரை அழகர் கோயிலை போன்று சித்ரா பவுர்ணமி அன்று கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு பரமக்குடியில் வருடம் தோறும் நடக்கிறது. இன்று அமாவாசை நாளில் முகூர்த்தக்கால் நடப்பட்டது. தொடர்ந்து ஏப்., 26 காப்பு கட்டப்பட்டு, ஏப்., 30 அன்று காலை கும்ப திருமஞ்சனம் நடக்கிறது. மே 1 அதிகாலை 4:00 மணிக்கு பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்துடன் பூ பல்லக்கில் வைகையில் இறங்குகிறார். அன்று காலை 9:00 மணிக்கு குதிரை வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலிக்க உள்ளார். ஏற்பாடுகளை தேவஸ்தான டிரஸ்டிகள் செய்து வருகின்றனர்.