* ஓடி சம்பாதித்தாலும் பணம் நம்முடன் வராது. எனவே தர்மம் செய். * குழந்தையை போல் கபடம் இல்லாமல் வாழ்ந்திடு. * கடவுளை நினைத்து செய்யும் எந்த செயலுக்கும் பலன் உண்டு. * முன்னோர் காரியங்களில் அக்கறையும், தெய்வ செயல்களுக்கு பக்தியும் வேண்டும். * கடவுளின் குணங்களை கேட்பதை உன் லட்சியமாக கொள். * முதலில் வெளியில் அடக்கம் ஏற்பட்டால் தான் மனதில் அடக்கம் ஏற்படும். * வாழ்க்கை என்பது லாப, நஷ்ட கணக்கு பார்க்கும் வியாபாரம் அல்ல. * மற்றவர் துன்பத்தை போக்க உன்னால் ஆனதை செய். * மறுஉலகிலும் உற்ற துணை கடவுளின் திருநாமம் ஒன்றே. * ஒழுக்கமும், மனக்கட்டுப்பாடும் மன அழுக்கை போக்கும். * உடல் உழைப்பால் பிறருக்கு சேவை செய்வது பெரும் புண்ணியம். * பசியை தீர்க்கத்தான் உணவே தவிர, ருசியைத் தீர்ப்பதற்கு அல்ல. * எடுத்துச் சொல்வதை விட எடுத்துக்காட்டாக இரு. * மனம் எதை இடைவிடாமல் நினைக்கிறதோ அதுவாகவே மாறும். * எந்த விஷயத்திலும் அலட்சிய புத்தியுடன் செயல்படாதே.