ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம் கரையில் தீ புகை : பக்தர்கள் பீதி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஏப் 2026 05:04
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கரையில் பைப்பர் சீட்களை போதை ஆசாமிகள் தீயிட்டதில், தீ பரவி புகைமண்டலமாக மாறியது. இதனால் நீராடிய பக்தர்கள் பதற்றமடைந்னர்.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கரையில் நகரில் நகரில் சேகரித்த குப்பைகளை கொட்டி குவித்துள்ளனர். புனித தீர்த்த கடற்கரையில் சுகாதார கேடாய் கிடக்கும் குப்பைகளை அகற்றிட ஹிந்து அமைப்பினர் பலமுறை வலியுறுத்தியும் நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. மேலும் இரவில் அக்னி தீர்த்த கடற்கரை அருகில் கள்ளத்தனமாக மது பாட்டில் விற்பதால், குடிமகன்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். இந்நிலையில் அக்னி தீர்த்த கரையில் கிடந்த கழிவு பைப்பர் சீட், பிளாஸ்டிக் கழிவுகளை போதை ஆசாமிகள் தீயிட்டு உள்ளனர். தீ மளமளவென பரவி அக்னி தீர்த்த கரை முழுவதும் கரும்புகை மண்டலமாக மாறியது. அப்போது புனித நீராடிய பக்தர்கள் பீதியடைந்து, அவசரமாக கரை ஏறி கோயிலுக்குள் சென்றனர். இச்சம்பவத்தில் பக்தர்கள் யாருக்கும் பாதிப்பு இல்லை. புனித தீர்த்த கரையில் சுகாதாரம் பராமரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த தீயை நகராட்சி ஊழியர்கள், வியாபாரிகள் சிலர் தண்ணீர் ஊற்றி அணைத்தனர். இதுகுறித்து கோயில் போலீசார் விசாரித்தனர்.