Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news  சித்திரை திருவிழா: ... கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் பூசாரி கையால் தாலி கட்டி கொண்ட திருநங்கைகள் கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செஞ்சி கோட்டை கமலக்கண்ணியம்மன் தேர் திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்தனர்
எழுத்தின் அளவு:
செஞ்சி கோட்டை கமலக்கண்ணியம்மன் தேர் திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்தனர்

பதிவு செய்த நாள்

28 ஏப்
2026
06:04

செஞ்சி: செஞ்சி கோட்டை கமலக்கண்ணியம்மன் கோவிலில் நடந்த தேர் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுந்தனர்.


செஞ்சி ராஜகிரி கோட்டை மலை மீது ஆயிரம் ஆண்டுகள் பழமையான கமலக்கண்ணியம்மன் கோவில் உள்ளது.  இந்த கோவிலில் ஆண்டு தோறும் பாரம்பரிய முறைப்படி தேர் திருவிழா நடத்தி வருகின்றனர். இந்த ஆண்டு திருவிழா கடந்த 20 ம் தேதி பீரங்கிமேடு மகாமாரியம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையடுத்து 9 நாட்கள் பூங்கரக ஊர்வலம், இரவு சாமி வீதி உலா, கலை நிகழ்ச்சிகள், வான வேடிக்கை, அன்னதானம் ஆகியன நடந்து வந்தது.  இன்று தேர் திருவிழாவை முன்னிட்டு கமலக்கண்ணியம்மன், ராஜகாளியம்மன், மகா மாரியம்மன், கோட்டை வீரப்பனுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரம் செய்தனர். ராஜகாளியம்மன், கமலக்கண்ணியம்மன் கோவிலில் ஊரணி பொங்கல் வைத்தனர். கமலக்கண்ணியம்மனுக்கு கோட்டை வளாகத்திலும், புதுச்சேரி வாயில் அருகிலும் பாரம்பரிய முறைப்படி எருமை கிடா பலியிட்டனர். மாலை 3 மணிக்கு பீரங்கி மேடு மந்தை வெளியில் இருந்து தேர்பவனி புறப்பட்டது. திருவள்ளுவர் தெரு, திருவண்ணாமலை சாலை, விழுப்புரம் ரோடு, சத்திர தெரு வழியாக தேர் பவனி நடந்தது. சிவவாத்தியம், சென்டைமேளம், பம்பை உடுக்கையுடன் நடந்த தேர்பவனியில் ஆயிரக்கணக்காணவர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்தனர். ஏராளமானவர்கள் நாணயங்கள், காய் கனிகள், தானியங்களை வீசி நேர்த்தி கடன் செலுத்தினர். விழா ஏற்பாடுகளை அரங்காவலர் அரங்க ஏழுமலை மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர். செஞ்சி டி.எஸ்.பி., ரமேஷ்ராஜ் தலைமையில், இன்ஸ்பெக்டர் அண்ணாதுறை உட்பட 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவகாசி: சிவகாசி பத்ரகாளியம்மன் கோயில் சித்திரைப் பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை வைகை ஆற்றில் இறங்க அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், பக்தர்களின் கோவிந்தா கோஷம் விண்னை ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், மாசி வீதிகளில் கோலாகலமாக துவங்கியது. ... மேலும்
 
temple news
வாரணாசி: பிரதமர் மோடி வாரணாசியில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை மாத வளர்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே உள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar