Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோடை வெப்பத்தை தணிக்க உற்சாக ... செஞ்சி கோட்டை கமலக்கண்ணியம்மன் தேர் திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்தனர் செஞ்சி கோட்டை கமலக்கண்ணியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
 சித்திரை திருவிழா: ராமநாதபுரத்தில் மீனாட்சிஅம்மனுக்கு திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
 சித்திரை திருவிழா: ராமநாதபுரத்தில் மீனாட்சிஅம்மனுக்கு திருக்கல்யாணம்

பதிவு செய்த நாள்

28 ஏப்
2026
05:04

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் உள்ள மீனாட்சி சமேத சொக்கநாதர் சுவாமி கோயிலில்  சித்திரை திருவிழாவில் இன்று திருக்கல்யாணம் நடந்தது.  


ராமநாதபுரம் சமஸ்தானத்தை சேர்ந்த  மீனாட்சி சமேத  சொக்கநாதர் சுவாமி கோயில் மிகவும் பழைமையானது. இவ்வாண்டு சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஏப்.,19 ல்  கொடியேற்றம் நடந்தது.  முக்கிய  நிகழ்ச்சியாக  ஏப்.,26ல்   மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிேஷகம் நடந்தது.  ஏப்.,27ல்  திக் விஜயம் அம்மன் உலா நடந்தது. இன்று (  ஏப்.,28 ல்) மீனாட்சி சொக்கநாதர் சுவாமிக்கு காலை 11:00மணிக்கு திருக்கல்யாணம் நடந்தது. மணக்கோலத்தில் சுவாமி பிரியாவிடையுடனும், அம்மன் அருள்பாலித்தனர்.  அன்னதானம் வழங்கப்பட்டது.  நாளை ( ஏப்.,29 ல்)  பிரதோஷ வழிபாடும்,  நாளை (ஏப்.,30 ல்) தீர்த்தவாரி, பஞ்ச மூர்த்திகளுடன் சுவாமி திருவீதி உலாவுடன் சித்திரை திருவிழா நிறைவடைகிறது.  


இதே போன்று பட்டணம்காத்தான் சேதுபதி நகரில் கலெக்டர் அலுவலக வளாகம் நீச்சல் குளம் அருகேயுள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் அம்மன், சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. உச்சிபுளி அண்ணாமலையார் கோயில்  திருக்கல்யாணம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


*சாயல்குடி கைலாசநாதர் சமேத மீனாட்சி அம்மன் கோயிலில் இன்று திருக்கல்யாண உற்ஸவம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மூலவர்களுக்கு நாள் தோறும் சிறப்பு அபிஷேகம் அலங்கார தீபாராதனைகள் நடந்தது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. திருமண பத்திரிக்கை அச்சடித்து நகர் பகுதி முழுவதும் விழாக் குழுவினர் வழங்கினர்.இன்று காலை 9:30 மணிக்கு மீனாட்சி அம்மன் மற்றும் கைலாசநாதருக்கு திருக்கல்யாண உற்ஸவம் நடந்தது. கோயில் அர்ச்சகர் மங்கள நாண் மீனாட்சி அம்மன் கழுத்தில் பூட்டினார். பக்தர்களின் மீது அட்சதை துாவப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கைலாசநாதர் திருப்பணி கமிட்டியினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவகாசி: சிவகாசி பத்ரகாளியம்மன் கோயில் சித்திரைப் பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை வைகை ஆற்றில் இறங்க அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், பக்தர்களின் கோவிந்தா கோஷம் விண்னை ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், மாசி வீதிகளில் கோலாகலமாக துவங்கியது. ... மேலும்
 
temple news
வாரணாசி: பிரதமர் மோடி வாரணாசியில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை மாத வளர்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே உள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar