கோவை; சிறுமுகை வ உ சி நகரில் உள்ள ராஜகணபதி கோவிலில் லிங்கேஸ்வரர் விஷ்ணு துர்க்கை அம்மன் பாலமுருகன் ஆகிய சுவாமிகளின் சன்னதிகள் உள்ளன கோவில் திருப்பணி நடைபெற்று மகா கும்பாபிஷேகம் நடந்தது. 28 தொடங்கிய விழாவானது நான்காம் கால யாக பூஜை நவக்கிரக ஹோமம் மகாபூர்ணாகுதி நிறைவு பெற்று யாத்ரா தானம் கலச புறப்பாடு முடிந்து கோபுர கலசங்களுக்கு வேத கோஷங்கள் முழங்க புனித நீரூற்றினர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.