Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்புவனத்தில் திரௌபதி - அர்ஜூனன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதியில் திருடப்பட்ட ஆஞ்சநேய சுவாமி சிலை; 14 மணி நேரத்தில் மீட்பு
எழுத்தின் அளவு:
திருப்பதியில் திருடப்பட்ட ஆஞ்சநேய சுவாமி சிலை; 14 மணி நேரத்தில் மீட்பு

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2026
06:07

திருப்பதி;  திருமலை முதல் மலைப்பாதையில் உள்ள 7-வது மைல் கல் அருகே அமைந்திருந்த பிரசன்ன ஆஞ்சநேய சுவாமி கோயில் சிலை நேற்று திருடப்பட்டதைத் தொடர்ந்து, மாவட்ட காவல்துறையுடன் இணைந்து திருப்பதி தேவஸ்தான கண்காணிப்புப் பிரிவு விரைவாகச் செயல்பட்டு, குற்றவாளி அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டதோடு, சிலையும் 14 மணி நேரத்திற்குள் மீட்கப்பட்டது.


இன்று காலை 8:30 மணி முதல் 9:00 மணிக்குள், திருப்பதி தேவஸ்தான ஆகம மரபுகளின்படி புண்யாஹவாசனம் (சுத்திகரிப்புச் சடங்கு) மற்றும் ஜல சம்ப்ரோக்ஷணம் (புனித நீர் தெளித்தல்) போன்ற சடங்குகள் செய்யப்பட்டு, அதே இடத்தில் சிலை மீண்டும் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக தேவஸ்தான நிர்வாக அதிகாரி வெங்கய்ய சௌத்ரி தெரிவித்தார்.


இது குறித்து அவர் கூறியதாவது; நவீன தொழில்நுட்பம், சிசிடிவி கண்காணிப்பு, கண்காணிப்புப் பிரிவு ஊழியர்களின் விழிப்புணர்வு மற்றும் மாவட்ட காவல்துறையுடனான ஒருங்கிணைப்பு ஆகியவற்றின் மூலமே குறுகிய காலத்தில் சிலையை மீட்கவும் குற்றவாளியைக் கண்டறியவும் முடிந்ததாக கூடுதல் நிர்வாக அதிகாரி குறிப்பிட்டார். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க, மலைப்பாதையில் உள்ள சிறிய கோயில்கள் மற்றும் சிலைகளைச் சுற்றிப் பாதுகாப்புத் தடுப்புகள் அமைக்கப்படும். உயர்தர சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என்றும் அவர் கூறினார். 


பல தசாப்தங்களாகத் திருமலை மலைப்பாதைகளில் பக்தர்களால் நிறுவப்பட்ட ஏராளமான தெய்வச் சிலைகளின் புனிதத்தன்மையை மதிக்குமாறு பக்தர்களிடம் அவர் கேட்டுக்கொண்டார். ஏதேனும் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளைக் கவனித்தால், உடனடியாக தேவஸ்தான கட்டணமில்லா தொலைபேசி எண் அல்லது கண்காணிப்புப் பிரிவு அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்குமாறும் பக்தர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். எந்தவொரு அசம்பாவித சம்பவத்தையும் உடனடியாகக் கண்டறிந்து, அதற்குப் பொறுப்பானவர்களை அடையாளம் காணக்கூடிய அதிநவீன கண்காணிப்பு அமைப்பு திருப்பதி தேவஸ்தானத்திடம் உள்ளதாக கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கய்ய சௌத்ரி தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர் ; தஞ்சை பெரியகோவில் ஸ்ரீ மகா வாராகி அம்மன் ஆசாட நவராத்திரி நிறைவு நாளில் புஷ்ப அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலுக்கு அருகே வடக்கு பகுதியில் தனி சன்னதி கோயிலாக ... மேலும்
 
temple news
பாலக்காடு: ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: பரிக்கல் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் கோவிலில் ஆடி சுவாதியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் அடுத்த வடமருதூர் கிராமத்தில் எட்டாம் நூற்றாண்டை சேர்ந்த பல்லவர் கால ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar