Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆடித்தபசு திருவிழா சங்கரன்கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அழகர்கோவிலுக்கு மாடு வண்டி பயணம் செல்லும் பக்தர்கள்
எழுத்தின் அளவு:
 அழகர்கோவிலுக்கு மாடு வண்டி பயணம் செல்லும் பக்தர்கள்

பதிவு செய்த நாள்

26 ஜூலை
2026
10:07

திருப்புத்தூர்; திருப்புத்தூர் வழியாக அழகர்கோயிலுக்கு குலதெய்வ வழிபாட்டிற்காக பகதர்கள் மாடு வண்டிகளில் பாரம்ரியமாக பயணம் சென்றனர்.

காரைக்குடி பகுதி கோட்டையூர் வேலங்குடி மற்றும் சுற்றியுள்ள 18 கிராம நாட்டார்களின் உறவின்முறையார்கள் பல தலைமுறைகளாக பாரம்பரியமாக மாட்டுவண்டியில் அழகர்கோவிலுக்கு சென்று அங்குள்ள குலதெய்வத்தை வணங்கி வருகின்றனர். வாகனங்கள் இல்லாத காலத்தில் மாடு வண்டியில் பயணம் சென்ற இவர்கள் தற்போதும் அதை மாற்றாமல் பாரம்பரியமாக மாடு வண்டிகளில் பயணம் செய்வதை தொடர்கின்றனர். இந்த ஆண்டிற்கான பயணத்தை வேலங்குடி பிள்ளையார்கூடத்திலிருந்து ஜூலை25ல் 20 மாடு வண்டிகளில் புறப்பட்டனர்.  முதல்நாள் பயணமாக வேலங்குடியிலிருந்து குன்றக்குடி வழியாக திருப்பத்தூர் வந்தனர். திருப்புத்தூர் அருகே  எஸ்.எஸ்.கோட்டையில் இரவு தங்கி பயணத்தை தொடர்ந்தனர். நேற்று மேலூரில் தங்கினர். இன்று அழகர்கோவில் சென்று தீர்த்தமாடுகின்றனர். நாளை நேர்த்திக்கடனளாக கிடாவெட்டு நிகழ்த்தி அனைவருக்கும் அன்னதானம் வழங்குகின்றனர். பின்னர் ஜூலை 29 ல் நடைபெறும் தேரோட்டத்தில் பங்கேற்கின்றனர். பின்னர் மீண்டும் மாட்டு வண்டிப் பயணத்தை துவங்குகின்றனர். பயணம் செல்பவர்கள் கூறுகையில்,‛ நிதானமான இந்த பயணம் நாம் இதுவரை வாழ்ந்த வாழ்க்கையை அசைபோட வைக்கிறது.அடுத்து எப்படி வாழ வேண்டும் என்பதை  நினைக்க வைக்கிறது. இயந்திர உலகத்தில் நிதானமாக சிந்திக்க உதவுகிறது. இது இறைவனுக்கு செய்யும் கடமையாகவும், எங்கள் முன்னோர்களுக்குச் செய்யும் மரியாதையாகவும் பின்பற்றி வருகிறோம்’ என்றனர். 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தென்காசி: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலில் நடைபெற்று ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை ஆனந்தவல்லி,சோமநாதர் கோயிலில் ஆடித்தபசு தேரோட்ட விழாவில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், கீழையூர், மகாமாரியம்மன் கோவில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து ... மேலும்
 
temple news
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளியம்மனை தரிசிப்போம்.  முன்பு மதுரை வெள்ளத்தில் மூழ்கியது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar