புதுச்சேரி: பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவிலில், மூல நட்சத்திர சிறப்பு பால் அபிஷேகம் இன்று நடக்கிறது. திண்டிவனம் - புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பஞ்சவடீயில், 36 அடி உயர விஸ்வரூப ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்ஜநேய சுவாமி கோவில் உள்ளது. இங்கு, மாதந்தோறும் மூல நட்சத்திரத்தன்று, பால் மற்றும் வாசனை திரவியங்களுடன் சிறப்பு அபிஷேகம் நடத்தப்படுகிறது. இந்த மாதம், மூல நட்சத்திர அபிஷேகம், இன்று (6ம் தேதி) மாலை 4.30 மணிக்கு நடக்கிறது.இக்கோவிலில் அனைத்து அபிஷேகங்கள் மற்றும் பூஜைகளும் முழுமையாக ஸ்ரீ ஜெயமாருதி சேவா டிரஸ்ட்டினால் நடத்தப்படுகிறது. இத்தகவலை சேவா டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் கோதண்டராமன், செயலாளர் நரசிம்மன், இணைச் செயலாளர் திருமலை மற்றும் அறங்காவலர்கள் தெரிவித்துள்ளனர்.