Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருவிளக்கு பூஜை! சிவராத்திரியுடன் நிறைவடைந்தது கும்பமேளா சிவராத்திரியுடன் நிறைவடைந்தது ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவகாசியில் சிவனடியார் படை!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

09 மார்
2013
01:03

சிவகாசியில் சிவன் கோயிலுக்குள் அடுத்தடுத்து வந்த சில இளைஞர்கள், இடுப்பில் துண்டு கட்டி சுவாமியை தரிசிக்க, எல்லோரது பார்வையிலிருந்தும் வித்தியாசமாக தென்பட்டனர். சன்னதி முன் பல்லக்கை தூக்கி வைத்தல்,  பிரகாரத்தில் சிவப்பு கம்பளம் விரிப்பது என பணி முடித்து, பஞ்ச வாத்தியங்களான மந்தம், பாணி, தாளம், வெண்சங்கு, வாங்கா வுடன் இளைஞர்கள் தயாராகினர். இரவு 8.45க்கு பூஜை தட்டுடன் பூஜாரி கருவறைக்குள் சென்று சுவாமியை பள்ளியறைக்கு அழைத்து செல்ல ஆயத்தமானார். மறுகணம் பஞ்ச வாத்தியங்களில் தாள நயத்துடன் இசை கருவிகளை இயக்கி, பக்திபரவசத்திற்கு மாற்றினர் அந்த இளைஞர்கள்.  பூஜையை அடுத்து உற்சவர் பல்லக்கிற்கு வந்தார். பல்லக்குபின் பக்தர்கள் வெண்சாமரம் வீசி, பக்திபாடல்பாடி பின்தொடர்ந்தனர். பல்லக்கு ஒவ்வொரு இடத்திற்கு வந்த போதும் அதற்கு ஏற்ப இசைத்து பக்தர்களை பரவசத்திற்கு உள்ளாக்கினர். சுவாமி, அம்பாள் சன்னதியில் பள்ளியறை பூஜைகள் நடந்தேறியது.

நாகரீக உலகில் இளைஞர்கள் தடம்மாறி செல்லும் சூழலில் பொறுப்புடன் ஆன்மிகத்தில் ஈடுபாடு காட்டும் இந்த இளைஞர்கள் மனம்திறக்கிறார்கள்...பிரபலமான சிவாலயங்களில் ஆகம விதிப்படி திருப்பள்ளி எழுச்சி, பள்ளியறை பூஜைகள் நடைபெறுவது போல் சிவகாசி சிவன் கோயிலில் நடத்த விரும்பினோம். சிவகாசி சிவனடியார் அறநெறி கழகம் முயற்சியில் 2 மாதம், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலுக்கு சென்று கருவிகளை இயக்க ஏழுபேர் முறையான பயிற்சி பெற்றோம்.தினமும் கோயில் நடை திறப்பிற்கு அதிகாலையில் தயாராகி காலை 6 மணிக்கு, பள்ளி எழுச்சிக்கு இசைப்போம். திருமுறை பாராயணம் படித்து அவரவர் பணிக்கு செல்வோம். பின் இரவு பள்ளியறை பூஜையில் இசைப்போம். ஒரு ஆண்டாக இறைப்பணி செய்கிறோம்.  இப் பணியில் மாணவர்கள், இளைஞர் என பலரும் சங்கமித்ததால் 30 பேர் உள்ளோம். ஆட்டோ டிரைவர், லோடு மேன், ஆசிரியர், வியாபாரி, மாணவர்கள்  என பல்வேறு தரப்பினர் உள்ளோம். என்ன வேலை இருந்தாலும் குறித்த நேரத்தில் குறைந்தது  10 பேராவது கோயிலில் ஆஜராவோம்.  இப்படியே போனால் சாமியாராகிவிடுவோம்  என ஆரம்பத்தில் பெற்றோர் அஞ்சினர். எங்களின் ஒழுக்கம், பக்தியை கண்டு இப்போது மதிக்கின்றனர். நாங்கள் இறைவனுக்கு தொண்டு செய்வதால்,  எந்த தவறும் செய்வதில்லை.  இசைக்கு எல்லோரையும் ஈர்க்கும் சக்தி உண்டு என்பதை நன்கு உணர்ந்தோம். இப்போது  பள்ளி எழுச்சி, பள்ளியறை பூஜைக்கு ஏராளமான  சிவனடியார்கள் வருகின்றனர். இதனால் ஆன்மிகம் தழைக்கும், ஒற்றுமை வளரும், ஊரில் தொழில்  வளம் பெருகும் என்றனர் நம்பிக்கையாக! ஞாலம் நின்புகழே மிகவேண்டும் தென்  ஆலவாயில் உறையும் எம் ஆதியோ என கோரசாக பாடல் பாடி விடைபெற்றனர்.  சிவனடியார்களோடு பேச, 84899 60049
- சிவரவி

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி பெருமாள் கோவில் சித்திரை மாத பிரம்மோத்சவம், கடந்த 13ம் தேதி ... மேலும்
 
temple news
பொன்னேரி; பொன்னேரி, திருவாயற்பாடி சவுந்தர்யவல்லி தாயார் சமேத கரிகிருஷ்ண பெருமாள் கோவில் பிரம்மோற்சவ ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; ஸ்ரீபெரும்புதுார் ஆதிகேசவப்பெருமாள் கோவில் மற்றும் பாஷ்யகார ஸ்வாமி கோவில் உள்ளது. கடந்த, ... மேலும்
 
temple news
திருநீர்மலை; பல்லாவரத்தை அடுத்த திருநீர்மலையில், பிரசித்திபெற்ற ரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் திருநள்ளாறு சனீஸ்வர பகாவன் கோவிலில் விடுமுறை நாட்கள் என்பதால் ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar