Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆத்தூர் சோமசுந்தரி ஆலயத்தில் ... செவ்வாய்கிழமை நல்ல நாளே.. கிழமைகளில் வேறுபாடு இல்லை! செவ்வாய்கிழமை நல்ல நாளே.. கிழமைகளில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நீலகேசி அம்மன் கோயிலில் 161 குழந்தைகளுக்கு இன்று தூக்க நேர்ச்சை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 மார்
2013
10:03

குலசேகரம்: குலசேகரம் இட்டகவேலி நீலகேசி அம்மன் கோயில் விழாவில் இன்று(23ம் தேதி) 161 குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நடத்தப்படுகிறது. இட்டகவேலி நீலகேசி அம்மன் முடிப்புரை கோயில் அம்மயிறக்கத் திருவிழா கடந்த 17ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. முதல் நாள் விழாவில் சாவி தானம், அம்மயிறக்கம், பறம்பு நோக்கி எழுந்தருளல் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான தூக்க நேர்ச்சை இன்று(23ம் தேதி) நடக்கிறது. குழந்தை வரம் வேண்டியும், குழந்தைகள் நோய் நொடியின்றி நலமுடன் வாழவும் நீலகேசி அம்மனை வேண்டி தூக்க நேர்ச்சை வழிபாடு நடத்தப்படுகிறது. இந்த தூக்க நேர்ச்சை அம்மயிறக்க திருவிழாவின் ஏழாவது நாளில் நடத்தப்படுகிறது. தூக்க நேர்ச்சைக்காக விரதமிருக்கும் பக்தர்கள் தூக்க ரதத்தில் நேர்ச்சை நடத்தும் குழந்தைகளைக் கையில் பிடித்தபடி பச்சைப்பந்தலைச் சுற்றி வருவர். பக்தர்கள் ரதத்தை இழுத்துச் செல்வார்கள். முதலில் வெள்ளிப் பிள்ளையை கையில் வைத்தபடி பூஜாரி தூக்க ரதத்தில் பச்சைப்பந்தலைச் சுற்றி வர, அம்மன் தூக்கம் நிறைவேற்றப்படுகிறது. தொடர்ந்து, குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நடக்கிறது. இந்த ஆண்டு 161 குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நடத்தப்படுகிறது. தூக்க நேர்ச்சையை ஒட்டி மதியம் 12.30க்கு நேர்ச்சை செய்வோர் அம்மனின் குடும்ம வீடான பனங்கோடு தெக்கதில் இருந்து விழா நடக்கும் பறம்பு நோக்கி புறப்படுவார்கள். மதியம் 12.50க்கு குத்தியோட்டம், பூமாலை, தாலப்பொலி, மஞ்சள் குடம், பிடிப்பணம், உருள், துலாபாரம் நேர்ச்சைகள் நடக்கின்றன. மதியம் இரண்டு மணிக்கு தூக்க நேர்ச்சை நடக்கிறது. நாளை(24ம் தேதி) 2007 திருவிளக்கு பூஜை நடக்கிறது. நாளை மறுநாள்(25ம் தேதி) மாமியார் கொடுமையை எதிர்த்துப் போராடிய மருமகள், மாமியாரை வென்ற "கமுகு எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், யாக சாலை பூஜையுடன் இன்று துவங்குகிறது.கடலுார் ... மேலும்
 
temple news
வடமதுரை: வடமதுரை காளியம்மன் கோயில் திரு விழாவில் சவுந்தரராஜப் பெருமாள் சீர் வழங்கும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூர், காலடிபேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஹம்ச வாகனத்தில் கோதண்டராமர் ... மேலும்
 
temple news
மதுரா; ஜனாதிபதி திரௌபதி முர்மு, மதுராவில் உள்ள டங்கடி கோவிலில் தரிசனம் செய்தார்.ஜனாதிபதி திரௌபதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar