Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்புகழ் பகுதி-8 திருப்புகழ் பகுதி-10 திருப்புகழ் பகுதி-10
முதல் பக்கம் » திருப்புகழ்
திருப்புகழ் பகுதி-9
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

23 மார்
2013
05:03

426. சமரமுக வேலொத்த விழிபுரள வாரிட்ட
தனமசைய வீதிக்குள்  மயில்போலு லாவியே
சரியைக்ரியை யோகத்தின் வழிவருக்கு பாசுத்தர்
தமையுணர ராகத்தின்  வசமாக மேவியே

உமதடியு னாருக்கு மனுமரண மாயைக்கு
முரியவர் மகாதத்தை  யெனுமாய மாதரார்
ஒளிரமளி பீடத்தி லமடுபடு வேனுக்கு
முனதருள்க்ரு பாசித்த  மருள்கூர வேணுமே

இமகிரிகு மாரத்தி யனுபவைப ராசத்தி
யெழுதரிய காயத்ரி  யுமையாள்கு மாரனே
எயினர்மட மானுக்கு மடலெழுதி மோகித்து
இதணகுரு சேவிக்கு  முருகாவி சாகனே

அமரர்சிறை மீள்விக்க அமர்செய்துப்ர தாபிக்கு
மதிகவித சாமார்த்ய  கவிராஜ ராஜனே
அழுதுலகை வாழ்வித்த கவுணியகு லாதித்த
அரியகதிர் காமத்தி  லுரியாபி ராமனே.

427. சரத்தே யுதித்தா யுரத்தே குதித்தே
சமர்த்தா யெதிர்த்தே  வருசூரைச்
சரிப்போ னமட்டே விடுத்தா யடுத்தாய்
தகர்த்தா யுடற்றா  னிருகூறாச்

சிரத்தோ டுரத்தோ டறுத்தோ குவித்தாய்
செகுத்தாய் பலத்தார்  விருதாகச்
சிறைச்சே வல்பெற்றாய் வலக்கார முற்றாய்
திருத்தா மரைத்தா  ளருள்வாயே

புரத்தார் வரத்தார் சரச்சே கரத்தார்
பொரத்தா னெதிர்த்தே  வருபோது
பொறுத்தார் பரித்தார் சிரித்தா ரெரித்தார்
பொரித்தார் நுதற்பார்  வையிலேபின்

கரித்தோ லுரித்தார் விரித்தார் தரித்தார்
கருத்தார் மருத்தூர்  மதனாரைக்
கரிக்கோ லமிட்டார் கணுக்கான முத்தே
கதிர்க்கா மமுற்றார்  முருகோனே.

428.சரியையா ளர்க்குமக் கிரியையா ளர்க்குநற்
சகலயோ கர்க்குமெட்  டரிதாய
சமயபே தத்தினுக் கணுகொணா மெய்ப்பொருட்
டருபரா சத்தியிற்  பரமான

துரியமே லற்புதப் பரமஞா னத்தனிச்
சுடர்வியா பித்தநற்  பதிநீடு
துகளில்சா யுச்சியக் கதியையீ றற்றசொற்
சுகசொரூ பத்தையுற்  றடைவேனோ

புரிசைசூழ் செய்ப்பதிக் குரியசா மர்த்யசற்
புருஷவீ ரத்துவிக்  ரமசூரன்
புரளவேல் தொட்டகைக் குமரமேன் மைத்திருப்
புகழையோ தற்கெனக்  கருள்வோனே

கரியபூ கத்திரட் பலவின்மீ திற்சுளைக்
கனிகள்பீ றிப்புசித்  தமராடிக்
கதலிசூ தத்தினிற் பயிலுமீ ழத்தினிற்
கதிரகா மக்கரிப்  பெருமாளே.

429. பாரவித முத்தப்ப டீரபுள கப்பொற்ப
யோதர நெருக்குற்ற  இடையாலே
பாகளவு தித்தித்த கீதமொழி யிற்புட்ப
பாணவிழி யிற்பொத்தி  விடுமாதர்

காரணி குழற்கற்றை மேல்மகர மொப்பித்த
காதில்முக வட்டத்தி  லதிமோக
காமுகன கப்பட்ட வாசையைம றப்பித்த
கால்களைம றக்கைக்கும்  வருமோதான்

தேரிரவி யுட்கிப்பு காமுதுபு  ரத்திற்றெ
சாசிரனை மர்த்தித்த  அரிமாயன்
சீர்மருக அத்யுக்ர யானைபடும் ரத்னத்ரி
கோணசயி லத்துகர  கதிர்காம

வீரபுன வெற்பிற்க லாபியெபி னச்சிக்கு
மேகலை யிடைக்கொத்தி  னிருதாளின்
வேரிமழை யிற்பச்சை வேயிலரு ணக்கற்றை
வேல்களி லகப்பட்ட  பெருமாளே.

430. மருவறா வெற்றி மலர்தொடா விற்கை
வலிசெயா நிற்கு  மதனாலும்
மதில்கள் வுற்ற கலைபடா வட்ட
மதிசுடா நிற்கு  மதனாலும்

இருகணால் முத்த முதிரயா மத்தி
னிரவினால் நித்த  மெலியாதே
இடருறா மெத்த மயல்கொளா நிற்கு
மிவளைவாழ் விக்க  வரவேணும்

கரிகள்சேர் வெற்பி லரியவே டிச்சி
கலவிகூர் சித்ர  மணிமார்பா
கனகமா ணிக்க வடிவனே மிக்க
கதிரகா மத்தி  லுறைவோனே

முருகனே பத்த ரருகனே முத்தி
முதல்வனே பச்சை  மயில்வீரா
முடுகிமே லிட்ட கொடியசூர் கெட்டு
முறியவேல் தொட்ட  பெருமாளே.

431. மாதர்வச மாயுற்  றுழல்வாரும்
மாதவமெ ணாமற்  றிரிவாரும்
தீதகல வோதிப்  பணியாரும்
தீநகர மீதிற்  றிகழ்வாரே
நாதவொளி யேநற்  குணசீலா
நாரியிரு வோரைப்  புணர்வேலா
சோதிசிவ ஞானக்  குமரேசா
தோமில்கதிர் காமப்  பெருமாளே.

432. முதிரு மார வார நட்பொ டிலகு மார வார மெற்றி
முனியு மார வார முற்ற  கடலாலே
முடிவி லாத தோர் வடக்கி லெரியு மால மார்பி டத்து
முழுகி யேறி மேலெ றிக்கு  நிலவாலே

வெதிரி லாயர் வாயில் வைத்து மதுர ராக நீடி சைக்கும்
வினைவி டாத தாய ருக்கு  மழியாதே
விளையு மோக போக முற்றி அளவிலாத காதல்பெற்ற
விகட மாதைநீ யணைக்க  வரவேணும்

கதிர காம மாந கர்க்கு ளெதிரி லாத வேல்த ரித்த
கடவு ளேக லாப சித்ர  மயில்வீரா
கயலு லாம்வி லோச னத்தி களப மார்ப யோத ரத்தி
ககன மேவு வாளொ ருத்தி  மணவாளா

அதிர வீசி யாடும் வெற்றி விடையி லேறு மீசர் கற்க
அரிய ஞான வாச கத்தை  யருள்வோனே
அகில லோக மீது சுற்றி யசுரர் லோக நீறெ ழுப்பி
அமரர் லோகம் வாழ வைத்த  பெருமாளே.

433. வருபவர்க ளோலை கொண்டு நமனுடைய தூத ரென்று
மடிபிடிய தாக நின்று  தொடர்போது
மயலதுபொ லாத வம்பன் விரகுடைய னாகு மென்று
வசைகளுட னேதொ டர்ந்து  அடைவார்கள்

கருவியத னாலெ றிந்து சதைகள்தனை யேய ரிந்து
கரியபுன லேசொ ரிந்து  விடவேதான்
கழுமுனையி லேயி ரென்று விடுமெனும வேளை கண்டு
கடுகிவர வேணு மெந்தன்  முனமேதான்

பரகிரியு லாவு செந்தி மலையினுட னேயி டும்பன்
பழநிதனி லேயி ருந்த  குமரேசா
பதிகள்பல வாயி ரங்கள் மலைகள்வெகு கோடி நின்ற
பதமடியர் காணவந்த  கதிர்காமா

அரவுபிறை பூளை தும்பை விலுவமொடு தூர்வை கொன்றை
யணிவர்சடை யாளர்  தந்த  முருகோனே
அரகரசி வாய சம்பு குருபரகு மார நம்பு
மடியர்மமை யாள வந்த  பெருமாளே.

ஸ்ரீலங்கா (அருக்கொணாமலை)

434. தொடுத்த வாளென விழித்து மார்முலை
யசைத்து மேகலை மறைத்து மூடிகள்
துடித்து நேர்கலை நெகிழ்த்து மாவியல்  கொளுமாதர்
சுகித்த ஹாவென நகைத்து மேல்விழ
முடித்த வார்குழல் விரித்து மேவிதழ்
துவர்த்த வாய்சுரு ளடக்கி மால்கொடு  வழியேபோய்ப்

படுத்த பாயலி லணைத்து மாமுலை
பிடித்து மார்பொடு மழுத்தி வாயிதழ்
கடித்து நாணம தழித்த பாவிகள்  வலையாலே
பலித்து நோய்பிணி கிடத்து பாய்மிசை
வெளுத்து வாய்களு மலத்தி னாயென
பசித்து தாகமு மெடுத்தி டாவுயி  ருழல்வேனோ

வெடுத்த தாடகை சினத்தை யோர்கணை
விடுத்து யாகமும் நடத்தி யேயொரு
மிகுத்த வார்சிலை முறித்த மாயவன்  மருகோனே
விதித்து ஞாலம தளித்த வேதனை
யதிர்த்து வோர்முடி கரத்து லாயனல்
விழித்து காமனை யெரித்த தாதையர்  குருநாதா

அடுத்த ஆயிர விடப்ப ணாமுடி
நடுக்க மாமலை பிளக்க வேகவ
டரக்கர் மாமுடி பதைக்க வேபொரு  மயில்வீரா
அறத்தில் வாழுமை சிறக்க வேயறு
முகத்தி னோடணி குறத்தி யானையொ
டருக்கொ ணாமலை தருக்கு லாவிய  பெருமாளே.

ஸ்ரீலங்கா (திருக்கோணமலை)

435. விலைக்கு மேனியி லணிக்கோவை மேகலை
தரித்த வாடையு மணிப்பூணு மாகவெ
மினுக்கு மாதர்க ளிடக்காம மூழ்கியெ  மயலூறி
மிகுத்த காமிய னெனப்பாரு ளோரெதிர்
நகைக்க வேயுட லெடுத்தேவி யாகுல
வெறுப்ப தாகியெ யுழைத்தேவி டாய்படு  கொடியேனைக்

கலக்க மாகவெ மலக்கூடி லேமிகு
பிணிக்கு ளாகியெ தவிக்காம லேயுனை
கவிக்கு ளாய்சொலி கடைத்தேற வேசெயு  மொருவாழ்வே
கதிக்கு நாதனி யுனைத்தேடி யேபுக
ழுரைக்கு நாயெனை யருட்பார்வை யாகவெ
கழற்கு ளாகவெ சிறப்பான தாயருள்  தரவேணும்

மலைக்கு நாயக சிவக்காமி நாயகர்
திருக்கு மாரனெ முகத்தாறு தேசிக
வடிப்பமாதொரு குறப்பாவை யாள்மகிழ்  தருவேளே
வசிட்டர் காசிபர் தவத்தான யோகியர்
அகத்ய மாமுனி யிடைக்காடர் கீரனும்
வகுத்த பாவினில் பொருட்கோல மாய்வரு  முருகோனே

நிலைக்கு நான்மறை மகத்தான பூசுரர்
திருக்கொ ணாமலை தலத்தாரு கோபுர
நிலைக்குள் வாயினில் கிளிப்பாடு பூதியில்  வருவோனே
நிகழ்த்து மேழ்பவ கடற்சூறை யாகவெ
யெடுத்த வேல்கொடு பொடித்தூள தாஎறி
நினைத்த காரிய மநுக்கூல மேபுரி  பெருமாளே.

பல தலங்கள் - பொது குன்றுதோறாடல்

436. அதிருங் கழல்ப ணிந்து  னடியேனுன்
அபயம் புகுவ தென்று  நிலைகாண
இதயந் தனிலி ருந்து  க்ருபையாகி
இடர்சங் கைகள்க லங்க  அருள்வாயே
எதிரங் கொருவ ரின்றி  நடமாடும்
இறைவன் தனது பங்கி  லுமைபாலா
பதியெங் கிலுமி ருந்து  விளையாடிப்
பலகுன் றிலும மர்ந்த  பெருமாளே.

437. எழுதிகழ் புவன நொடியள வதனி
லியல்பெற மயிலில்  வருவோனே
இமையவர் பரவி யடிதொழ அவுணர்
மடிவுற விடுவ  தொருவேலா

வழுதியர் தமிழி னொருபொரு ளதனை
வழிபட மொழியு  முருகேசா
மலரடி பணியு மடமகள் பசலை
மயல்கொடு தளர்வ  தழகோதான்

முழுகிய புனலி லினமணி தரள
முறுகிடு பவள  மிகவரி
முறையொடு குறவர் மடமகள் சொரியு
முதுமலை யழக  குருநாதா

பழகிய வினைகள் பொடிபட அருளில்
படிபவ ரிதய  முறுகோவே
பருவரை துணிய வொருகணை தெரிவ
பலமலை யுடைய  பெருமாளே.

438. தறையின் மானுட ராசையி னால்மட
லெழுது மாலருள் மாதர்கள் தோதக
சரசர் மாமல ரோதியி னாலிரு  கொங்கையாலுந்
தளர்மி னேரிடை யாலுடை யால்நடை
யழகி னால்மொழி யால்விழி யால்மருள்
சவலை நாயடி யேன்மிக வாடிம  யங்கலாமோ

பறவை யானமெய்ஞ் ஞானிகள் மோனிக
ளணுகொ ணாவகை நீடுமி ராசிய
பவன பூரக வேகிக மாகிய  விந்துநாதம்
பகரொ ணாதது சேரவொ ணாதது
நினையொ ணாதது வானத யாபர
பதிய தானச மாதிம னோலயம்  வந்துதாராய்

சிறைவி டாதநி சாசரர் சேனைகள்
மடிய நீலக லாபம தேறிய
திறல்வி நோதச மேளத யாபர  அம்புராசித்
திரைகள் போலலை மோதிய சீதள
குடக காவிரி நீளலை சூடிய
திரிசி ராமலை மேலுறை வீரகு  றிஞ்சிவாழும்

மறவர் நாயக ஆதிவி நாயக
ரிளைய நாயக காவிரி நாயக
வடிவி னாயக ஆனைத னாயக  எங்கள்மானின்
மகிழு நாயக தேவர்கள் நாயக
கவுரி நாயக னார்குரு நாயக
வடிவ தாமலை யாலையு மேவிய  தம்பிரானே.

439. வஞ்சக லோப மூடர் தம்பொரு ளுர்கள் தேடி
மஞ்சரி கோவை தூது  பலபாவின்
வண்புகழ் பாரி காரி யென்றிசை வாது கூறி
வந்தியர் போல வீணி  லழியாதே

செஞ்சர ணாத கீத கிண்கிணி நீப மாலை
திண்டிறல் வேல்ம யூர  முகமாறும்
செந்தமிழ் நாளு மோதி உய்ந்திட ஞான மூறு
செங்கனி வாயி லோர்சொ  லருள்வாயே

பஞ்சவ னீடு கூனு மொன்றிடு தாப மோடு
பஞ்சற வாது கூறு  சமண்மூகர்
பண்பறு பீல யோடு வெங்கழு வேற வோது
பண்டித ஞான நீறு  தருவோனே

குஞ்சரம் யாளி மேவு பைம்புன மீது லாவு
குன்றவர் சாதி கூடி  வெறியாடிக்
கும்பிட நாடி வாழ்வு தந்தவ ரோடு வீறு
குன்றுதொ றாடல் மேவு  பெருமாளே.

440. வஞ்சமே கோடி கோடிகள் நெஞ்சமே சேர மேவிய
வன்கணா ரார வாரமு  மருள்வோராய்
வம்பிலே வாது கூறிகள் கொஞ்சியே காம லீலைகள்
வந்தியா ஆசை யேதரு  விலைமாதர்

பஞ்சமா பாவ மேதரு கொங்கைமேல் நேச மாய்வெகு
பஞ்சியே பேசி நாடொறு  மெலியாதே
பந்தியாய் வானு ளோர்தொழ நின்றசீ ரேகு லாவிய
பண்புசேர் பாத தாமரை  யருள்வாயே

அஞ்சவே சூர னானவ னுய்ஞ்சுபோ காம லேயயில்
அன்றுதா னேவி வானவர்  சிறைமீள
அன்பினோ டேம னோரத மிஞ்சமே லான வாழ்வருள்
அண்டர்கோ வேப ராபர  முதல்வோனே

கொஞ்சவே காலின் மேவுச தங்கைதா னாட ஆடிய
கொன்றைய னாளு மேமகிழ்  புதல்வோனே
கொந்துசேர் சோலை மேவிய குன்றுசூழ் வாக வேவரு
குன்றுதோ றாடல் மேவிய  பெருமாளே.

ஆறாம்படை வீடு - சோலைமலை (பழமுதிர்சோலை)

441. அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி  அகமாகி
அயனென வாகி அரியென வாகி அரனென வாகி  அவர்மேலாய்
இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி  வருவோனே
இருநில மீதி லெளியனும் வாழ எனதுமு னோடி  வரவேணும்
மகபதி யாகி மருவும்வ லாரி மகிழ்களி கூரும்  வடிவோனே
வனமுறை வேட னருளிய பூஜை மகிழ்கதிர் காம  முடையோனே
செககண சேகு தகுதிமி தோதி திமியென ஆடு  மயிலோனே
திருமலி வான பழமுதிர் சோலை மலைமிசை மேவு  பெருமாளே.

442. இலவிதழ் கோதி நேதி மதகலை யார வார
இளநகை யாட ஆடி  மிகவாதுற்
றெதிர்பொரு கோர பார ம்ருகமத கோல கால
இணைமுலை மார்பி லேற  மதராஜன்

கலவியி லோடி நீடு வெகுவித தாக போக
கரணப்ர தாப லீலை  மடமாதர்
கலவியின் மூழ்கி யாழு மிழிதொழி லேனு மீது
கருதிய ஞான போத  மடைவேனோ

கொலைபுரி காளி சூலி வயிரவி நீலி மோடி
குலிசகு டாரி யாயி  மகமாயி
குமரிவ ராகி மோகி பகவதி யாதி சோதி
குணவதி யால வூணி  யபிராமி

பலிகொள்க பாலி யோகி பரமகல் யாணி லோக
பதிவ்ரதை வேத ஞானி  புதல்வோனே
படையொடு சூரன் மாள முடுகிய சூர தீர
பழமுதிர் சோலை மேவு  பெருமாளே.

443. காரணம தாக வந்து  புவிமீதே
காலனணு காதி சைந்து   கதிகாண
நாரணனும் வேதன் முன்பு  தெரியாத
ஞானநட மேபு ரிந்து  வருவாயே
ஆரமுத மான தந்தி  மணவாளா
ஆறுமுக மாறி ரண்டு  விழியோனே
சூரர்கிளை மாள வென்ற  கதிர்வேலா
சோலைமலை மேவி நின்ற  பெருமாளே.

444. சீலமுள தாயர் மாதுமனை யான மைந்தர்
சேருபொரு ளாசை நெஞ்சு  தடுமாறித்
தீமையுறு மாயை கொண்டு வாழ்வுசத மாமி தென்று
தேடினது போக என்று  தெருவூடே

வாலவய தான கொங்கை மேருநுத லான திங்கள்
மாதர்மய லோடு சிந்தை  மெலியாமல்
வாழுமயில் மீது வந்து தாளிணைகள் தாழு மென்றன்
மாயவினை தீர அன்பு  புரிவாயே

சேலவள நாட னங்கள் ஆரவயல் சூழு மிஞ்சி
சேணிலவு தாவ செம்பொன்  மணிமேடை
சேருமம ரேசா தங்க ளுரிதென வாழ்வு கந்த
தீரமிகு சூரை வென்ற  திறல்வீரா

ஆலவிட மேவு கண்டர் கோலமுட னீடு மன்று
ளாடல்புரி யீசர் தந்தை  களிகூர
ஆனமொழி யேப கர்ந்து சோலைமலை மேவு கந்த
ஆதிமுத லாக வந்த  பெருமாளே.

445. வீரமத னூல்வி ளம்பு போகமட மாதர் தங்கள்
வேல்விழியி னான்ம யங்கி  புவிமீதே
வீசுகையி னாலி தங்கள் பேசுமவர் வாயி தஞ்சொல்
வேலைசெய்து மால்மி குந்து  விரகாகிப்

பாரவச மான வங்க ணீடுபொருள் போன பின்பு
பாதகனு மாகி நின்று  பதையாமல்
பாகம்வர சேர அன்பு நீபமலர் சூடு தண்டை
பாதமலர் நாடி யென்று  பணிவேனோ

பூரணம தான திங்கள் சூடுமர னாரி டங்கொள்
பூவையரு ளால்வ ளர்ந்த  முருகோனே
பூவுல கெலாமடங்க வோரடியி னால ளந்த
பூவைமடி வானு கந்த  மருகோனே

சூரர்கிளை யேத டிந்து பாரமுடி யேய ரிந்து
தூள்கள்பட நீறு கண்ட  வடிவேலா
சோலைதனி லேப றந்து லாவுமயி லேறி வந்து
சோலைமலை மேல மர்ந்த  பெருமாளே.

446. வாரண முகங்கி ழிந்து வீழவு மரும்ப லர்ந்து
மால்வரை யசைந்த நங்கன்  முடிசாய
வாளகிரி யண்ட ரண்ட கோளமுற நின்றெ ழுந்து
மாதவ மறந்து றந்து  நிலைபேரப்

பூரண குடங்க டிந்து சீதகள பம்பு னைந்து
பூசலை விரும்பு கொங்கை  மடவார்தம்
போக சயனந் தவிர்ந்து னாடக பதம்ப ணிந்து
பூசனைசெய் தொண்ட னென்ப  தொருநாளே

ஆரண முழங்கு கின்ற ஆயிர மடந்த வங்கள்
ஆகுதி யிடங்கள் பொங்கு  நிறைவீதி
ஆயிர முகங்கள் கொண்ட நூபுர மிரங்கு கங்கை
யாரமர வந்த லம்பு  துறைசேரத்

தோரண மலங்கு துங்க கோபுர நெருங்கு கின்ற
சூழ்மணிபொன் மண்ட பங்கள்  ரவிபோலச்
சோதியின் மிகுந்த செம்பொன் மாளிகை விளங்குகின்ற
சோலைமலை வந்து கந்த  பெருமாளே.

447. ஆசை நாலுசது ரக்கமல முற்றினொளி
வீசி யோடியிரு பக்கமொடு றச்செல்வளி
ஆவல் கூரமண்மு தற்சலச பொற்சபையு  மிந்துவாகை
ஆர முணுபதி யிற்கொளநி றுத்திவெளி
யாரு சோதிநுறு பத்தினுட னெட்டுஇத
ழாகி யேழுமள விட்டருண விற்பதியின்  விந்துநாத

ஓசை சாலுமொரு சத்தமதி கப்படிக
மோடு கூடியொரு மித்தமுத சித்தியொடு
மோது வேதசர சத்தியடி யுற்றதிரு  நந்தியூடே
ஊமை யேனையொளிர் வித்துனது முத்திபெற
மூல வாசல்வெளி விட்டுனது ரத்திலொளிர்
யோக பேதவகை யெட்டுமிதி லொட்டும்வகை  யின்றுதாராய்

வாசி வாணிகனெ னக்குதிரை விற்றுமகிழ்
வாத வூரனடி மைக்கொளுக்ரு பைக்கடவுள்
மாழை ரூபன்முக மத்திகை விதத்தருண  செங்கையாளீ
வாகு பாதியுறை சத்திகவு ரிக்குதலை
வாயின் மாதுதுகிர் பச்சைவடி விச்சிவையென்
மாசு சேரெழுபி றப்பையும றப்பையும  தந்தவாழ்வே

காசி ராமொசுரம் ரத்னகிரி சர்ப்பகிரி
ஆருர் வேலுர்தெவுர் கச்சிமது ரைப்பறியல்
காவை மூதுரரு ணக்கிரிதி ருத்தணியல்  செந்தில்நாகை
காழி வேளுர்பழ நிக்கரிகு றுக்கைதிரு
நாவ லூர்திருவெ ணெய்ப்பதியின் மிக்கதிகழ்
காதல் சோலைவளர் வெற்பிலுறை முத்தர்புகழ்  தம்பிரானே.

448. கருவாகியெ தாயுத ரத்தினி
லுருவாகவெ கால்கையு றுப்பொடு
கனிவாய்விழி நாசியு டற்செவி  நரைமாதர்
கையிலேவிழ வேகிய ணைத்துயி
லெனவேமிக மீதுது யிற்றிய
கருதாய்முலை யாரமு தத்தினி  லினிதாகித்

தருதாரமு மாகிய சுற்றமு
நலவாழ்வுநி லாதபொ ருட்பதி
சதமாமிது தானென வுற்றுனை  நினையாத
சதுராயுன தாளிணை யைத்தொழ
அறியாதநிர் மூடனை நிற்புகழ்
தனையோதிமெய்ஞ் ஞானமு றச்செய்வ  தொருநாளே

செருவாயெதி ராமசு ரத்திரள்
தலைமூளைக ளோடுநி ணத்தசை
திமிர்தாதுள பூதக ணத்தொடு  வருபேய்கள்
திகுதாவுண வாயுதி ரத்தினை
பலவாய்நரி யோடுகு டித்திட
சிலகூகைகள் தாமுந டித்திட  அடுதீரா

அருமாமறை யோர்கள்து தித்திடு
புகர்வாரண மாதுத னைத்திகழ்
அளிசேர்குழல் மேவுகு றத்தியை  அணைவோனே
அழகானபொன் மேடையு யர்த்திடு
முகில்தாவிய சோலைவி யப்புறு
அலையாமலை மேவிய பக்தர்கள்  பெருமாளே.

449. சீர்சி றக்கு மேனி பசேல் பசேலென
நூபு ரத்தி னோசை கலீர் கலீரென
சேர விட்ட தாள்கள் சிவேல் சிவேலென  வருமானார்
சேக ரத்தின் வாலை சிலோர் சிலோர்களு
நூறு லக்ஷ கோடி மயால் மயால்கொடு
தேடி யொக்க வாடி யையோ வையோவென  மடமாதர்

மார்ப டைத்த கோடு பளீர் பளீரென
ஏம லித்தெ னாவி பகீர் பகீரென
மாம சக்தி லாசை யுளோ முளோமென  நினைவோடி
வாடை பற்று வேளை அடா அடாவென
நீம யக்க மேது சொலாய் சொலாயென
வாரம் வைத்த பாத மிதோ இதோவென  அருள்வாயே

பார தத்தை மேரு வெளீ வெளீதிகழ்
கோடொ டித்த நாளில் வரைஇ வரைஇபவர்
பானி றக்க ணேசர் குவா குவாகனர்  இளையோனே
பாடன் முக்ய மாது தமீழ் தமீழிறை
மாமு னிக்கு காதி லுணார் வுணர்விடு
பாச மற்ற வேத குரூ குரூபர  குமரேசா

போர்மி குத்த சூரன் விடோம் விடோமென
நேரெ திர்க்க வேலை படீர் படீரென
போய றுத்த போது குபீர் குபீரென  வெகுசோரி
பூமி யுக்க வீசு குகா குகாதிகழ்
சோலை வெற்பின் மேவு தெய்வா தெய்வானை தொள்
பூணி யிச்சை யாறு புயா புயாறுள  பெருமாளே.

450. துடிகொ ணோய்க ளோடு வற்றி
தருண மேனி கோழை துற்ற
இரும லீளை வாத பித்த  மணுகாமல்
துறைக ளோடு வாழ்வு விட்டு
உலக நூல்கள் வாதை யற்று
சுகமு ளாநு பூதி பெற்று  மகிழாமே

உடல்செய் கோர பாழ்வ யிற்றை
நிகமு முணி னாலு யர்த்தி
யுயிரி னீடு யோக சித்தி  பெறலாமே
உருவி லாத பாழில் வெட்ட
வெளியி லாடு நாத நிர்த்த
உனது ஞான பாத பத்ம  முறுவேனோ

கடிது லாவு வாயு பெற்ற
மகனும் வாலி சேயு மிக்க
மலைகள் போட ஆழி கட்டி  யிகலூர்போய்க்
களமு றானை தேர்நு றுக்கி
தலைக ளாறு நாலு பெற்ற
அவனை வாளி யால டத்தன்  மருகோனே

முடுகு வீர சூர பத்மர்
தலையின் மூளை நீறு பட்டு
முடிவ தாக ஆடு நிர்த்த  மயில்வீரா
முனிவர் தேவர் ஞான முற்ற
புனித சோலை மாம லைக்குள்
முருக வேல த்யாகர் பெற்ற  பெருமாளே.

451. பாசத் தால்விலை கட்டிய பொட்டிகள்
நேசித் தாரவர் சித்தம ருட்டிகள்
பாரப் பூதர மொத்தத னத்திகள்  மிகவேதான்
பாவத் தால்மெயெ டுத்திடு பட்டிகள்
சீவிக் கோதிமு டித்தள கத்திகள்
பார்வைக் கேமய லைத்தரு துட்டிக  ளொழியாத

மாசுற் றேறிய பித்தளை யிற்பணி
நீறிட் டேயொளி பற்றவி ளக்கிகள்
மார்பிற் காதினி லிட்ட பிலுக்கிகள்  அதிமோக
வாய்வித் தாரமு ரைக்கும் பத்திகள்
நேசித் தாரையு மெத்திவ டிப்பவர்
மாயைக் கேமனம் வைத்தத னுட்டின  மலைவேனோ

தேசிக் கானக முற்றதி னைப்புன
மேவிக் காவல்க வட்கல் சுழற்றுவள்
சீதப் பாதகு றப்பெண்ம கிழ்ச்சிகொள்  மணவாளா
தேடிப் பாடிய சொற்புல வர்க்கித
மாகத் தூதுசெ லத்தரில் கற்பக
தேவர்க் காதிதி ருப்புக லிப்பதி  வருவோனே

ஆசித் தார்மன திற்புகு முத்தம
கூடற் கேவைகை யிற்கரை கட்டிட
ஆளொப் பாயுதிர் பிட்டமு துக்கடி  படுவோனே
டாரத் தோடகி லுற்றத ருக்குல
மேகத் தோடொரு மித்துநெ ருக்கிய
ஆதிச் சோலைம லைப்பதி யிற்றிகழ்  பெருமாளே.

452. வாதினை அடர்ந்த வேல்விழியர் தங்கள்
மாயம தொழிந்து  தெளியேனே
மாமலர்கள் கொண்டு மாலைகள் புனைந்து
மாபத மணிந்து  பணியேனே

ஆதிமொடு மந்த மாகிய நலங்கள்
ஆறுமுக மென்று  தெரியேனே
ஆனதனி மந்த்ர ரூபநிலை கொண்ட
தாடுமயி லென்ப  தறியேனே

நாதமொடு விந்து வானவுடல் கொண்டு
நானில மலைந்து  திரிவேனே
நாகமணி கின்ற நாதநிலை கண்டு
நாடியதில் நின்று  தொழுகேனே

சோதியுணர் கின்ற வாழ்வுசிவ மென்ற
சோகமது தந்து  எனையாள்வாய்
சூரர்குலம் வென்று வாகையொடு சென்று
சோலைமலை நின்ற  பெருமாளே.

453. வார்குழையை யெட்டி வேளினைமருட்டி
மாயநம னுக்கு  முறவாகி
மாதவம ழித்து லீலைகள் மிகுத்து
மாவடுவை யொத்த  விழிமாதர்

சீரும் னழைந்து வாய்கனிவு வைத்துத்
தேனித ழனித்து  அனுபோக
சேர்வைதனை யுற்று மோசம்விளை வித்து
சீர்மைகெட வைப்ப  ருறவாமோ

வாரினை யறுத்து மேருவை மறித்து
மாகனக மொத்த  குடமாகி
வாரவனை வைத்து மாலளித முற்று
மாலைகளு மொய்த்த  தனமாது

தோரணி புயத்தி யோகினி சமர்த்தி
தோகையுமை பெற்ற  புதல்வோனே
சூர்கிளை மடித்து வேல்கர மெடுத்து
சோலைமலை யுற்ற  பெருமாளே.

454. அழகு தவழ்குழல் விரித்துக் காட்டி
விழிகள் கடையினை புரட்டிக் காட்டி
அணிபொ னணிகுழை புரித்துக் காட்டி  அனுராக
அவச இதமொழி படித்துக் காட்டி
அதர மழிதுவர் வெளுப்பைக் காட்டி
அமர்செய் நகநுதி யழுத்தைக் காட்டி  யணியாரம்

ஒழுகு இருதன மசைத்துக் காட்டி
எழுத வரியிடை வளைத்துக் காட்டி
உலகு முடைதனை நெகிழ்த்துக் காட்டி  யுறவாடி
உருகு கடிதட மொளித்துக் காட்டி
உபய பரிபுர பதத்தைக் காட்டி
உயிரை விலைகொளுமவர்க்குத் தேட்டம்  ஒழிவேனோ

முழுகு மருமறை முகத்துப் பாட்டி
கொழுநர் குடுமியை யறுத்துப் போட்ட
முதல்வ குகைபடு திருப்பொற் கோட்டு  முனிநாடா
முடுகு முதலையை விரித்துக் கோட்டி
அடியர் தொழமக வழைத்துக் கூட்டி
முறைசெய் தமிழினை விரித்துக் கேட்ட  முதுநீதர்

பழைய கடகட முகத்துக் கோட்டு
வழுவை யுரியணி மறைச்சொற் கூட்டு
பரமர் பகிரதி சடைக்குட் சூட்டு  பரமேசர்
பணிய அருள்சிவ மயத்தைக் காட்டு
குமர குலமலை யுயர்த்திக் காட்டு
பரிவொ டணிமயல் நடத்திக் காட்டு  பெருமாளே.

455. தலைமயிர் கொக்குக் கொக்கந ரைத்துக்
கலகலெ னப்பற் கட்டது விட்டுத்
தளர்நடை பட்டுத் தத்தடி யிட்டுத்  தடுமாறித்
தடிகொடு கத்திக் கக்கல்பெ ருத்திட்
டசனமும் விக்கிச் சத்தியெ டுத்துச்
சளியுமி குத்துப் பித்தமு முற்றிப்  பலகாலும்

திலதயி லத்திட் டொக்கவெ ரிக்கத்
திரிபலை சுக்குத் திப்பிலி யிட்டுத்
தெளிய வடித்துத் துய்த்துடல் செத்திட்  டுயிர்போமுன்
திகழ்புகழ் கற்றுச் சொற்கள்ப யிற்றித்
திருவடி யைப்பற் றித்தொழு துற்றுச்
செனனம றுக்செக் குப்பர முத்திக்  கருள்தாராய்

கலணைவி சித்துப் பக்கரை யிட்டுப்
புரவிசெ லுத்திக் கைக்கொடு வெற்பைக்
கடுகந டத்தித் திட்டென எட்டிப்  பொருசூரன்
கனபடை கெட்டுத் தட்டற விட்டுத்
திரைகட லுக்குட் புக்கிட எற்றிக்
களிமயி லைச்சித் ரத்திந டத்திப்  பொருகோவே

குலிசன்ம கட்குத் தப்பியு மற்றக்
குறவர்ம கட்குச் சித்தமும் வைத்துக்
குளிர்தினை மெத்தத் தத்துபு னத்திற்  றிரிவோனே
கொடியபொ ருப்பைக் குத்திமு றித்துச்
சமரம்வி ளைத்துத் தற்பர முற்றுக்
குலகிரி யிற்புக் குற்றுறை யுக்ரப்  பெருமாளே.

456. மலரனை ததும்ப மேக குழல்முடி சரிந்து வீழ
மணபரி மளங்கள் வேர்வை  யதனோடே
வழிபட இடங்க ணாட பிறைநுதல் புரண்டு மாழ்க
வனைகலை நெகிழ்ந்து போக  இளநீரின்

முலையினை ததும்ப நூலின் வகிரிடைசுழன்று வாட
முகமுகுமொ டொன்ற பாய  லதனூடே
முதுமயல் கலந்து மூழ்கி மகிழ்கினும் அலங்க லாடு
முடிவடிவொ டங்கை வேலு  மறவேனே

சிலைநுத விளம்பெண் மோகி சடையழகி யெந்தைபாதி
திகழ்மர கதம்பொன் மேனி  யுமைபாலா
சிறுநகை புரிந்து சூரர் கிரிகெட லெரிந்து போக
திகழயி லெறிந்த ஞான  முருகோனே

கொலைமிக பயின்ற வேடர் மகள்வளி மணந்த தோள
குணவலர் கடம்ப மாலை  யணிமார்பா
கொடிமின லடைந்த சோதி மழகதிர் தவழ்ந்த ஞான
குலகிரி மகிழ்ந்து மேவு  பெருமாளே.

ஆறு திருப்பதி

457. அலைகடல் நிகராகிய விழிகொடு வலைவீசிகள்
அபகட மகபாவிகள்  விரகாலே
அதிவித மதராயத நிதமொழி பலகூறிகள்
அசடரொ டுறவாடிகள்  அநியாயக்

கலைபகர் விலைமாதர்கள் இளைஞர்கள் குடிகேடிகள்
கருதிடு கொடியாருட  னினிதாகக்
கனதன முலைமேல்விழு கபடனை நிருமூடனை
கழலிணை பெறவேயினி  யருள்வாயே

அலைபுனல் தலைசூடிய பசுபதி மகனாகிய
அறுமுக வடிவேஅருள்  குருநாதா
அசுரர்கள் குடியேகெட அமரர்கள் பதியேபெற
அதிரிடும் வடிவேல்விடு  மதிசூரா

தலையய னறியாவொரு சிவகுரு பரனேயென
தரணியி லடியார்கண  நினைவாகா
சகலமு முதலாகிய அறுபதி நிலைமேவிய
தடமயில் தனிலேறிய  பெருமாளே.

458. ஈனமிகுத் துளபிறவி  யணுகாதே
யானுமுனக் கடிமையென  வகையாக
ஞானஅருட் டனையருளி  வினைதீர
நாணமகற் றியகருணை  புரிவாயே
தானதவத் தினின்மிகுதி  பெறுவோனே
சாரதியுத் தமிதுணைவ  முருகோனே
ஆனதிருப் பதிகமரு  ளிளையோனே
ஆறுதிருப் பதியில்வளர்  பெருமாளே.

பஞ்ச பூத தலங்கள்

1. காஞ்சி புரம்  (பிருதிவி )

459. அதிமதங் கக்கப் பக்கமு கக்குஞ்
சரிதனந் தைக்கச் சிக்கென நெக்கங்
கணைதருஞ்செச்சைப் பொற்புயனத்தன்  குறவாணர்
அடவியந் தத்தைக் கெய்த்துரு கிச்சென்
றடிபணிந் திட்டப் பட்டும யற்கொண்
டயர்பவன் சத்திக் கைத்தல னித்தன்  குமரேசன்

துதிசெயும் சுத்தப் பத்தியர் துக்கங்
களைபவன் பச்சைப் பக்ஷிந டத்துந்
துணைவனென் றர்ச்சித் திச்சைத ணித்துண்  புகழ்பாடிச்
சுருதியின் கொத்துப் பத்தியு முற்றுந்
துரியமுந் தப்பித் தத்வம னைத்துந்
தொலையுமந் தத்துக் கப்புற நிற்கும்  படிபாராய்

கதிபொருந் தக்கற் பித்துந டத்துங்
கனல்தலம் புக்குச் சக்ரமெ டுக்குங்
கடவுளும் பத்மத் தச்சனு முட்கும்  படிமோதிக்
கதிரவன் பற்குற் றிக்குயி லைத்திண்
சிறகரிந் தெட்டுத் திக்கர்வ குக்குங்
கடகமுந் தட்டுப் பட்டொழி யக்கொன்  றபிராமி

பதிவ்ரதம் பற்றப் பெற்றம கப்பெண்
பரிவொழிந் தக்கிக் குட்படு தக்கன்
பரிபவம் பட்டுக் கெட்டொழி யத்தன்  செவிபோயப்
பனவிபங் கப்பட் டப்படி வெட்கும்
படிமுனிந் தற்றைக் கொற்றம் விளைக்கும்
பரமர்வந் திக்கக் கச்சியில் நிற்கும்  பெருமாளே.
 
460. கனகதம் பத்தைச் செச்சையை மெச்சுங்
கடகசங் கத்துப் பொற்புய வெற்பன்
கடலுள்வஞ் சித்துப் புக்கதொர் கொக்கும்  பொடியாகக்
கறுவுசெஞ் சத்திப் பத்மக ரத்தன்
குமரனென் றர்ச்சித் தப்படி செப்புங்
கவிமொழிந் தத்தைக் கற்றற வுற்றும்  புவியோர்போய்

குனகியுங் கைக்குக் கற்பக மொப்பென்
றனகனென் றிச்சைப் பட்டத ளிக்குங்
குமுணனென் றொப்பிட் டித்தனை பட்டிங்  கிரவான
குருடுகொண் டத்தச் சத்தம னைத்துந்
திருடியுஞ் சொற்குத் தக்கதொ டுத்துங்
குலவியுங் கத்தப் பட்டக லக்கந்  தெளியாதோ

சனகனன் புற்றுப் பெற்றம டப்பெண்
தனிபெருங் கற்புச் சக்ரந டத்துந்
தகையிலங் கைச்சுற் றத்தைமு ழுத்துஞ்  சுடவேவெஞ்
சமரசண் டக்கொற்  றத்தவ ரக்கன்
கதிர்விடும் பத்துக் கொத்துமு டிக்குந்
தனியொரம் பைத்தொட் டுச்சுரர் விக்னங்  களைவோனும்

தினகரன் சொர்க்கத் துக்கிறை சுக்ரன்
சசிதரன் திக்குக் கத்தர கத்யன்
திசைமுகன் செப்பப் பட்டவ சிட்டன்  திரள்வேதஞ்
செகதலஞ் சுத்தப் பத்தியர் சித்தம்
செயலொழிந் தற்றுப் பெற்றவர் மற்றும்
சிவனும்வந் திக்கக் கச்சியில் நிற்கும்  பெருமாளே.

461. செடியுடம் பத்தித் தெற்றியி ரத்தஞ்
செறிநரம் பிட்டுக் கட்டிய சட்டஞ்
சிறைதிரண் டொக்கத் தொக்கவி னைப்பந்  தவிகாரம்
திமிரதுங் கத்தத் துத்திரை யெற்றுஞ்
செனனபங் கத்துத் துக்கக டற்கண்
திருகுரும் பைப்பட் டுச்சுழல் தெப்பங்  கரணாதி

குடிபுகும் பொக்கப் புக்கிலி றப்பின்
குடிலம்வெந் தொக்குக் கொட்டில்ம லத்தின்
குகைசுமந் தெட்டுத் திக்கிலு முற்றுந்  தடுமாறும்
குவலயங் கற்றுக் கத்தியி ளைக்குஞ்
சமயசங் கத்தைத் தப்பியி ருக்குங்
குணமடைந் துட்பட் டொக்க இருக்கும்  படிபாராய்

படிதருங் கற்புக் கற்பக முக்கண்
கொடிபசுஞ் சித்ரக் குத்தர முத்தம்
பணிநிதம் பத்துச் சத்தி யுகக்குங்  குமரேசா
பரவசங் கெட்டெட் டக்கர நித்தம்
பரவுமன் பர்க்குச் சித்திய ளிக்கும்
பரமர்வந் திக்கத் தக்க பதத்தன்  குருநாதா

தொடியிடும் பத்மக் கைக்கு மிடைக்குஞ்
சுருள்படும் பத்திப் பட்ட குழற்குந்
துகிர்கடைந் தொப்பித் திட்ட இதழ்க்குங்  குறமானின்
சுடர்படுங் கச்சுக் கட்டு முலைக்குந்
துவளுநெஞ் சத்தச் சுத்த இருக்கும்
சுரரும்வந் திக்கக் கச்சியில் நிற்கும்  பெருமாளே.

462. கனக்ரவுஞ் சத்திற் சத்தியை விட்டன்
றசுரர்தண் டத்தைச் செற்ற விதழ்ப்பங்
கயனைமுன் குட்டிக் கைத்தளை யிட்டும்  பரையாளுங்
கடவுளன் புற்றுக் கற்றவர் சுற்றும்
பெரியதும் பிக்கைக் கற்பக முற்றங்
கரதலம் பற்றப் பெற்ற வொருத்தன்  ஜகதாதை

புனவிளந் தத்தைக் கிச்சை யுரைக்கும்
புரவலன் பத்தர்க் குத்துணை நிற்கும்
புதியவன் செச்சைப் புட்ப மணக்கும்  பலபாரப்
புயனெனுஞ் சொற்கற் றுப்பிற கற்கும்
பசையொழிந் தத்தத் திக்கென நிற்கும்
பொருடொறும் பொத்தப் பட்டதொ ரத்தம்  பெறுவேனோ

அனல்விடுஞ் செக்கட் டிக்கய மெட்டும்
பொரவரிந் திட்டெட் டிற்பகு திக்கொம்
பணிதருஞ் சித்ரத் தொற்றை யுரத்தன்   திடமாக
அடியொடும் பற்றிப் பொற்கயி லைக்குன்
றதுபிடுங் கப்புக் கப்பொழு தக்குன்
றணிபுயம் பத்துப் பத்துநெ ரிப்புண்  டவனீடுந்

தனதொரங் குட்டத் தெட்பல டுக்குஞ்
சரியலன் கொற்றத் துக்ரவ ரக்கன்
தசமுகன் கைக்குக் கட்க மளிக்கும்  பெரியோனும்
தலைவியும் பக்கத் தொக்க விருக்குஞ்
சயிலமுந் தெற்குச் சற்குரு வெற்புந்
தணியலும் பெற்றுக் கச்சியில் நிற்கும்  பெருமாளே.

463. தெரியலஞ் செச்சைக் கொத்து முடிக்கும்
பரிதிகந் தச்சைச் சுற்ற நடத்துஞ்
சிறைவிடுஞ் சொர்க்கத் துச்சுர ரைக்கங்  கையில்வாழுஞ்
சிறுவனென் றிச்சைப் பட்டு பஜிக்கும்
படிபெறும் பத்திச் சித்ர கவித்வஞ்
சிறிதுமின் றிச்சித் தப்பரி சுத்தம்  பிறவாதே

பரிகரஞ் சுற்றத் தக்கப்ர புத்வம்
பதறியங் கட்டப் பட்டனர் தத்வம்
பலவையும் கற்றுத் தர்க்க மதத்வம்  பழியாதே
பரபதம் பற்றப் பெற்ற எவர்க்கும்
பரவசம் பற்றிப் பற்றற நிற்கும்
பரவ்ரதம் பற்றப் பெற்றிலன் மற்றென்  துயர்போமோ

சரியுடன் துத்திப் பத்திமு டிச்செம்
பணதரங் கைக்குக் கட்டிய நெட்டன்
தனிசிவன் பக்கத் தற்புதை பற்பந்  திரிசூலந்
தரிகரும் பொக்கத் தக்கமொ ழிச்சுந்
தரியரும் பிக்கப் பித்தத னத்தந்
தரிசுரும் பிக்குப் பத்தையெ வர்க்குந்  தெரியாத

பெரிய பண்டத்தைச் சத்திய பித்தன்
பிரிதியுண் கற்புப் பச்சையெ றிக்கும்
ப்ரபையள்தண் டிற்கைப் பத்ம மடப்பெண்  கொடிவாழ்வே
பிரமரண் டத்தைத் தொட்டதொர் வெற்பும்
பிளவிடுஞ் சத்திக் கைத்தல நித்தம்
பெருமிதம் பெற்றுக் கச்சியில் நிற்கும்  பெருமாளே.

464. புனமடந் தைக்குத் தக்க புயத்தன்
குமரனென் றெத்திப் பத்தர் துதிக்கும்
பொருளைநெஞ்சத்துக் கற்பனைமுற்றும்  பிறிதேதும்
புகலுமெண் பத்தெட் டெட்டியல் தத்வம்
சகலமும் பற்றிப் பற்றற நிற்கும்
பொதுவையென் றொக்கத் தக்கதொ ரத்தந்  தனைநாளும்

சினமுடன் தர்க்கித் துச்சிலு கிக்கொண்
டறுவருங் கைக்குத் திட்டொரு வர்க்குந்
தெரிவரும் சத்யத் தைத்தெரி சித்துன்  செயல்பாடித்
திசைதொறுங் கற்பிக் கைக்கினி யற்பந்
திருவுளம் பற்றிச் செச்சைமணக்குஞ்
சிறுசதங் கைப்பொற் பத்மமெ னக்கென்  றருள்வாயே

கனபெருந் தொப்பைக் கெட்பொரி யப்பம்
கனிகிழங் கிக்குச் சர்க்கரை முக்கண்
கடலைகண் டப்பிப் பிட்டொடு மொக்குந்  திருவாயன்
கவள துங் கக்கைக் கற்பக முக்கண்
திகழுநங் கொற்றத் தொற்றை மருப்பன்
கரிமுகன் சித்ரப் பொற்புகர் வெற்பன்  றனையீனும்

பனவியொன் றெட்டுச் சக்ரத லப்பெண்
கவுரிசெம் பொற்பட் டுத்தரி யப்பெண்
பழயஅண் டத்தைப் பெற்றம டப்பெண்  பணிவாரைப்
பவதரங் கத்தைத் தப்ப நிறுத்தும்
பவதிகம் பர்க்குப் புக்கவள் பக்கம்
பயில்வரம் பெற்றுக் கச்சியில் நிற்கும்  பெருமாளே.

465. கறையிலங் குக்ரச் சத்தி தரிக்குஞ்
சரவணன் சித்தத் துக்கு ளொளிக்குங்
கரவடன் கொற்றக் குக்குட வத்தன்  தனிவீரக்
கழலிடும் பத்மக் கட்செவி வெற்பன்
பழநிமன் கச்சிக் கொற்றவன் மற்றுங்
கடகவஞ் சிக்குக் கர்த்த னெனச்செந்  தமிழ்பாடிக்

குறையிலன் புற்றுக்  குற்றம றுக்கும்
பொறைகள்நந் தற்பப் புத்தியை விட்டென்
குணமடங் கக்கெட் டுக்குண மற்றொன்  றிலதான
குணமடைந் தெப்பற் றுக்களு மற்றுங்
குறியொடுஞ் சுத்தப் பத்தரி ருக்குங்
குருபதஞ் சித்திக் கைக்கருள்சற்றுங்  கிடையாதோ

பிறைகரந் தைக்கொத் துப்பணி மத்தந்
தலையெலும் பப்புக் கொக்கிற கக்கம்
பிரமனன் றெட்டற் கற்றதி ருக்கொன்
பிறவுநின் றொக்கத் தொக்கும ணக்குஞ்
சரணியம் பத்மக் கைக்கொடி முக்கண்
பெறுகரும் பத்தக் கத்தருள் நற்பங்  கயவாவி

திறைகொளுஞ் சித்ரக் குத்துமு லைக்கொம்
பறியுமந் தத்தைக் கைக்கக மொய்க்குந்
த்ரிபுரைசெம் பட்டுக் கட்டுநு சுப்பின்  திருவான
தெரிவையந் துர்க்கிச் சத்தியெ வர்க்குந்
தெரிவருஞ் சுத்தப் பச்சைநி றப்பெண்
சிறுவதொண் டர்க்குச் சித்தியளிக்கும்  பெருமாளே.

466. செறிதரும் செப்பத் துற்பல வெற்பும்
பிறிதுமங் கத்தைக் குற்ற விருப்புஞ்
சிகரிதுண் டிக்கக் கற்ற தனிச்செஞ்  சுடர்வேலும்
திரள்புயங் கொத்துப் பட்ட வனைத்துந்
தெளியநெஞ் சத்துப் புற்று மயக்கம்
திகழ்ப்ரபஞ் சத்தைப் புற்பத மொக்கும்  படிநாடும்

அறிவறிந் தத்தற் கற்றது செப்புங்
கடவுளன் பத்தர்க் கச்சம றுத்தன்
பருள்பவன் பொற்புக் கச்சியுள நிற்கும்  பெருமானென்
றவிழுமன் புற்றுக் கற்றும னத்தின்
செயலொழிந் தெட்டப் பட்டத னைச்சென்
றடைதரும்பக்வத்தைத்தமியெற்கென்  றருள்வாயே

குறியவன் செப்பப் பட்ட எவர்க்கும்
பெரியவன் கற்பிக் கப்படு சுக்ரன்
குலைகுலைந் துட்கச் சத்யமி ழற்றுஞ்  சிறுபாலன்
குதலையின் சொற்குத் தர்க்க முரைக்குங்
கனகனங் கத்திற் குத்தி நிணச்செங்
குடர்பிடுங் கித்திக் குற்ற முகச்சிங்  கமுராரி

பொறிவிடுந் துத்திக் கட்செவி யிற்கண்
துயில்கொளுஞ் சக்ரக் கைக்கிரி சுத்தம்
புயலெனும் பொற்புப் பெற்ற நிறத்தன்  ஜகதாதை
புனிதசங் கத்துக் கைத்தல நிர்த்தன்
பழையசந் தத்தைப் பெற்ற மடப்பெண்
புகலுகொண் டற்குச் சித்தி யளிக்கும்  பெருமாளே.

467. அரியயன் புட்பிக் கக்குழு மிக்கொண்
டமரர்வந் திக்கத் தட்டுரு வச்சென்
றவுணரங் கத்தைக் குத்திமு றித்தங்  கொருகோடி
அலகைநின் றொத்தித் தித்தி யறுத்தும்
பலவியங் கொட்டச் சக்கடி கற்றந்
தரியுடன் பற்றிக் குச்சரி மெச்சும்  படிபாடிப்

பரிமுகங் கக்கச் செக்கண் விழித்தும்
பவுரிகொண் டெட்டுத் திக்கையு டைத்தும்
படுகளம் புக்குத் தொக்கு நடிக்கும்  படிமோதிப்
படைபொருஞ் சத்திப் பத்ம நினைத்துஞ்
சரவணன் கச்சிப் பொற்ப னெனப்பின்
பரவியுஞ் சித்தத் துக்கு வரத்தொண்  டடைவேனோ

பெரியதண் செச்சைக் கச்சணி வெற்பும்
சிறியவஞ் சிக்கொத் தெய்த்த நுசுப்பும்
ப்ரிதியொழிந் தொக்கக் கைக்கிளை துத்தங்  குரலாதி
பிரிவில்கண் டிக்கப் பட்ட வுருட்டும்
கமுகமுஞ் சிற்பச் சித்ர முருக்கும்
பிரதியண் டத்தைப் பெற்றருள் சிற்றுந்  தியும்நீலக்

கரியகொண் டற்கொப் பித்த கதுப்புந்
திலதமுஞ் செப்பொற் பட்டமு முத்தின்
கனவடங் கட்டப் பட்ட கழுத்துந்  திருவான
கருணையுஞ் சுத்தப் பச்சை வனப்புங்
கருதுமன் பர்க்குச் சித்தி யளிக்குங்
கவுரியம் பைக்குப் புத்ர எவர்க்கும்  பெருமாளே.

468. கனிதருங் கொக்குக் கட்செவி வெற்பும்
பழநியுந் தெற்குச் சற்குரு வெற்புங்
கதிரையுஞ் சொற்குட்பட்ட திருச்செந்  திலும்வேலும்
கனவிலுஞ் செப்பத் தப்பு மெனைச்சங்
கடவுடம் புக்குத் தக்கவ னைத்துங்
களவுகொண் டிட்டுக் கற்பனை யிற்கண்  சுழல்வேனைப்

புனிதனம் பைக்குக் கைத்தல ரத்னம்
பழையகங் கைக்குற் றப்புது முத்தம்
புவியிலன் றைக்கற் றெய்ப்பவர் வைப்பென்  றுருகாஎப்
பொழுதும்வந்திக்கைக் கற்ற எனைப்பின்
பிழையுடன் பட்டுப் பத்தருள் வைக்கும்
பொறையையென் செப்பிச் செப்புவ தொப்பொன்  றுளதோதான்

அனனியம் பெற்றற் றற்றொரு பற்றுந்
தெளிதருஞ் சித்தர்க் குத்தெளி சிற்கொந்
தமலைதென் கச்சிப் பிச்சிம லர்க்கொந்  தளபாரை
அறவிநுண் பச்சைப் பொற்கொடி கற்கண்
டமுதினுந் தித்திக் கப்படு சொற்கொம்
பகிலஅண் டத்துற் பத்திசெய் முத்தின்  பொலமேருத்

தனிவடம் பொற்புப் பெற்றமு லைக்குன்
றிணைசுமந் தெய்க்கப் பட்ட நுசுப்பின்
தருணிசங் குற்றுத் தத்துதி ரைக்கம்  பையினூடே
தவமுயன் றப்பொற் றப்படி கைக்கொண்
டறமிரண் டெட்டெட் டெட்டும் வளர்க்கும்
தலைவிபங் கர்க்குச் சத்ய முரைக்கும்  பெருமாளே.

469. தசைதுறுந் தொக்குக் கட்டளை சட்டஞ்
சரியவெண் கொக்குக் கொக்க நரைத்தந்
தலையுடம் பெய்த்தெற் புத்தளைநெக்கிந்  த்ரியமாறித்
தடிகொடுந் திக்குத் தப்ப நடக்கும்
தளர்வுறுஞ் சுத்தப் பித்த விருத்தன்
தகைபெறும் பற்கொத் துக்களனைத்துங்  கழலாநின்

றசலருஞ் செச்செச் செச்செ யெனச்சந்
ததிகளும் சிச்சிச் சிச்சி யெனத்தங்
கரிவையும் துத்துத் துத்து வெனக்கண்  டுமியாமற்
றவருநிந் திக்கத் தக்க பிறப்பிங்
கலமலஞ் செச்சைச் சித்ர மணித்தண்
டையரவிந் தத்திற் புக்கடைதற்கென்  றருள்வாயே

குசைமுடிந் தொக்கப் பக்கரை யிட்டெண்
டிசையினுந் தத்தப் புத்தியை நத்துங்
குரகதங் கட்டிக் கிட்டி நடத்துங்  கதிர்நேமிக்
குலரதம் புக்கொற் றைக்கணை யிட்டெண்
டிரிபுரஞ் சுட்டுக் கொட்டை பரப்புங்
குரிசில்வந் திக்கக் கச்சியில் நிற்குங்  கதிர்வேலா

திசைமுகன் தட்டுப் பட்டெழ வற்குஞ்
சிகரியுஞ் குத்துப் பட்டு விழத்தென்
டிரையலங் கத்துப் புக்குல விச்சென்  றெதிரேறிச்
சிரமதுங் கப்பொற் கட்டிகை யிட்டன்
றவுணர்நெஞ் சிற்குத் திக்கறை கட்கஞ்
சிதறிநின் றெட்டிப் பொட்டெழ வெட்டும்  பெருமாளே.

470. புரைபடுஞ் செற்றக் குற்ற மனத்தன்
தவமிலன் சுத்தச் சத்ய அசத்யன்
புகலிலன் சுற்றச் செத்தையுள் நிற்குந்  துரிசாளன்
பொறையிலன் கொத்துத் தத்வ விகற்பஞ்
சகலமும் பற்றிப் பற்றற நிற்கும்
பொருளுடன் பற்றுச் சற்றுமில் வெற்றன்  கொடியேனின்

கரையறுஞ் சித்ரச் சொற்புகழ் கற்குங்
கலையிலன் கட்டைப் புத்தியன் மட்டன்
கதியிலன் செச்சைப் பொற்புய வெற்புங்  கதிர்வேலுங்
கதிரையுஞ் சக்ரப் பொற்றையு மற்றும்
பதிகளும் பொற்புக் கச்சியு முற்றுங்
கனவிலுஞ் சித்தத் திற்கருதிக்கொண்  டடைவேனோ

குரைதருஞ் சுற்றுச் சத்தச முத்ரங்
கதறிவெந் துட்கக் கட்புர துட்டன்
குலமடங் கக்கெட் டொட்டொழி யச்சென்  றொருநேமிக்
குவடொதுங் கச்சொர்க் கத்த ரிடுக்கங்
கெடநடுங் கத்திக் கிற்கிரி வர்க்கங்
குலிசதுங் கக்கைக் கொற்றவ னத்தங்  குடியேறத்

தரைவிசும் பைச்சிட் டித்த இருக்கன்
சதுர்முகன் சிட்சைப் பட்டொழி யச்சந்
ததமும்வந் திக்கப் பெற்றவர் தத்தம்  பகையோடத்
தகையதண் டைப்பொற் சித்ர விசித்ரந்
தருசதங் கைக்கொத் தொத்து முழக்குஞ்
சரணகஞ் சத்திற் பொற்கழல் கட்டும்  பெருமாளே.

471. சலமலம் விட்டத் தடம்பெ ருங்குடில்
சகலவி னைக்கொத் திருந்தி டும்படி
சதிரவு றுப்புச் சமைந்து வந்தொரு  தந்தைதாயும்
தரவரு பொய்க்குட் கிடந்த கந்தலி
லுறையு முயிர்ப்பைச் சமன்து ரந்தொரு
தனியி லிழுக்கப் படுந்த ரங்கமும்  வந்திடாமுன்

பலவுரு வத்தைப் பொருந்தி யன்றுயர்
படியு நெளிக்கப் படர்ந்த வன்கண
படமயில் புக்குத் துரந்து கொண்டிகல்  வென்றிவேலா
பரிமள மிக்கச் சிவந்த நின்கழல்
பழுதற நற்சொற் றெரிந்து அன்பொடு
பகர்வதி னிச்சற் றுகந்து தந்திட  வந்திடாயோ

சிலையு மெனப்பொற் சிலம்பை முன்கொடு
சிவமய மற்றுத் திடங்கு லைந்தவர்
திரிபுர மத்தைச் சுடுந்தி னந்தரி  திண்கையாளி
திருமகள் கச்சுப் பொருந்தி டுந்தன
தெரிவை யிரக்கத் துடன்பி றந்தவள்
திசைகளிலொக்கப் படர்ந்திடம்பொரு  கின்றஞானக்

கலைகள ணைக்கொத் தடர்ந்து வம்பலர்
நதிகொள கத்திற் பயந்து கம்பர்மெய்
கருக இடத்திற் கலந்தி ருந்தவள்  கஞ்சபாதங்
கருணை மிகுத்துக் கசிந்து ளங்கொடு
கருது மவர்க்குப் பதங்கள் தந்தருள்
கவுரி திருக்கொட் டமர்ந்த  இந்திரர்  தம்பிரானே.

472. தலைவலை யத்துத் தரம்பெ றும்பல
புலவர் மதிக்கச் சிகண்டி குன்றெறி
தருமயில் செச்சைப் புயங்க யங்குற  வஞ்சியோடு
தமனிய முத்துச் சதங்கை கிண்கிணி
தழுவிய செக்கச் சிவந்த பங்கய
சரணமும் வைத்துப் பெரும்ப்ரபந்தம்வி  ளம்புகாளப்

புலவ னெனத்தத் துவந்த ரந்தெரி
தலைவ னெனத்தக் கறஞ்செ யுங்குண
புருஷ னெனப்பொற் பதந்த ருஞ்சன  னம்பெறாதோ
பொறைய னெனப்பொய்ப் ப்ரபஞ்ச மஞ்சிய
துறவ னெனத்திக் கியம்பு  கின்றது
புதுமை யலச்சிற் பரம்பொ ருந்துகை  தந்திடாதோ

குலசயி லத்துப் பிறந்த பெண்கொடி
யுலகடை யப்பெற் றவுந்தி யந்தணி
குறைவற முப்பத் திரண்ட றம்புரி  கின்றபேதை
குணதரி சக்ரப் ப்ரசண்ட சங்கரி
கணபண ரத்னப் புயங்க கங்கணி
குவடு குனித்துப் புரஞ்சு டுஞ்சின  வஞ்சிநீலி

கலப விசித்ரச் சிகண்டி சுந்தரி
கடியவி டத்தைப் பொதிந்த கந்தரி
கருணைவி ழிக்கற் பகந்தி கம்பரி  யெங்களாயி
கருதிய பத்தர்க் கிரங்கு மம்பிகை
சுருதி துதிக்கப் படுந்த்ரி யம்பகி
கவுரி திருக்கொட் டமர்ந்த இந்திரர்  தம்பிரானே.

473. இதத்துப்பற் றிதழ்த்துப்பற் றிருட்பொக்கக் கருத்திட்டத்
தியக்கத்திற் றியக்குற்றுச்  சுழலாதே
எலுப்புச்சுக் கிலக்கத்தத் தடித்தொக்குக் கடத்தைப்பெற்
றெடுத்துப்பற் றடுத்தற்பத்  துழலாதே

சுதத்தத்தச் சதத்தத்தப் பதத்தர்க்குற் றவற்றைச்சொற்
றுவக்கிற்பட் டவத்தைப்பட்  டயராதே
துணைச்செப்பத் தலர்க்கொத்துற் பலச்செச்சைத் தொடைப்பத்திக்
கடப்பப்பொற் கழற்செப்பித்  தொழுவேனோ

கொதித்துக்குத் திரக்கொக்கைச் சதித்துப்பற் றிகைக்குட்பொற்
குலத்தைக்குத் திரத்தைக்குத்  தியவேலா
குறத்தத்தைக் கறத்தத்திக் குமுத்தத்தத் தமொக்கிக்குக்
குலத்துக்குக் குடக்கொற்றக்  கொடியோனே

கதச்சுத்தச் சுதைச்சித்ரக் களிற்றுக்கொற் றவற்குக்கற்
பகச்சொர்க்கப் புரப்பொற்பைப்  புரிவோனே
கடுக்கைக்கட் செவிக்கற்றைச் சடைப்பக்கக் கொடிக்கற்புக்
கடற்கச்சிப் பதிச்சொக்கப்   பெருமாளே.

474. எனக்குச்சற் றுனக்குச்சற் றெனக்கத்தக்க தவர்க்கிச்சைப்
பொருட்பொற்றட் டிடிக்கைக்குக்  குடில்மாயம்
எனக்கட்டைக் கிடைப்பட்டிட் டனற்சுட்டிட் டடக்கைக்குப்
பிறக்கைக்குத் தலத்திற்புக்  கிடியாமுன்

தினைக்குட்சித் திரக்கொச்சைக் குறத்தத்தைத் தனத்தைப்பொற்
பெறச்செச்சைப் புயத்தொப்பித்  தணிவோனே
செருக்சிச்சற் றுறுக்கிச்சொற் பிரட்டத்துட் டரைத்தப்பித்
திரட்டப்பிக் கழற்செப்பத்  திறல்தாராய்

பனைக்கைக்கொக் கனைத்தட்டுப் படக்குத்திப் படச்சற்பப்
பணத்துட்கக் கடற்றுட்கப்  பொரும்வேலா
பரப்பற்றுச் சுருக்கற்றுப் பதைப்பற்றுத் திகைப்பற்
றுப் பலப்பப்பத் தருக்கொப்பித்  தருள்வாழ்வே

கனிக்குத்திக் கனைத்துச்சுற் றிடப்பச்சைக் கனப்பக்ஷிக்
கிடைப்புக்குக் களிப்புக்குத்  திரிவோனே
கலிக்கொப்பிற் சலிப்பற்றுக் கதிக்கொத்திட் டெழிற்சத்திக்
கடற்கச்சிப் பதில்சொக்கப்  பெருமாளே.

475. இறைச்சிப்பற் றிரத்தத்திட் டிசைக்கொக்கப் பரப்பப்பட்
டெலுப்புக்கட் டளைச்சுற்றிச்  சுவர்கோலி
எடுத்துச்செப் பெனக்கட்டிப் புதுக்குப்புத் தகத்திற்புக்
கெனக்குச்சற் றுனக்குச்சற்  றெனுமாசைச்

சிறைக்கொத்திப் பிறப்பிற்பட்
டுறக்கச்சொப் பனத்துற்றுத்
திகைக்கப்பட் டவத்தைப்பட்  டுழலாதுன்
திருப்பத்மத் திறத்தைப்பற்
றுகைக்குச்சித் திரத்தைச்சொற்
றிதக்கொற்றப் புகழ்ச்செப்பித்  திரிவேனோ

பிறைச்செக்கர்ப் புரைக்கொத்துச்
சடைப்பச்சைக் கொடிக்கிச்சைப்
பிறக்குற்றத் திருப்பக்கச்  சிவநாதர்
பெருக்கப்புத் தடக்கைக்கற்
பகத்தொப்பைக் கணத்துக்குப்
பிரச்சித்தக் கொடிக்குக்டக்  கொடியோனே

பறைக்கொட்டிக் களைச்சுற்றக்
குறட்செக்கட் கணத்திற்குப்
பலிக்குப்பச் சுடற்குத்திப்  பகிர்வேலா
பணப்பத்திக் கணத்துத்திப்
படுக்கைக்கச் சபத்திச்சைப்
படுக்கச்சிப் பதிச்சொக்கப்  பெருமாளே.

 
மேலும் திருப்புகழ் »
temple news
அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் முதலாம் பகுதி விநாயகர் துதி 1. கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரிகப்பிய ... மேலும்
 
temple news
66. மூளும்வினை சேர மேல்கொண்டி டாஐந்துபூதவெகு வாய மாயங்கள் தானெஞ்சில்மூடிநெறி நீதி யே துஞ்செ யாவஞ்சி  ... மேலும்
 
temple news
177. மந்தரம தெனவேசி றந்தகும்பமுலை தனிலேபு னைந்தமஞ்சள்மண மதுவேது லங்க  வகைபேசிமன்றுகமழ் தெருவீதி ... மேலும்
 
temple news
124. தகர நறுமலர் பொதுளிய குழலியர்கலக கெருவித விழிவலை படவிதிதலையி லெழுதியு மனைவயி னுறவிடு  வதனாலேதனையர் ... மேலும்
 
temple news
242. புமியதனிற் ப்ரபுவான புகலியில்வித் தகர்போல;அமிர்தகவித் தொடைபாட அடிமைதனக் கருள்வாயே;சமரிலெதிர்த் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar