Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்புகழ் பகுதி-10 திருப்புகழ் பகுதி-12 திருப்புகழ் பகுதி-12
முதல் பக்கம் » திருப்புகழ்
திருப்புகழ் பகுதி-11
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

23 மார்
2013
05:03

531. வடவையன லூடு புக்கு முழுகியெழு மாம திக்கு
மதுரமொழி சைக்கு  மிருநாலு
வரைதிசைவி டாது சுற்றி யலறுதிரை வாரி திக்கு
மடியருவ வேள்க ணைக்கு  மறவாடி

நெடுகனக மேரு வொத்த புளகமுலை மாத ருக்கு
நிறையுமிகு காத லுற்ற  மயல்தீர
நினைவினொடு பீலி வெற்றி மரகதக லாப சித்ர
நிலவுமயி லேறி யுற்று  வரவேணும்

மடலவிழு மாலை சுற்று புயமிருப தோடு பத்து
மவுலியற வாளி தொட்ட  அரிராமன்
மருகபல வான வர்க்கு மரியசிவ னார்ப டிக்க
மவுனமறை யோது வித்த  குருநாதா

இடையரியு லாவு முக்ர அருணகிரி மாந கர்க்கு
ளினியகுண கோபுரத்தி  லுறைவோனே
எழுபுவிய ளாவு வெற்பு முடலிநெடு நாக மெட்டு
மிடையுருவ வேலை விட்ட  பெருமாளே.

532. ஆலவிழி நீலத் தாலதர பானத்
தாலளக பாரக்  கொண்டலாலே
ஆரநகை யால்விற் போர்நுதலி னால்வித்
தாரநடை யால்நற்  கொங்கையாலே

சாலமய லாகிக் காலதிரி சூலத்
தாலிறுகு பாசத்  துன்பமூழ்கித்
தாழ்விலுயிர் வீழ்பட் டூழ்வினைவி டாமற்
சாவதன்மு னேவற்  கொண்டிடாயோ

சோலைதரு கானிற் கோலமற மானைத்
தோளிலுற வாகக்  கொண்டவாழ்வே
சோதிமுரு காநித் தாபழய ஞானச்
சோணகிரி வீதிக்  கந்தவேளே

பாலகக லாபக் கோமளம யூரப்
பாகவுமை பாகத்  தன்குமாரா
பாதமலர் மீதிற் போதமலர் தூவிப்
பாடுமவர் தோழத்  தம்பிரானே.

533. பேதகவி ரோதத் தோதகவி நோதப்
பேதையர்கு லாவைக்  கண்டுமாலின்
பேதைமையு றாமற் றேதமக லாமற்
பேதவுடல் பேணித்  தென்படாதே

சாதகவி காரச் சாதலவை போகத்
தாழ்விலுயி ராகச்  சிந்தையாலுன்
தாரைவடி வேலைச் சேவல்தனை யேனற்
சாரல்மற் மானைச்  சிந்தியேனோ

போதகம யூரப் போதகக டாமற்
போதருணை வீதிக்  கந்தவேளே
போதகக லாபக் கோதைமுது வானிற்
போனசிறை மீளச்  சென்றவேலா

பாதகப தாதிச் சூரன்முதல் வீழப்
பாருலகு வாழக்  கண்டகோவே
பாதமலர் மீதிற் போதமலர் தூவிப்
பாடுமவர் தோழத்  தம்பிரானே.

534. அமுது மூறுசொ லாகிய தோகையர்
பொருளு ளாரையெ னாணையு னாணையெ
னருகு வீடிது தானதில் வாருமெ  னுரைகூறும்
அசடு மாதர்கு வாதுசொல் கேடிகள்
தெருவின் மீதுகு லாவியு லாவிகள்
அவர்கள் மாயைப டாமல்கெடாமல்  நினருள்தாராய்

குமரி காளிவ ராகிம கேஸ்வரி
கவுரி மோடிசு ராரிநி ராபரி
கொடிய சூலிசு டாரணி யாமளி  மகமாயி
குறளு ரூபமு ராரிச கோதரி
யுலக தாரிஉ தாரி பராபரி
குருப ராரிவி காரி நமோகரி  அபிராமி

சமர நீலிபு ராரித னாயகி
மலைகு மாரிக பாலிந னாரணி
சலில மாரிசி வாயம னோகரி  பரையோகி
சவுரி வீரிமு நீர்விட போஜனி
திகிரி மேவுகை யாளிசெ யாளொரு
சகல வேதமு மாயின தாயுமை  யருள்பாலா

திமித மாடுசு ராரிநி சாசரர்
முடிக டோறுக டாவியி டேயொரு
சிலப சாசுகு ணாலிநி ணாமுண  விடும்வேலா
திருவு லாவுசொ ணேசர ணாமலை
முகிலு லாவுலி மானந வோநிலை
சிகர மீதுகு லாவியு லாவிய  பெருமாளே.

535. உருகு மாமெழு காகவு மேமயல்
பெருகு மாசையு ளாகிய பேர்வரி
லுரிய மேடையில் வார்குழல் நீவிய  வொளிமானார்
உடைகொள் மேகலை யால்முலை மூடியும்
நெகிழ நாடிய தோதக மாடியு
முவமை மாமயில் போல்நிற மேனிய  ருரையாடும்

கரவ தாமன மாதர்கள் நீள்வலை
கலக வாரியில் வீழடி யேனெறி
கருதொ ணாவதி பாதக னேசம  தறியாத
கசட மூடனை யாளவு மேயருள்
கருணை வாரிதி யேயிரு நாயகி
கணவ னேயுன தாளிணை மாமலர்  தருவாயே

சுருதி மாமொழி வேதியன் வானவர்
பரவு கேசனை யாயுத பாணிநல்
துளப மாலையை மார்பணி மாயவன்  மருகோனே
தொலைவி லாவசு ரேசர்க ளானவர்
துகள தாகவு மேயெதி ராடிடு
சுடரின் வேலவ னேயுல கேழ்வலம்  வருவோனே

அருணர் கோடியி னாரொளி வீசிய
தருண வாண்முக மேனிய னேயர
னணையு நாயகி பாலக னேநிறை  கலையோனே
அணிபொன் மேருயர் கோபுர மாமதி
ளதிரு மாரண வாரண வீதியு
ளருணை மாநகர் மேவியு லாவிய  பெருமாளே.

536. கரியுரி அரவ மணிந்த மேனியா
கலைமதி சலமு நிறைந்த வேணியர்
கனல்மழு வுழையு மமர்ந்த பாணியர்  கஞ்சமாதின்
கனமுலை பருகி வளர்ந்த காமனை
முனிபவர் கயிலை யமர்ந்த காரணர்
கதிர்விரி மணிபொ னிறைந்ததோளினர்  கண்டகாள

விரிவென வுனது ளுகந்த வேலென
மிகவிரு குழையு மடர்ந்து வேளினை
யணையவ ருயிரை விழுங்கி மேலும்வெ  குண்டுநாடும்
வினைவிழி மகளிர் தனங்கள் மார்புற
விதமிகு கலவிபொருந்தி மேனியு
மெழில்கெட நினைவு மழிந்து மாய்வதொ  ழிந்திடாதோ

எரிசொரி விழியு மிரண்டு வாளெயி
றிருபிறை சயில மிரண்டு தோள்முகி
லெனவரு மசுரர் சிரங்கள் மேருஇ  டிந்துவீழ்வ
தெனவிழ முதுகு பிளந்து காளிக
ளிடுபலி யெனவு நடந்து தாள்தொழ
எதிர்பொரு துதிர முகந்த வேகமு  கைந்தவேலா

அரிகரி யுழுவை யடர்ந்த வாண்மலை
அருணையி லறவு முயர்ந்த கோபுர
மதினுறை குமர அநந்த வேதமொ  ழிந்துவாழும்
அறுமுக வடிவை யொழிந்து வேடர்கள்
அடவியி லரிவை குயங்கள் தோய்புப
அரியர பிரம புரந்த ராதியர்  தம்பிரானே.

537. கனைகடல் வயிறுகு ழம்பி வாய்விட
வடதம னியகிரி கம்ப மாய்நட
கணபண விபரித கந்த காளபு யங்கராஜன்
கயிறென அமரர நந்த கோடியு
முறைமுறை யமுதுக டைந்த நாளொரு
கதியற வுலகைவி ழுங்கு மேகவொ  ழுங்குபோல

வினைமத கரிகளு மெண்டி சாமுக
கிரிகளு முறுகிட அண்ட கோளகை
வெடிபட எவரையும் விஞ்சி வேலிடு  நஞ்சுபோல
விடுகுழை யளவும ளந்து காமுக
ருயிர்பலி கவர்வுறு பஞ்ச பாதக
விழிவலை மகளிரொ டன்பு கூர்வதொ  ழிந்திடாதோ

முனைபெற வளையஅ ணைந்த மோகர
நிசிசரர் கடகமு றிந்து தூளெழ
முகிலென வுருவமி ருண்ட தாருக  னஞ்சமீன
முழுகிய திமிரத ரங்க சாகர
முறையிட இமையவர் தங்க ளூர்புக
முதுகிரி யுருவமு னிந்த சேவக  செம்பொன்மேரு

அனையன கனவித சண்ட கோபுர
அருணையி லுறையும ருந்து ணாமுலை
அபிநவ வனிதைத ருங்கு மாரநெ  ருங்குமால்கொண்
டடவியல் வடிவுக ரந்து போயொரு
குறமகள் பிறகுதி ரிந்த காமுக
அரியர பிரமபு ரந்த ராதியர்  தம்பிரானே.

538. இரவியு மதியுந் தெரிவுற எழுமம்
புவிதனி லினமொன்  றிடுமாதும்
எழில்புதல் வருநின் றழுதுள முருகும்
மிடர்கொடு நடலம்  பலகூறக்

கருகிய வுருவங் கொடுகனல் விழிகொண்
டுயிரினை நமனுங்  கருதாமுன்
கலைகொடு பலதுன் பமுமக லிடநின்
கழலிணை கருதும்  படிபாராய்

திருமரு வியதிண் புயனயன் விரியெண்
டிசைகிடு கிடவந்  திடுசூரன்
திணிபுய மதுசிந் திடஅலை கடலஞ்
சிடவலி யொடுகன்  றிடும்வேலா

அருமறை யவரந் தரமுறை பவரன்
புடையவ ருயஅன்  றறமேவும்
அரிவையு மொருபங் கிடமுடை யவர்தங்
கருணையி லுறையும்  பெருமாளே.

539. விரகொடு வளைசங் கடமது தருவெம்
பிணிகொடு விழிவெங்  கனல்போல
வெறிகொடு சமனின் றுயிர்கொளு நெறியின்
றெனவிதி வழிவந்  திடுபோதில்

கரவட மதுபொங் கிடுமன மொடுமங்
கையருற வினர்கண்  புனல்பாயும்
கலகமும் வருமுன் குலவினை களையுங்
கழல்தொழு மியல்தந்  தருள்வாயே

பரவிடு மவர்சிந் தையர்விட முமிழும்
படவர வணைகண்  டுயில்மாலம்
பழமறை மொழிபங் கயனிமை யவர்தம்
பயமற விடமுண்  டெருதேறி

அரவொடு மதியம் பொதிசடை மிசைகங்
கையுமுற அனலங்  கையில்மேவ
அரிவையு மொருபங் கிடமுடை யவர்தங்
கருணையில் மருவும்  பெருமாளே.

540. இடமடு சுறவை முடுகிய மகர
மெறிகட லிடையொழு  திங்களாலே
இருவினை மகளிர் மருவிய தெருவி
லெரியென வருசிறு  தென்றலாலே

தடநடு வுடைய கடிபடு கொடிய
சரம்விடு தறுகண  நங்கனாலே
சரிவளை கழல மயல்கொளு மரிவை
தனிமல ரணையின  லங்கலாமோ

வடகுல சயில நெடுவுட லசுரர்
மணிமுடி சிதறஎ  றிந்தவேலா
மறமக ளமுத புளகித களப
வளரிள முலையம  ணந்தமார்பா

அடலணி விகட மரகத மயிலி
லழகுட னருணையி  னின்றகோவே
அருமறை விததி முறைமுறை பகரு
மரியர பிரமர்கள்  தம்பிரானே.

541. கெஜநடை மடவார் வசமதி லுருகா
கிலெசம துறுபாழ்  வினையாலே
கெதிபெற நினையா துதிதனை யறியா
கெடுசுக மதிலாழ்  மதியாலே

தசையது மருவீ வசையுட லுடனே
தரணியில் மிகவே  யுலைவேனோ
சததள மலர்வார் புணைநின கழலார்
தருநிழல் புகவே  தருவாயே

திசைமுக வனைநீள் சிறையுற விடுவாய்
திருநெடு கருமால்  மருகோனே
திரிபுர தகனா ரிடமதில் மகிழ்வார்
திரிபுரை யருள்சீர்  முருகோனே

நிசிசர ருறைமா கிரியிரு பிளவா
நிறையயில் முடுகா  விடுவோனே
நிலமிசை புகழார் தலமெனு மருணா
நெடுமதில் வடசார்  பெருமாளே.

542. அருக்கார் நலத்தைத் திரிப்பார் மனத்துக்
கடுத்தாசை பற்றித்  தளராதே
அடற்கா லனுக்குக் கடைக்கால் மிதித்திட்
டறப்பே தகப்பட்  டழியாதே

கருக்காரர் நட்பைப் பெருக்கா சரித்துக்
கலிச்சா கரத்திற்  பிறவாதே
கருத்தா லெனக்குத் திருத்தா ளளித்துக்
கலைப்போ தகத்தைப்  புகல்வாயே

ஒருக்கால் நினைத்திட் டிருக்கால் மிகுத்திட்
டுரைப்பார்கள் சித்தத்  துறைவோனே
உரத்தோ ளிடத்திற் குறத்தேனை வைத்திட்
டொளித்தோடும் வெற்றிக்  குமரேசா

செருக்கா தருக்கிச் சுரச்சூர் நெருக்கச்
செருச்சூர் மரிக்கப்  பொரும்வேலா
திறப்பூ தலத்திற் றிரட்சோண வெற்பிற்
றிருக்கோ புரத்திற்  பெருமாளே.

543. அருமா மதனைப் பிரியா தசரக்
கயலார் நயனக்  கொடியார்தம்
அழகார் புளகப் புழுகார் சயிலத்
தணையா வலிகெட்  டுடல்தாழ

இருமா நடைபுக் குரைபோ யுணர்வற்
றிளையா வுளமுக்  குயிர்சோர
எரிவாய் நரகிற் புகுதா தபடிக்
கிருபா தமெனக்  கருள்வாயே

ஒருமால் வரையைச் சிறுதூள் படவிட்
டுரமோ டெறிபொற்  கதிர்வேலா
உறைமா னடவிக் குறமா மகளுக்
குருகா றிருபொற்  புயவீரா

திருமால் கமலப் பிரமா விழியிற்
றெரியா வரனுக்  கரியோனே
செழுநீர் வயல்சுற் றருணா புரியிற்
றிருவி தியினிற்  பெருமாளே.

544. அழுதுமா வாவெனத் தொழுதுமூ டூடுநெக்
கவசமா யாதரக்  கடலூடுற்
றமைவில்கோ லாகலச் சமயமா பாதகர்க்
கறியொணா மோனமுத்  திரைநாடிப்

பிழைபடா ஞானமொய்ப் பொருள்பெறா தேவினைப்
பெரிய ஆதேசபுற்  புதமாய
பிறவிவா ராகரச் சுழியிலே போய்விழப்
பெறுவதோ நானினிப்  புகல்வாயே

பழைய பாகீரதிப் படுகைமேல் வாழ்வெனப்
படியுமா றாயினத்  தனசாரம்
பருகுமா றானனச் சிறுவசோ ணாசலப்
பரமமா யூரவித்  தகவேளே

பொழுதுசூழ் போதுவெற் பிடிபடா பார்முதற்
பொடிபடா வோடமுத்  தெறிமீனப்
புணரிகோ கோவெனச் சுருதிகோ கோவெனப்
பொருதவே லாயுதப்  பெருமாளே.

545. ஆனைவரிக் கோடிளநிர்ப் பாரமுலைச் சாரசைபட்
டாடைமறைத் தாடுமலர்க்  குழலார்கள்
ஆரவடத் தோடலையப் பேசிநகைத்  தாசைபொருட்
டாரையுமெத் தாகமயக்  கிடுமோகர்

சோனைமழைப் பாரவிழித் தோகைமயிற் சாதியர்கைத்
தூதுவிடுத் தேபொருளைப்  பறிமாதர்
தோதகமுற் றேழ்நரகிற் சேருமழற் காயனையுட்
சோதியொளிப் பாதமளித்  தருள்வாயே

தானதனத் தீதிமிலைப் பேரிகைகொட் டாசமலைச்
சாயகடற் சூரைவதைத்  திடுவோனே
தாளவியற் சோதிநிறக் காலினெழக் கோலியெடுத்
தாபரம்வைத் தாடுபவர்க்  கொருசேயே

தேனிரசக் கோவையிதழ்ப் பூவைகுறப் பாவைதனத்
தேயுருகிச் சேருமணிக்  கதிர்வேலா
சீரருணைக் கோபுரமுற் றானபுனத் தோகையுமெய்த்
தேவமகட் கோர்கருணைப்  பெருமாளே.

546. இடருக் கிடராகிய கொடுமைக் கணைமேல்வரு
மிறுதிச் சிறுகால்வரு  மதனாலே
இயலைத் தருகானக முயலைத் தருமேனியி
லெரியைத் தருமாமதி  நிலவாலே

தொடரக் கொடுவாதையி லடையக் கரைமேலலை
தொலையத் தனிவீசிய  கடலாலே
துணையற் றணிபூமல ரணையிற் றனியேனுயிர்
துவளத் தகுமோதுயர்  தொலையாதோ

வடபொற் குலமேருவின் முடுகிப் பொருசூரனை
மடியச் சுடஏவிய  வடிவேலா
மறவக் குலமாமொரு குறமெய்த் திருமாமகள்
மகிழப் புனமேவிய  மயில்வீரா

அடரப் படர்கேதகை மடலிற் றழைசேர்வய
லருணைத் திருவீதியி  லுறைவோனே
அவனித் திருமாதொடு சிவனுக் கிமையாவிழி
அமரர்க் கரசாகிய  பெருமாளே.

547. இமராஜனி லாவதெ றிக்குங்  கனலாலே
இளவாடையு மூருகொ றுக்கும்  படியாலே
சமராகிய மாரனெ டுக்குங்  கணையாலே
தனிமானுயிர் சோரும தற்கொன்  றருள்வாயே

குமராமுரு காசடி லத்தன்  குருநாதா
குறமாமக ளாசைத ணிக்குந்  திருமார்பா
அமராவதி வாழ்வம ரர்க்கன்  றருள்வோனே
அருணாபுரி வீதியி னிற்கும்  பெருமாளே.

548. இரத சுரதமுலை களுமார்பு குத்த நுதல்வேர் வரும்ப
அமுத நிலையில்விர லுகிரேகை தைக்க மணிபோல் விளங்க
இசலி யிசலியுப ரிதலிலை யுற்று இடைநூல் நுடங்க வுளமகிழ்ச் சியினோடே

இருவ ருடலுமொரு வுருவாய் நயக்க முகமே லழுந்த
அளக மவிழவனை களுமே கலிக்க நயனார விந்த
லகரி பெருகஅத ரமுமே யருத்தி முறையே யருந்த உரையெழப் பரிவாலே

புருவ நிமிரஇரு கணவாள் நிமைக்க வுபசார மிஞ்ச
அவச கவசமள வியலே தரிக்க அதிலே யநந்த
புதுமை விளையஅது பரமா பரிக்க இணைதோளு மொன்றி அதிசுகக் கலையாலே

புளக முதிரவிர கமென்வாரி தத்த வரைநாண் மழுங்க
மனமு மனமுமுரு கியெயாதரிக்க வுயிர்போலுகந்து
பொருளதளவுமரு வுறுமாய வித்தை விலைமாதர் சிங்கி விடஅருட் புரிவாயே

பரவு மகரமுக ரமுமேவ லுற்ற சகரால் விளைந்த
தமர திமிரபிர பலமோக ரத்ன சலராசி கொண்ட
படியை முழுதுமொரு நொடியே மதித்து வலமாக வந்து சிவனிடத் தமர்சேயே

பழநி மிசையிலிசை யிசையே ரகத்தில் திருவாவினன்கு
டியினில் பிரமபுர மதில்வாழ் திருத்த ணிகையூடு மண்டர்
பதிய முதியகதி யதுநாயெ னுக்கு முறவாகி நின்று கவிதையைப் புனைவோனே

அரியு மயனுமம ரருமாய சிட்ட பரிபால னன்ப
ரடையு மிடரைமுடு கியெநூற் துட்ட கொலைகார ரென்ற
அசுரர் படையையடை யவும்வேர றுத்த அபிராம செந்தி லுரகவெற் புடையோனே

அருண கிரணகரு ணையபூர ணச்ச ரணமே லெழுந்த
இரண கரணமுர ணுறுசூர னுட்க மயிலேறு கந்த
அருணை யிறையவர்பெ ரியகோ புரத்தில் வடபா லமர்ந்த அறுமுகப் பெருமாளே.

549. இரவுபற் பலகாலும்  ;  இயலிசைமுத் தமிழ்கூறித்
திரமதனைத் தெளிவாகத்  ; திருவருளைத் தருவாயே
பரகருணைப் பெருவாழ்வே ; பரசிவதத் துவஞானா
அரனருள்சற் புதல்வோனே - அருணகிரிப் பெருமாளே.

550. இருவர் மயலோ அமளி விதமோ
எனென செயலோ  அணுகாத
இருடி அயன்மா லமர ரடியா
ரிரையு மொலிதா  னிவைகேளா

தொருவ னடியே னலறு மொழிதா
னொருவர் பரிவாய்  மொழிவாரோ
உனது பததூள் புவன கிரிதா
னுனது கிருபா  கரமேதோ

பரம குருவா யணுவி லசைவாய்
பவன முதலா  கியபூதப்
படையு முடையாய் சகல வடிவாய்
பழைய வடிவா  கியவேலா

அரியு மயனோ டபய மெனவே
அயிலை யிருள்மேல்  விடுவோனே
அடிமை கொடுநோய் பொடிகள் படவே
அருண கிரிவாழ்  பெருமாளே.

551. இருவினை யஞ்ச மலவகை மங்க
இருள்பிணி மங்க  மயிலேறி
இனவரு ளன்பு மொழியக டம்பு
வினதக முங்கொ  டளிபாடக்

கரிமுக னெம்பி முருகனெ னண்டர்
களிமலர் சிந்த  அடியேன்முன்
கருணைபொ ழிந்து முகமும லர்ந்து
கடுகிந டங்கொ  டருள்வாயே

திரிபுர மங்க மதனுடல் மங்க
திகழ்நகை கொண்ட  விடையேறிச்
சிவம்வெளி யங்க ணருள்குடி கொண்டு
திகழந டஞ்செய்  தெமையீண

அரசியி டங்கொள் மழுவுடை யெந்தை
அமலன்ம கிழ்ந்த  குருநாதா
அருணைவி லங்கல் மகிழ்குற மங்கை
அமளிந லங்கொள்  பெருமாளே.

552. இருவினை யூண்ப சும்பை கருவிளை கூன்கு டம்பை
யிடரடை பாழ்ம்பெ தும்ப  கிதவாரி
இடைதிரி சோங்கு கந்த மதுவது தேங்கு கும்ப
மிரவிடை தூங்கு கின்ற  பிணநோவுக்

குருவியல் பாண்ட மஞ்சு மருவிய கூண்டு நெஞ்சொ
டுயிர்குடி போங்கு ரம்பை  யழியாதென்
றுலகுட னேன்று கொண்ட கருமபி ராந்தொ ழிந்து
னுபயய தாம்பு யங்க  ளடைவேனோ

அருணையி லோங்கு துங்க சிகரக ராம்பு யங்க
ளமரர் குழாங்கு விந்து  தொழவாழும்
அடியவர் பாங்க பண்டு புகலகி லாண்ட முண்ட
அபிநவ சார்ங்க கண்டன்  மருகோனே

கருணைம்ரு கேந்த்ர அன்ப ருடனுர கேந்த்ரர் கண்ட
கடவுள்ந டேந்த்ரா மைந்த  வரைசாடும்
கலபக கேந்த்ர தந்த்ர அரசநி சேந்த்ர கந்த
கரகுலி சேந்த்ரர் தங்கள்  பெருமாளே.

553. இருளளக மவிழமதி போத முத்த ரும்ப
இலகுகயல் புரளஇரு பார பொற்ற னங்கள்
இளகஇடை துவளவளை பூச லிட்டி ரங்க  எவராலும்
எழுதரிய கலைநெகிழ ஆசை மெத்த வுந்தி
யினியசுழி மடுவினிடை மூழ்கி நட்பொ டந்த
இதழமுது பருகியுயிர் தேக மொத்தி ருந்து  முனிவாறி

முருகுகமழ் மலரமளி மீதி னிற்பு குந்து
முகவனச மலர்குவிய மோக முற்ற ழிந்து
மொழிபதற வசமழிய ஆசை யிற்க விழ்ந்து  விடுபோதும்
முழுதுணர வுடையமுது மாத வத்து யர்ந்த
பழுதில்மறை பயிலுவஎ னாத ரித்து நின்று
முனிவர்சுரர் தொழுதுருகு பாத பத்ம மென்று  மறவேனே

ஒருசிறுவன் மணமதுசெய் போதி லெய்த்து வந்து
கிழவடிவு கொடுமுடுகி வாச லிற்பு குந்து
உலகறிய இவனடிமை யாமெ னக்கொ ணர்ந்து  சபையூடே
ஒருபழைய சருகுமடி ஆவ ணத்தை யன்று
உரமொடவ னதுவலிய வேகி ழிக்க நின்று
உதறிமுறை யிடுபழைய வேத வித்தர்தந்த  சிறியோனே

அரியவுடு பதிகடவி யாட கச்சி லம்பொ
டழகுவட மணிமுடிவி யாள மிட்ட ழுந்த
அமரரொடுபலர் முடுகி ஆழியைக்கடைந்து  அமுதாக
அருளுமரி திருமருக வார ணத்தை யன்று
அறிவினுட னொருகொடியி லேத ரித்து கந்த
அருணகிரி நகரிலெழு கோபு ரத்த மர்ந்த  பெருமாளே.

554. இறுகு மணிமுலை மருவு தரளமு
மெரியு முமிழ்மதி  நிலவாலே
இரவி யெனதுயிர் கவர வருகுழ
லிசையி லுறுகட  லலையாலே

தறுகண் ரதிபதி மதனன் விடுகொடு
சரமி லெளியெனு  மழியாதே
தருண மணிபொழி லருணை நகருறை
சயில மிசையினில்  வரவேணும்

முறுகு திரிபுர மறுகு கனலெழ
முறுவ லுடையவர்  குருநாதா
முடிய கொடிமுடி  யசுரர் பொடிபட
முடுகு மரகத  மயில்வீரா

குறவர் மடமக ளமுத கனதன
குவடு படுமொரு  திருமார்பா
கொடிய சுடரிலை தனையு மெழுகடல்
குறுக விடவல  பெருமாளே.

555. உலையிக லொத்த வுடலினனல் பற்றி
யுடுபதியை முட்டி  யமுதூற
லுருகிவர விட்ட பரமசுக முற்று
வுனதடியை நத்தி  நினையாமற்

சிலைநுதலி லிட்ட திலதமவிர் பொட்டு
திகழ்முகவர் முத்து  நகையாலே
சிலுகுவலை யிட்ட மயல்கவலை பட்டு
திருடனென வெட்கி  யலைவேனோ

கலைகனக வட்ட திமிலைபறை கொட்ட
கனகமயில் விட்ட  கதிர்வேலா
கருதலரின் முட்டி கருகிவரு துட்ட
கதவமண ருற்ற  குலகாலா

அலைகடலு டுத்த தலமதனில் வெற்றி
அருணைவளர் வெற்பி  லுறைவோனே
அசுரர்களை வெட்டி யமரர்சிறை விட்டு
அரசுநிலை யிட்ட  பெருமாளே.

556. கடல்பரவு தரங்க மீதெழு  திங்களாலே
கருதிமிக மடந்தை மார்சொல்வ  தந்தியாலே
வடவனலை முனிந்து வீசிய  தென்றலாலே
வயலருணையில் வஞ்சி போதந  லங்கலாமோ

இடமுமையை மணந்த நாதரி  றைஞ்சும்வீரா
எழுகிரிகள் பிளந்து வீழஎ  றிந்தவேலா
அடலசுரர் கலங்கி யோடமு  னிந்தகோவே
அரிபிரம புரந்த ராதியர்  தம்பிரானே.

557. கமலமுகப் பிறைநுதல்பொற் சிலையெனவச் சிரகணைநற்
கயலெனபொற் சுழலும்விழிக்  குழல்கார்போல்
கதிர்தரளொப் பியதசனக் கமுகுகளப் புயகழைபொற்
கரகமலத் துகிர்விரலிற்  கிளிசேருங்

குமரிதனத் திதலைமலைக் கிசலியிணைக் கலசமெனக்
குவிமுலைசற் றசையமணிக்  கலனாடக்
கொடியிடைபட் டுடைநடைபொற் சரணமயிற் கெமனமெனக்
குனகிபொருட் பறிபவருக்  குறவாமோ

திமிலையுடுக் குடன்முரசுப் பறைதிமித் திமிதிமெனட்
டிமிடிமிடிட் டிகுர்திமிதித்  தொலிதாளம்
செககணசெக் கணகதறத் திடுதிடெனக் கொடுமுடியெட்
டிகைசிலைபட் டுவரிபடச்  சிலைகோடித்

துமிலவுடற் றசுரர்முடிப் பொடிபடரத் தமுள்பெருகத்
தொகுதசைதொட் டலகையுணத்  தொடும்வேலா
துவனிதினைப் புனமருவிக் குறமகளைக் களவுமயற்
சுகமொடணைத் தருணகிரிப்  பெருமாளே.

558. கமலமொட்டைக் கட்ட ழித்துக் குமிழியை
நிலைகு லைத்துப் பொற்க டத்தைத் தமனிய
கலச வர்க்கத் தைத்த கர்த்துக் குலையற  இளநீரைக்
கறுவி வட்டைப் பிற்று ரத்திப் பொருதப
சயம்வி ளைத்துச் செப்ப டித்துக் குலவிய
கரிம ருப்பைப் புக்கொ டித்துத் திறல்மத  னபிஷேகம்

அமலர் நெற்றிக் கட்ட ழற்குட் பொடிசெய்து
அதிக சக்ரப் புட்ப றக்கக் கொடுமையி
னடல்ப டைத்தச் சப்ப டுத்திச் சபதமொ  டிருதாளம்
அறைதல் கற்பித் துப்பொ ருப்பைப் பரவிய
சிறக றுப்பித் துக்க திர்த்துப் புடைபடு
மபிந வச்சித் ரத்த னத்துத் திருடிக  ளுறவாமோ

தமர மிக்குத் திக்க திர்க்கப் பலபறை
தொகுதொ குக்குத் தொத்தொ குக்குத் தொகுதொகு
தரிகி டத்தத் தத்த ரிக்கத் தரிகிட  எனவோதிச்
சவடு றப்பக் கப்ப ழொத்திப் புகையெழ
விழிக ளுட்செக் கச்சி வத்துக் குறளிகள்
தசைகள் பட்சித் துக்களித்துக் கழுதொடு  கழுகாட

அமலை யுற்றுக் கொக்க ரித்துப் படுகள
அசுர ரத்தத் திற்கு ளித்துத் திமியென
அடிந டித்திட் டிட்டி டித்துப் பொருதிடு  மயிலோனே
அழகு மிக்கச் சித்ர பச்சைப் புரவியி
னுலவு மெய்ப்ரத் யக்ஷ நற்சற் குருபர
அருணை யிற்சித் தித்தெ னக்குத் தெளிவருள்  பெருமாளே.

559. கரிமுகக் கடகளிற் றிதிககற் பகமதக்
கஜமுகத் தவுணனைக்  கடியானை
கடலையெட் பயறுநற் கதலியிற் கனிபலக்
கனிவயிற் றினிலடக்  கியவேழம்

அரிமுகத் தினனெதிர்த் திடுகளத் தினின்மிகுத்
தமர்புரிக் கணபதிக்  கிளையோனே
அயிலெடுத் தசுரர்வெற் பலைவுறப் பொருதுவெற்
றியைமிகுத் தறுமுகக்  குமரேசா

நரிமிகுக் கிளைகளைப் பரியெனக்க டிவளக்
கையில்பிடித் தெதிர்நடத்  திடுமீசன்
நடனமிப் படியிடத் தினுமிசைத் தரையினிற்
கரியுரித் தணிபவற்  கொருசேயே

துரிபெறச் சரிபொழிற் கனவயற் கழகுளத்
துரியமெய்த் தரளமொய்த்  திடவீறிச்
சுரர்துதித் திடமிகுத் தியல்தழைத் தருணையிற்
சுடரயிற் சரவணப்  பெருமாளே.

560. கருநி றஞ்சிறந் தகல்வன புகல்வன
மதன தந்திரங் கடியன கொடியன
கனக குண்டலம் பொருவன வருவன  பரிதாவும்
கடலு டன்படர்ந் தடர்வன தொடர்வன
விளையு நஞ்சளைந் தொளிர்வன பிளிர்வன
கணையை நின்றுநின் றெதிர்வன முதிர்வன  இளையோர்முன்

செருவை முண்டகஞ் சிறுவன் வுறுவன
களவு வஞ்சகஞ் சுழல்வன வுழல்வன
தெனன தெந்தனந் தெனதென தெனதென  எனநாதம்
தெரிசு ரும்பைவென் றிடுவன அடுவன
மருள்செய் கண்கள்கொண் டணைவர்ந்த முயிரது
திருகு கின்றமங் கையர்வச மழிதலை  யொழிவேனோ

மருவு தண்டைகிண் கிணிபரி புரமிலை
கலக லன்கலின் கலினென இருசரண்
மலர்கள் நொந்துநொந் தடியிட வடிவமு  மிகவேறாய்
வலிய சிங்கமுங் கரடியு முழுவையு
முறைசெ ழும்புனந் தினைவிளை யிதண்மிசை
மறவர் தங்கள்பெண் கொடிதனை யொருதிரு  வுளநாடி

அருகு சென்றடைந் தவள்சிறு பதயுக
சதத ளம்பணிந் ததிவித கலவியு
ளறம ருண்டுநெஞ் சவளுடன் மகிழ்வுட  னணைவோனே
அமரர் சங்கமுங் குடிபுக நொடியினில்
நிருதர் சங்கமும் பொடிபட அமர்செய்து
அருணை வந்துதென் திசைதனி லுறைதரு  பெருமாளே.

 
மேலும் திருப்புகழ் »
temple news
அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் முதலாம் பகுதி விநாயகர் துதி 1. கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரிகப்பிய ... மேலும்
 
temple news
66. மூளும்வினை சேர மேல்கொண்டி டாஐந்துபூதவெகு வாய மாயங்கள் தானெஞ்சில்மூடிநெறி நீதி யே துஞ்செ யாவஞ்சி  ... மேலும்
 
temple news
177. மந்தரம தெனவேசி றந்தகும்பமுலை தனிலேபு னைந்தமஞ்சள்மண மதுவேது லங்க  வகைபேசிமன்றுகமழ் தெருவீதி ... மேலும்
 
temple news
124. தகர நறுமலர் பொதுளிய குழலியர்கலக கெருவித விழிவலை படவிதிதலையி லெழுதியு மனைவயி னுறவிடு  வதனாலேதனையர் ... மேலும்
 
temple news
242. புமியதனிற் ப்ரபுவான புகலியில்வித் தகர்போல;அமிர்தகவித் தொடைபாட அடிமைதனக் கருள்வாயே;சமரிலெதிர்த் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar