Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பெரியகோவிலில் சித்திரை பெருவிழா! சமயபுரம் மாரியம்மன் பச்சைபட்டினி விரதம் நிறைவு! சமயபுரம் மாரியம்மன் பச்சைபட்டினி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செஞ்சி அருகே 11 சிலைகள் கண்டெடுப்பு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

08 ஏப்
2013
10:04

அவலூர்பேட்டை:செஞ்சி அருகே, திருநாதீஸ்வரர் கோவிலில், புனரமைப்புபணி மேற்கொண்டபோது, 11 சுவாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த தேவனூரில், சோழர் காலத்தில் கட்டப்பட்ட பழமையான திருநாதீஸ்வரர் கோவில் உள்ளது. பாழ்அடைந்த நிலையில் இருந்த, இந்த கோவிலை, கடந்த, இரண்டு மாதங்களுக்கு முன், இந்து சமய அறநிலைய துறை சார்பில், 96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், புனரமைப்புப் பணி மேற்கொள்ளப்பட்டது.இந்நிலையில், நேற்று காலை, 9:00 மணிக்கு, பணியாளர்கள் பணி மேற்கொண்ட போது, கருவறையின் பின்புறம் உள்ள இடத்தில் பள்ளம் தோண்டிய போது, சிலை ஒன்று கண்டறியப்பட்டது.தகவல் அறிந்ததும், துணை தாசில்தார் பூமிநாதன், அறநிலைய ஆய்வாளர் முருகேசன் மற்றும் வளத்தி போலீசார் கோவிலுக்குவந்தனர். அதிகாரிகள் மற்றும் கிராம மக்கள் முன்னிலையில், மேலும், தோண்டினர். அப்போது, வள்ளி, தெய்வானை, முருகன், நடராஜர், நான்கு அம்மன் சிலைகள், இரண்டு சின்ன சிலைகள், சுந்தரர் உள்ளிட்ட, 11  சுவாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. மேலும், ஒரு தங்க காசு மற்றும் செயின், மூன்று தட்டுகளுடன் கூடிய சரவிளக்குகள் நான்கு செட், வெள்ளி தலை கவசம், வெள்ளி கைகள், காதுகள், உடைந்த மூன்று தாம்பாளத்தட்டுகள் உள்ளிட்ட பொருட்களும் கிடைத்தன.பச்சை நிறத்தில், அதிக பருமனாக சிலைகள் இருந்ததால், இவை, ஐம்பொன் சிலைகளாக இருக்கலாம் என, கருதப்படுகிறது. சிலைகள் மற்றும் கிடைத்த அனைத்துப் பொருட்களும், செஞ்சி தாலுகா அலுவலகத்தில் வைக்கப்பட்டு உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: திருநாவாயா பாரதப்புழா நதியில் நடக்கும் கும்பமேளாவில், இன்று முத்தன் மற்றும் முத்திக்கு ... மேலும்
 
temple news
திருவாரூர்: மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.திருவாரூர் மாவட்டம், ... மேலும்
 
temple news
சிதம்பரம்: கடலூர் மாவட்டம், சிதம்பரம் ஓமக்குளத்தில் உள்ள நந்தனார் மடத்தில், திருநாளைப்போவார் என்கிற ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக பிரமமோற்சவத்தில் நடக்கும் தெப்பல் திருவிழாவை ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் பாலசுப்ரமணியர் கோவிலில் தை கிருத்திகை விழாவில் வள்ளி தேவசேனா சமேத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar