Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news யதோக்தகாரி பெருமாள் கோவில் ... பராசக்தி மாரியம்மன் கோயில் விழா: அக்னிச்சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்! பராசக்தி மாரியம்மன் கோயில் விழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மீனாட்சி திருக்கல்யாணம்: கட்டண சீட்டு பெற விண்ணப்பம் வெளியீடு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

09 ஏப்
2013
10:04

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம், வரும் 23ம் தேதி நடக்கிறது. கட்டண சீட்டு பெற, மாதிரி விண்ணப்ப படிவம் வெளியிடப்பட்டுள்ளது. கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: மீனாட்சி அம்மன் கோயிலில், சித்திரை திருவிழா, முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம், ஏப்., 23ல், காலை, 8:17 முதல், 8:47 மணி வரை நடக்கிறது. திருக்கல்யாணத்தை பொது மக்கள் தரிசனம் செய்ய வசதியாக, தெற்கு கோபுரம் வழியே, 6,000 பக்தர்களுக்கு, "முதலில் வருவோருக்கு முன்னுரிமை அடிப்படையில், இலவச தரிசன அனுமதி வழங்கப்படும். வடக்கு கோபுரம் வழியே, 4,000 பக்தர்களுக்கு, 500 ரூபாய் கட்டணத்திலும், மேற்கு கோபுரம் வழியே, 1,500 பக்தர்களுக்கு, 200 ரூபாய் கட்டணத்திலும், அனுமதி உண்டு. கட்டணம் செலுத்தி, அனுமதி சீட்டு பெற விரும்புபவர்கள், "செயல் அலுவலர், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், மதுரை என்ற முகவரிக்கு, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம், ஓட்டுனர் உரிமம், ரேஷன் கார்டு, ஆதார் கார்டு ஆகியவற்றில், ஏதாவது ஒன்றின் நகலுடன், மொபைல் எண், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒட்டி, வரும், 13ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஆன் லைனில், www.maduraimeenakshi.org என்ற முகவரியிலும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர், தேவைப்படும் கட்டண சீட்டு எண்ணிக்கையை குறிப்பிட்டு, விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தை பரிசீலித்து, எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் அனுப்பப்படும். தகவல் வந்த பின், விண்ணப்பதாரரின் ஒரிஜினல் அடையாள அட்டையை கோயில் அலுவலகத்தில் காண்பித்து, திருக்கல்யாணத்துக்கான நுழைவு சீட்டை பெற்றுக் கொள்ளலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வெள்ளைத் தாளில், பெயர், முகவரி எழுதி, சான்று நகல் இணைத்து, மொபைல் எண்ணை குறிப்பிட்டு , 500 ரூபாய் மதிப்பிலான கட்டண சீட்டுகளின் எண்ணிக்கை, 200 ரூபாய் மதிப்பிலான கட்டண சீட்டுகளின் எண்ணிக்கை, நாள், இடம் ஆகியவற்றை குறிப்பிட்டு, கையொப்பமிட்டு விண்ணப்பிக்க வேண்டும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. திருக்கல்யாண கட்டணச் சீட்டு வழங்குவது குறித்த இறுதி முடிவு, கோயில் நிர்வாகத்தை பொறுத்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அரியலூர் ; மாமன்னர் ராஜேந்திர சோழன் பிறந்த நாளை முன்னிட்டு அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் ஆடி பூரம் உற்சவம் ஐந்தாம் நாளான இன்று வெளிஆண்டாள் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் உள்ள ஸ்ரீமடம் முகாமில் காஞ்சி மடாதிபதிகள் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ... மேலும்
 
temple news
விருதுநகர்; ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ஆடிப்பூரத் திருவிழா மூன்றாம் நாள் இரவு வீதியுலாவில் தங்க ... மேலும்
 
temple news
வட மாநிலங்களில் உள்ள சிவ பக்தர்கள் சிராவண மாதத்தில், உத்தரகண்டில் உள்ள ஹரித்துவார், கோமுக் உள்ளிட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar