Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உச்சி மாகாளியம்மன் கோவிலில் ... செல்வ கணபதி கோவில்மகா கும்பாபிஷேக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இறைவன் நாமத்தை சொன்னால் குறை இருக்காது!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 மே
2013
10:05

திருப்பூர்: இறைவன் நாமத்தை சொன்னால், குறை என்பது இருக்காது, என ஆன்மிக சொற்பொழிவாளர் தேச மங்கையற்கரசி பேசினார். திருப்பூர் விஸ்வேஸ்வரர் மற்றும் ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவில் வைகாசி விசாகத் தேர்த்திருவிழா துவங்கியுள்ளது. விழாவையொட்டி, பெருமாள் கோவில் வளாகத்தில் ஆன்மிக சொற்பொழிவு நடந்து வருகிறது.குறை ஒன்றும் இல்லை கோவிந்தா என்ற தலைப்பில், சொற்பொழிவாளர் தேச மங்கையற்கரசி பேசியதாவது:தலைப்பில்லாமல் பேசக்கூடாது; குறிக்கோள் இல்லாமல் வாழக்கூடாது. உலகில் வாழக் கூடிய ஒவ்வொரு மனிதனுக்கும் இயல்பாக இருப்பது குறை. குறை இல்லாதவர்கள் இல்லை. ஒருவரை ஒருவர் பார்த்து குறை படுவர். தேவர், முனிவர்கள் கூட குறை இல்லாமல் வாழ்ந்தார்களா என்றால், இல்லை; அவர்களுக்கும் குறை இருந்தது.சிவபெருமான் தன்னுடைய எண்ணம் நிறைவேறாமல்,கட்டையாகிபோன இடமே, பூரி ஜெகநாதர் கோவில். ஆண்டுக்கு ஒரு தேர் செய்து விழா கொண்டாடுவர்; கட்டையால் செய்த கிருஷ்ணரை வைத்து வழிபடுவர். சிவனுக்கு, அம்மா, அப்பா, இல்லை என்ற குறை உண்டு. இதனால், பலரிடம் அடிபட்டார். எல்லோரும் ஏன் அடித்தார்கள் என நினைத்து பார்த்தார். தனக்கு, அம்மா இல்லை என புரிந்துகொண்ட அவர், காரைக்கால் அம்மையாரை அம்மாவாக ஏற்றுக் கொண்டாராம்.நாம் கடைசி கலியுகத்தில் உள்ளோம். கலியுகத்தில் எப்போது முக்தி கிடைக்கும். பக்தி கொண்டால் முக்தி கிடைக்கும் என்கின்றனர். தற்போது பக்தி அதிகமாக உள்ளது.பக்தி என்றால், மனதை பக்குவப்படுத்துவது. நாம் கடவுளின் நாமத்தை கூற வேண்டும். நாமத்தால் பலன் கிடைக்கும். பாம்பன் சுவாமிகள் நாமத்தின் மூலம் உயர்வு பெற்றவர்; முருகனிடம் நேருக்கு நேர் தரிசனம் பெற்றவர். சூதாட்டத்தில் திரவுபதியின் ஆடையை எதிரிகள் உருவியபோது, கோவிந்தா என்றார். கோவிந்தா என்றால், கஷ்டத்தை திரும்பத் தராதவர் என்று அர்த்தம். நாமத்தை ஜெபிக்கும்போது, மன நிறைவு உண்டாகும். கோவிந்தா என்ற வார்த்தை நிறைவான மனதை தரும். இறைவன் நாமத்தை சொன்னால், குறை என்பது இருக்காது.இவ்வாறு, அவர் பேசினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் பக்தர்களே நேரடியாக அபிேஷகம் ... மேலும்
 
temple news
காரைக்கால்: புதுச்சேரி மாநிலம், காரைக்கால் அடுத்த திருநள்ளார் ஸ்ரீதர்பாரண்யேஸ்வரர் கோவிலில், சனி ... மேலும்
 
temple news
 நாகர்கோவில்: அய்யா வைகுண்டரின் 194-ம் அவதார தின விழாவையொட்டி, நேற்று, நாகர்கோவிலில் இருந்து சுவாமி ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்:  மனிதன் உயர்ந்த லட்சியத்தோடு வாழ வேண்டும் என, உலகளாவிய ராமகிருஷ்ண மடம் மற்றும் ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக பிரம்மோற்சவ தெப்பல் உற்சவத்தில், சண்முக சுப்ரமணியர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar