Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அதிக நறுமணத்துடன் திருப்பதி லட்டு ... பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோயிலில் குருபெயர்ச்சி சிறப்பு ஹோமம் பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மழைவேண்டி பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் வசந்தோற்சவ திருவிழா
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

27 மே
2013
10:05

பேரூர்: மழைவேண்டி, பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் வசந்தோற்சவ விழா நடந்தது. பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் வசந்தோற்சவ விழா நடந்தது. முதல் இரு நாட்கள் வெண்பட்டாடை, வெள்ளை மலர்களாலும், அடுத்த மூன்று நாட்கள் சிவப்பு பட்டாடை, சிவப்பு மலர்களாலும், அடுத்த இரு நாட்கள் மஞ்சள் பட்டாடை, மஞ்சள் மலர்களாலும் , எட்டாவது நாள், பச்சைபட்டாடையும், மரிக்கொழுந்து முதலிய பச்சை இலைகளாலும் அலங்கரிக்கப்பட்டு, சோமாஸ்கந்தர், பச்சைநாயகி அம்மனுக்கு தினமும் சிறப்பு வழிபாடுகள் நடந்தது.தொடர்ந்து, வைகாசிவிசாகமும், பவுர்ணமியும் கூடிய நல்லநாளில் 9வது நாளாக கொண்டு பூச நட்சத்திரத்தில் வசந்தோற்சவ நிறைவு விழா, கடந்த 24ம்தேதி காலை ஸநபன பூஜையுடன் தொடங்கியது. பின்னர், மாலை 6.00 மணியளவில், பலவகையான மலர்கள், வாசனை திரவியங்களால் அலங்கரித்து, 4 வேதங்கள், சிவாகமம், திருமுறை உபசாரங்களோடு மகாதீபாராதனையும், பக்தர்களுக்கு பிரசாதமும் வினியோகிக்கப்பட்டது. பின்னர், அலங்கார கோலத்தில் சோமாஸ்கந்தர், பச்சைநாயகி அம்மன் தெப்பக்குளம் முன் நிறுத்தி, தீபாராதனை, கற்பூர வழிபாடு நடத்தப்பட்டு, தெப்பக்குளத்தில் விடப்பட்டது. கோவில் எதிரேயுள்ள அரச மரத்தடியில் 11 முறை வலம் வருதல் நிகழ்ச்சி நடந்தது. அப்போது, நான்கு வேதங்கள், சிவாகமம், பாகவதங்களை சிவாச்சாரியார்கள், ஓதுவார்கள் பாட சாமி திருவீதி உலா வந்து, திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளச் செய்யப்பட்டது. பூஜைக்கான நிகழ்ச்சிகளை, கோவில் சர்வசாதகம் சிவசண்முக சுந்தர குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள், ஓதுவார்கள் நடத்தினர்; இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆடி மாதம் அம்மனுக்குரிய மாதமாகப் போற்றப்படுகிறது. ஆடிச் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சில ... மேலும்
 
temple news
திருப்பதி;  திங்கள்கிழமை திருமலையில் பல்லவோத்ஸவம் கொண்டாடப்பட்டது. மைசூர் மகாராஜாவின் பிறந்தநாளை ... மேலும்
 
temple news
பண்ருட்டி; திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் திருபவித்ர உற்சவத்தில் உற்சவர் பெருமாள், ஸ்ரீதேவி, ... மேலும்
 
temple news
தாலி பாக்கியத்திற்காக சுமங்கலிகள் ஆடிமாதத்தில் மேற்கொள்வது அவ்வையார் நோன்பு. ஆடி செவ்வாயன்று ... மேலும்
 
temple news
கோபால்பட்டி; சாணார்பட்டி அருகே வி.மேட்டுப்பட்டி கதிர் நரசிங்க பெருமாள் கோயிலில் ஆடி மாத ஏகாதசி பூஜை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar