அவிநாசி:அவிநாசி ஒன்றிய, நகர இந்து முன்னணி சார்பில், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் நேற்று 108 தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடந்தது.மாவட்ட பொது செயலாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். நகர தலைவர் விஜயகுமார் முன்னிலை வகித்தார். மழை பொழிந்து, மக்கள் சுபிட்சமடைய வேண்டும்; மதமாற்ற தடுப்பு மாநாடு வெற்றி பெற வேண்டி, கோவில் முன்பகுதியில் பிரார்த்தனைசெய்யப்பட்டது. வேண்டுதலுக்காக, இந்து முன்னணியினர், 108 தேங்காய்களை உடைத்தனர்.நகர பொது செயலாளர் கார்த்திகேயன், தெற்கு ஒன்றிய அமைப்பாளர் முக்தீஸ்வரன், திருமுருகன்பூண்டி நகர தலைவர் சதாசிவம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.