Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியாழ்வார் ... கரிவரதராஜ பெருமாள் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திரவுபதியம்மன் கோவிலில் அம்மன் திருக்கல்யாணம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2013
10:06

வடகுப்பம்: திரவுபதியம்மன் உடனுறை தர்மராஜ சுவாமி கோவில் பிரம்மோற்சவ திருவிழாவில், முக்கிய நிகழ்ச்சியாக அம்மன் திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடந்தது. பள்ளிப்பட்டு அடுத்த, வடகுப்பம் கிராமத்தில், திரவுபதியம்மன் உடனுறை தர்மராஜா கோவில் உள்ளது. இக்கோவிலில், கடந்த ஆறு ஆண்டுகளாக பிரம்மோற்சவ விழா நடைபெறாமல் இருந்தது. உள்ளாட்சி தேர்தல் காரணமாக, தடைபட்டிருந்த இக்கோவில் திருவிழா, இந்த ஆண்டு நடத்த வடகுப்பம், சாமிநாயுடு கண்டிகை, முனுசாமி நாயுடு கண்டிகை மற்றும் கொல்லப்பள்ளி கிராம மக்கள் ஏற்பாடு செய்தனர். இதற்கு, ஒரு சிலர் மட்டும் எதிர்ப்பு தெரிவித்து, இதுதொடர்பாக, சண்டை, சச்சரவு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து, பள்ளிப்பட்டு வருவாய் துறையினர், நான்கு கிராம மக்களையும் அழைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தி, இந்த ஆண்டு திருவிழா நடத்த முடிவு செய்தனர். இதையடுத்து, கடந்த, 13ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. இம்மாதம், 23ம் தேதி வரை நடைபெறும் இந்த பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, கடந்த ஞாயிற்றுக் கிழமை பகாசுரன் வதம் நடந்தது. நேற்று முன்தினம் இரவு, 7:00 மணியளவில், திரவுபதியம்மன் திருக்கல்யாணம் நடந்தது. நேற்று, மங்கள வாத்தியங்கள் முழங்க, நான்கு கிராமத்தில் உள்ள தெருக்கள் வழியாக, அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. இன்று காலை, 10:00 மணிக்கு தபசு மரம் ஏறுதல் நடக்கிறது. இறுதி நாளான, 23ம் தேதி காலை, 11:00 மணியளவில், துரியோதனன் வதம் செய்யும் படுகளம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்றைய தினம் இரவு, 7:00 மணி அளவில், தீமிதி திருவிழாவும், அதைத் தொடர்ந்து அம்மன் திருவீதி உலாவும் நடைபெறுகிறது. விழாவை ஒட்டி தினமும் மதியம், 2:00 மணியளவில் மகாபாரத ஹரிகதா கலாட்சேபம் நடைபெறும். இரவு, 10:00 மணியளவில் மகாபாரத தெருக்கூத்து நிகழ்ச்சியும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் தர்மகர்த்தா வெங்கடேசலு நாயுடு, ஊராட்சித் தலைவர் வெங்கடரத்தினம் நாயுடு மற்றும் நான்கு கிராமங்களைச் சேர்ந்த விழாக் குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர். விழாவில், கலவரம் ஏற்படுவதை தடுக்கும் நோக்கில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கும்மிடிப்பூண்டி; கும்மிடிப்பூண்டி பிரசன்ன வெங்கடேச பெருமாள், கருட வாகனத்தில் வீதியுலா சென்று ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே இடைக்காட்டூரில் உள்ள சித்தர் இடைக்காடர் கோயிலில் நடைபெற்ற ஜெயந்தி ... மேலும்
 
temple news
திருப்பதி; ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்குப் பிறகு வரும் சதுர்த்தி தினம் நகுல சதுர்த்தியாக ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் கூவானை ஐயனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா நடந்தது.மதுரை மாவட்ட ... மேலும்
 
temple news
காரைக்கால்; திருநள்ளாறு சனி பகவான் கோவிலில் தருமபுர ஆதீனம் 27வது சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar