Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமாயணம் பகுதி - 28 ராமாயணம் பகுதி - 30 ராமாயணம் பகுதி - 30
முதல் பக்கம் » இதிகாசங்கள் » ராமாயணம்
ராமாயணம் பகுதி - 29
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

21 ஜூன்
2013
04:06

தூதர்கள் பரதனின் பாதம் தொட்டு வணங்கினர். துக்கச் செய்தியை மறைக்கச் சொல்லியிருந்ததால், முகத்தை தொய்வின்றி வைத்துக் கொண்டனர். அயோத்தியில் இருந்து கைகேயியின் தந்தை கேகய ராஜனுக்கு அனுப்பப்பட்டிருந்த காணிக்கை பொருட்களை கைகேயியின் சகோதரன் யுதாஜித் (பரதனின் தாய்மாமன்) முன் வைத்தனர். பரதனிடம், எங்கள் தலைவரே! வசிஷ்ட மாமுனிவரும், மற்ற மந்திரிகளும் தங்களை மிகவும் கேட்டதாகச் சொல்லச் சொன்னார்கள். அவசரமாக தங்களைப் பார்க்க வேண்டியிருப்பதால், உங்களை உடனே புறப்பட்டு வரச் சொன்னார்கள். இங்கே 30 கோடி பணம் பெறுமான பொருட்களைக் கொடுத்து அனுப்பியுள்ளார்கள். இதில் 20 கோடியை உங்கள் தாத்தாவுக்கும் (கேகய ராஜன்), பத்து கோடியை தங்கள் தாய்மாமனாருக்கும் கொடுக்கச் சொல்லியுள்ளார்கள், என்றனர். பரதனும் அப்படியே செய்தான். பின் ஊர் நடப்பைப் பற்றி தூதர்களிடம் கேட்டான். முதல் கேள்வியே இடியான கேள்வி. என் தந்தை எப்படி இருக்கிறார் தூதர்களே?தூதர்களால் என்ன பதில் சொல்ல முடியும்! அவர்கள் சிரித்து வைத்தனர். அடுத்த கேள்வி இன்னும் பலமாய் தாக்கியது. என் சகோதரர்கள் ராம லட்சுமணர் எப்படி இருக்கின்றனர்? இது தூதர்களை இன்னும் நெளிய வைத்தது.

அடுத்து கவுசல்யாதேவி, சுமித்திரா...இப்படி வரிசையாக கேட்டு விட்டு, பரதன் கேட்டானே ஒரு கேள்வி. ஆமாம்...எதற்கெடுத்தாலும் கோபப்படுபவளும், சுயநலத்தையே கருதுபவளும், பார்வையிலேயே எரித்து விடுபவளுமான என் தாய் கைகேயி எப்படி இருக்கிறாள்? என்றான். பரதன் அனைத்து ஞானமும் அறிந்தவன். ஏதோ ஒரு கெடுதி நடந்திருக்கிறது என்பதை மட்டும் புரிந்து கொண்ட அவன் இவ்வாறு கேள்வி ஒன்றைக் கேட்டு வைத்தான். தூதர்கள் இதற்கு மேலும் அவனைப் பேச விடவில்லை. தங்களுக்கு இடப்பட்ட கட்டளையின் படி சற்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, அன்புத்தலைவரே! தாங்கள் கேட்ட அனைவருமே நலமாக இருக்கிறார்கள்,. நீங்கள் புறப்படுங்கள். உங்களை ராஜலட்சுமி அழைக்கிறாள், என்றனர். பரதனுக்கு அது மனதில் ஆகவில்லை. அனைவரும் நலம் என அறிந்ததும் நிம்மதி பெருமூச்சோடு பேச்சை நிறுத்தி விட்டான். ஆனால், தூதர்களின் முகத்தில் இருந்த பரபரப்புக்கு காரணம் என்ன என்பதை மட்டும் அறிந்து கொள்ள முடியவில்லை. கேகய ராஜன் தன் பேரன் பரதனுக்கு, இரண்டாயிரம் காசுமாலை, ஆயிரத்து ஐநூறு குதிரைகள், நூற்றுக்கணக்கில் யானைகள், கோவேறு கழுதைகள், அந்தப்புரத்தில் வளர்க்கப்பட்ட நல்ல ஜாதி வேட்டை நாய்கள், ரத்தினக்கம்பளங்கள் என பல்வேறு பொருட்களை பரிசாக அளித்து, என் மகள் கைகேயி, உன் தந்தை, ராம லட்சுமணர்களை நான் ÷க்ஷமம் விசாரித்ததாக சொல், என்றார்.

யுதாஜித் தன் படைகளை பாதுகாப்பாக அனுப்பி வைத்தான். பரதன் தன் தம்பி சத்ருக்கனனையும் அழைத்துக் கொண்டு, ஊருக்கு புறப்பட்டான். ஏழுநாட்கள் பயணம் முடிந்து எட்டாவது நாள் சூர்யோதய வேளையில் அயோத்திக்குள் வந்தான். அயோத்தி நகரம் களை இழந்திருந்தது. வீடுகளில் சாணம் பூசப்படவில்லை. மாலை வேளையில் தோட்டங்களுக்கு சென்று இரவெல்லாம் விளையாடி மகிழ்ந்து, காலையில் வீடு திரும்பும் காதலர் கூட்டத்தைக் காணவில்லை. யானைகளிலும், குதிரைகளிலும் செல்லும் மக்கள் யாரையும் காணவில்லை. மரங்களில் இருந்து உதிரும் இலைகள் கூட ஏதோ கண்களிலிருந்து சிந்தும் கண்ணீர் போல காணப்பட்டது. பறவைகளின் ரீங்காரம் கேட்கவில்லை. அந்தணர்கள் வேதம் ஓதவில்லை. கோயில்களில் அர்ச்சனை எதுவும் நடக்கவில்லை. யாக சாலைகள் பூட்டிக் கிடந்தன. மக்கள் கண்ணீர் பெருக நின்றனர். பரதனுக்கு மனம் படபடத்தது. தூதர்களே! இந்நகரத்தின் நிலையைப் பார்த்தால், அரசர்கள் இறந்து போனால், எப்படியெல்லாம் ஒரு ஊர் இருக்குமோ, அதே போன்ற நிலைமை காணப்படுகிறது, என்றவன், அவர்களது பதிலுக்கு காத்திராமல், வைஜயந்தம் என அழைக்கப்படும் கோட்டை வாசலில் நுழைந்தான். வேகமாக அரண்மனைக்குள் சென்று, தந்தையின் அந்தப்புரத்தில் நுழைந்தான். அங்கே யாரும் இல்லை. உடனடியாக தன் தாய் கைகேயியின் அந்தப்புரத்திற்கு சென்றான்.

தங்க சிம்மாசனத்தில் வீற்றிருந்தாள் கைகேயி. மகனைக் கண்டதும் வேகமாக குதித்து வந்தாள். பரதா! வந்து விட்டாயா? பிராயாணம் எப்படி இருந்தது? உன் தாத்தாவும், மாமாவும் நலம் தானா? என்றாள். அதற்கு பதிலளித்த பரதன், அம்மா! தந்தையை எங்கே? அவரை அந்தப்புரத்தில் காணவில்லையே, என்றான். கைகேயி அவனிடம், மகனே! இந்த பூமிக்கு வந்த எல்லா உயிர்களும் கடைசியில் எந்த இடத்திற்கு செல்லுமோ, அவ்விடத்திற்கு மகாராஜா சென்றார். ஸாதுக்களுக்கெல்லாம் சாதுவான அவர் நற்கதியடைந்தார், என்றாள் சற்றே துக்கத்துடன். ஐயோ செத்தேன், எனக் கதறி விட்டான் பரதன். பூமியில் விழுந்து புரண்டான். கைகளை அடித்தான். தலையில் ஓங்கி ஓங்கி அறைந்து கொண்டான். தந்தையே! நீங்கள் எங்கு இருக்கிறீர்கள்? எப்போதும் பளபளக்கும் தங்களது தங்கக்கட்டில் கூட, நீங்கள் இல்லாமல் இன்று ஒளி இழந்ததே, என கதறிக் கொண்டே அங்குமிங்கும் ஓடினான். நெஞ்சே அடைத்தது. மூச்சு நின்று விடுவது போல ஒரு உணர்வு. அப்படியே மயங்கி சாய்ந்து விட்டான். கைகேயியும், பணிப்பெண்களும் அவனுக்கு மயக்கம் தெளிவித்தனர். ராஜாதி ராஜனே! நீ கலங்கலாமா? எழுந்திரு. நீ அனைவராலும் கொண்டாடப்படும் கோமான். சூரியனின் ஒளிக்கற்றைகள் எந்த நிலையிலும் அவனை விட்டு பிரியாமல், அவனோடு நிலையாக ஒட்டிக் கொண்டிருப்பது போல், நீயும் உறுதியான மனம் படைத்தவன். கலங்காதே, என்றாள்.

பரதனோ தன் அழுகையை நிறுத்தவே இல்லை. அம்மா! என் தந்தை, என் சகோதரன் ராமனுக்கு பட்டாபிஷேகம் செய்விக்க என்னை அழைத்தார் என்றல்லவா எண்ணி வந்தேன். அவரை நோய் என்பதே அணுகாதே. அப்படி என்ன கேடு கெட்ட நோய் வந்தது? அவர் நோய்வாய்ப்பட்டிருந்த காலத்தில் ராம லட்சுமணர்களுக்கு அருகிலிருந்து அவருக்கு சேவை செய்யும் பாக்கியம் கிட்டியதே! எனக்கு அதுவும் கிடைக்கவில்லையே! அவரை நான் பார்க்க வேண்டும். சாகும் முன் அவர் எனக்கு என்ன சேதி சொன்னார்? உடனே சொல்லுங்கள், என்றான். கைகேயி அவனிடம், பரதா! அவர் மரணமடையும் போது உன்னைப் பற்றி எதுவுமே பேசவில்லை. ராமா, லட்சுமணா, சீதா...என்றபடியே தான் உயிர் விட்டார். அவர்கள் ஊருக்கு திரும்பியதும், யார் அவர்களைப் பார்க்கிறார்களோ, அவர்களே பாக்கியசாலிகள் என்று சொன்னார், என்றாள். என்ன...ராம லட்சுமணர் சீதாபிராட்டி இங்கு இல்லையா? அவர்களை எங்கே? என்று அதிர்ச்சியுடன் கேட்ட பரதனை ராஜ்யம் கிடைத்த நற்செய்தியைச் சொல்லி மகிழ வைக்கலாம் என எண்ணி, சதிகாரி கைகேயி நடந்த விபரங்களை ஒவ்வொன்றாய் சொன்னாள். அதைக் கேட்டு பரதன் பற்களை நறநறவென கடித்தான். சே! நீயும் ஒரு தாயா? என்றதும், வெடவெடத்து போனாள் கைகேயி.

 
மேலும் இதிகாசங்கள் ராமாயணம் »
temple news

ராமாயணம் பகுதி-1 நவம்பர் 08,2010

தெய்வங்களைக் குறித்து வால்மீகி முனிவருக்கு ஏக குழப்பம். பல தெய்வங்களின் பெயர்களை சொல்கிறார்களே. ... மேலும்
 
temple news

ராமாயணம் பகுதி-2 நவம்பர் 08,2010

குழந்தை இல்லாத கவலை தசரதரை மிகவும் வாட்டியது. அவருக்கு கவுசல்யா என்ற அன்புமிகுந்த மனைவி முதலில் ... மேலும்
 
temple news

ராமாயணம் பகுதி-3 நவம்பர் 08,2010

தசரத சக்கரவர்த்தி மகிழ்ச்சிக் கடலில் மூழ்கிப் போனார். தாயார்கள் தங்கள் செல்லக் குழந்தைகளை பார்த்து ... மேலும்
 
temple news

ராமாயணம் பகுதி-4 நவம்பர் 13,2010

தசரதரின் முன் வந்து நின்ற அந்த இளைஞன் வேறு யாருமல்ல... லட்சுமணன் தான்... தம்பி உடையான் படைக்கு அஞ்சான் ... மேலும்
 
temple news

ராமாயணம் பகுதி-5 நவம்பர் 13,2010

அந்த அழகு விழிகளை ராமனின் கண்களும் சந்திக்கத் தவறவில்லை. அந்த நீலவண்ணக் கண்ணைக் கொண்டவன், அவளை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar