Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமாயணம் பகுதி - 27 ராமாயணம் பகுதி - 29 ராமாயணம் பகுதி - 29
முதல் பக்கம் » இதிகாசங்கள் » ராமாயணம்
ராமாயணம் பகுதி - 28
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

21 ஜூன்
2013
04:06

பதைபதைப்புடன் தசரதரை அவரது 350 தேவியரும் அணுகினார்கள். சிலர் அவரைத் தொட்டு எழுப்பினர். சப்தமே வரவில்லை. அதன் பின் அவரை லேசாக அசைத்துப் பார்த்தனர். அப்போதும் எந்த உணர்வும் ஏற்படவில்லை. சந்தேகத்துடன் ஒரு ராணி அவரது இதயத்தில் காதை வைத்து கேட்டாள். இதயம் நின்று போயிருந்தது. உடல் குளிர்ந்து போய் விட்டது. தங்கள் அன்பிற்குரிய நாதன் காலமாகி விட்டார் என்று அவளுக்கு புரிந்து விட்டது. ஓவென கதறினாள். அவளது கதறலின் அர்த்தத்தை புரிந்து கொண்ட மற்ற தேவியரும் அலறினார்கள். இவ்வளவு நடந்தும் மயக்க நிலையில் கிடந்த பட்டத்தரசி கவுசல்யாவுக்கு எதுவுமே தெரியவில்லை. சுமித்ரா தான் சற்று சுதாரித்து என்ன நடந்தது என்பதை புரிந்து கொண்டாள். வேரற்ற மரம் போல விழுந்து விட்டாள். கவுசல்யாவை மயக்கம் தீரும் வகையில் தண்ணீர் தெளித்து எழுப்பினாள். இருவரும் தசரதரின் அருகில் ஓடினார்கள். பிராண நாதனே, எங்களை விட்டு பிரிந்து விட்டீர்களா? மகனையும் இழந்தோம். இப்போது உங்களையும் இழந்து விட்டோம்,என்று புலம்பினார்கள். மகாராஜா இறந்து விட்டார் என்ற தகவல் கைகேயிக்கும் சென்றது. அலறியடித்து ஓடி வந்து தனது நாதனின் பக்கத்தில் விழுந்து அவள் அரற்றியது அங்கிருந்தவர்களை கலங்க வைத்தது. தசரதரின் உறவினர்களும் கதறினார்கள். அனைவருக்கும் அனாதை ஆகி விட்டது போன்ற உணர்வு ஏற்பட்டது.

புத்திர சோகத்தாலும் கணவனை இழந்ததாலும் மிக அதிகமாக பாதிக்கப்பட்டவள் கவுசல்யாதேவி தான். சக்கரவர்த்தியின் தலையை தூக்கி தன் மடியில் அவள் போட்டு கொண்டாள். அருகிலிருந்து கைகேயியை பார்த்து இப்போது நீ அழுது புலம்பி என்னபயன். உன்னால் தானே இத்தனையும் நடந்தது. அவரைப்பார்த்து அழுவதற்கு உனக்கு என்ன உரிமை இருக்கிறது. இப்போதாவது உன் விருப்பம் நிறைவேறி விட்டதா? உன்னைப்போல துஷ்டப் பெண் இந்த உலகில் யாரும் இல்லை. அடிப்பாவி! இனிமேல் உனக்கு எந்த தொந்தரவும் இருக்காது. எனது மகன் காட்டில் இருக்கிறான். என் பர்த்தா சொர்க்கத்திற்கு போய் விட்டார். இனி நீ இந்த அயோத்தியை சுகமாக ஆண்டு கொண்டிரு. இனி நான் நீண்ட காலம் உயிரோடு இருக்க மாட்டேன். பணப்பிசாசே! கூனிக்கிழவியின் வார்த்தையை கேட்டு நம் குலத்தையே வேரோடு சாய்த்து விட்டாயே. என் மருமகளின் தந்தை ஜனக மகாராஜாவுக்கு நான் என்ன பதில் சொல்வேன். என் மகள் எங்கே என கேட்பாரே? ராத்திரி நேரத்தில் நம் வீட்டில் சிறு பூச்சியை கண்டால் கூட ராமனின் மார்பில் போய் ஒண்டிக்கொள்வாள் என் சீதை. அந்த உத்தமி இப்போது காட்டில் விலங்குகளின் மத்தியில் சிக்கி என்ன பாடு படுகிறாளோ? ஜனக மகாராஜாவுக்கு மகனும் மகளுமாக இருந்தவள் சீதை. அவள் காட்டிற்கு போனது தெரிந்தால், வயது முதிர்ந்த அவர் உயிரை விட்டாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை.

நம் சாஸ்திரங்கள் சொல்வதைக்கேள். ஒரு கணவன் தன்னை விட்டு பிரிந்து வேறு நாட்டிற்கு தொழில் நிமித்தமாக சென்றால் கூட, நமது பெண்கள் உடல் இளைத்து போவார்கள். அப்படிப்பட்ட பதிவிரதைகள், கணவன் இறந்து போனால் அவரோடு தானும் இறந்து போவாள். அப்படிப்பட்டவள் தான் உத்தமி என சாஸ்திரங்கள் சொல்கின்றன. அதுபோல் நானும் என் பர்த்தா அக்னியில் வேகும் போது அவரை ஆலிங்கனம் செய்து அவரோடு சொர்க்கத்திற்கு செல்வேன். நீ நன்றாக இரு, என்று கதறி தீர்த்தாள். கவுசல்யாவை பல வேலைக்காரிகள் ஒன்று சேர்ந்து தசரதரை விட்டு பிரித்து ஒரு அறைக்கு கூட்டி சென்று சமாதானம் செய்தார்கள். இதற்குள் வசிஷ்ட மாமுனிவர் வந்து விட்டார். அமைச்சர்கள் ராஜ சேவகர்கள் வேகமாக வந்தனர். தங்கள் ராஜாவின் உடலை ஒரு எண்ணை கொப்றைக்குள் வைத்து இறுதிக் காரியங்கள் செய்தனர். அரண்மனையில் ராமனும் லட்சுமணனும் இல்லை. பரதனும் சத்ருக்கனும் தங்கள் மனைவிமார் வீட்டிற்கு சென்றிருந்தார்கள். பிள்ளைகள் இல்லாத நிலையில் இறுதிக்காரியங்கள் எப்படி செய்வது என்ற பிரச்னை ஏற்பட்டது. இதற்குள் அயோத்தி மாநகர மக்களுக்கு மகாராஜாவின் இறப்பு செய்தி தெரிந்து விட்டது. அனைவரும் ஓடோடி வந்து அரண்மனை முன்பு நின்று அழுது தீர்த்தார்கள்.

கைகேயியை அனைவரும் நிந்தித்தனர். மகாராஜா இல்லாத நிலையில் ராஜ்ஜிய பரிபாலனத்தை உடனடியாக யாரிடமாவது ஒப்படைக்க வேண்டும் என்ற பேச்சும் முனிவர்கள் மத்தியில் உருவானது. மார்க்கண்டேயர், மவுத் கல்யர், வாமதேவர், காசியபர், கார்த்தியாயனர், கவுதமர், ஜாபாலி ஆகியோரும் அமைச்சர்களும் வசிஷ்டரிடம், மகாராஜா மரணமடைந்து விட்ட நிலையில்,ராம லட்சுமணர் காட்டில் இருக்கும் நிலையில், பரதனும் சத்ருக்கனும் கேகய நாட்டில் உள்ள ராஜகிருஹம் என்ற ஊரில் இருக்கும் நிலையில் யாராவது ஒருவர் இப்போதே அரசனாக வேண்டும். அரசன் இல்லாத நாட்டில் வருணன் மழை பெய்ய விடமாட்டான். அங்கே கல்மழை தான் பெய்யும் என்பது உள்ளிட்ட பல்வேறு கருத்துக்கள் பற்றி விவாதித்தார்கள். மகாராஜா தசரதரின் கடைசி உத்தரவை நிறைவேற்றும் வகையில் பரதனுக்கு ஆள் அனுப்ப முடிவு செய்தார்கள். சித்தார்த்தன், விஜயன், ஜெயந்தன், அசோகவர்த்தனன் ஆகிய சிறப்பிற்குரிய தூதர்களை வசிஷ்டர் வரவழைத்தார். தூதர்களே! அதிவேகமாக குதிரையில் சென்று ராஜகிருஹ நகரத்திலிருக்கும் பரத சத்ருக்கன்னரை அழைத்து வாருங்கள். மகாராஜா மரணமடைந்த தகவலை அவர்களிடம் சொல்ல வேண்டாம். உடனடியாக நானும் மற்ற மந்திரிகளும் அழைத்து வர சொன்னதாக மட்டும் சொல்லுங்கள். ராம லட்சுமணர், சீதா தேவியும் காட்டிலிருக்கும் விஷயத்தையும் சொல்ல வேண்டாம் என்று சொல்லி அனுப்பினார். தூதர்கள் அதிவேகமாக குதிரைகளில் புறப்பட்டனர்.

இதற்குள் பரதனும் அன்று இரவுகெட்ட கனவு ஒன்றை கண்டான். அந்த கனவால் ஏதேனும் கேடு உண்டாகுமோ என மனதில் நினைத்தான். அவன் கண்ட கனவு இது தான். தசரத மகாராஜா தலைமுடி விரிந்த கோலத்தில் அழுக்கான உடலுடன் ஒரு மலையின் உச்சியிலிருந்து பசுவின் சாணம் நிறைந்த ஒரு குளத்தில் குதித்து நீந்தினார். அடிக்கடி சிரித்தார். எண்ணையை அள்ளி அள்ளி குடித்தார். எள் கலந்த உணவை சாப்பிட்டார். சந்திரனும் ஆகாயத்தில் இருந்து பூமியில் விழுந்தது. கடல் திடீரென வற்றி போனது. பட்டத்து யானையின் கொம்பு ஒடிந்தது. பூமியில் வெடிப்பு ஏற்பட்டது. மலைகள் பிளந்து தீயை கக்கின. மரங்கள் பட்டு போயின. சாணம் நிறைந்த குளத்தில் இருந்து எழுந்த மகாராஜா, கருப்பு நிற உடையை அணிந்து கொண்டார். சில பெண்கள் அவரை சுற்றி நின்று கை கொட்டி சிரித்தார்கள். பிறகு மகாராஜா கழுதைகள் பூட்டப்பட்ட ஒரு தேரில் ஏறி தெற்கு நோக்கி பயணம் செய்தார். செவ்வாடை அணிந்த ஒரு ராட்சஷி பயங்கர முகத்துடன் மகாராஜாவை கட்டிப்போட்டாள். இந்த கனவை கண்ட பரதன் என்ன கேடு நடக்க போகிறதோ என பயந்து கொண்டிருந்தான். இந்த நேரத்தில்தான் அயோத்தியில் இருந்து தூதர்களும் வந்து சேர்ந்தனர். பரதனுக்கு அவர்களை பார்த்ததும் ஒருவகையில் நிம்மதியும், மற்றொரு வகையில் கனவு பலித்துவிட்டதோ என்ற அச்சமும் ஏற்பட்டது.

 
மேலும் இதிகாசங்கள் ராமாயணம் »
temple news

ராமாயணம் பகுதி-1 நவம்பர் 08,2010

தெய்வங்களைக் குறித்து வால்மீகி முனிவருக்கு ஏக குழப்பம். பல தெய்வங்களின் பெயர்களை சொல்கிறார்களே. ... மேலும்
 
temple news

ராமாயணம் பகுதி-2 நவம்பர் 08,2010

குழந்தை இல்லாத கவலை தசரதரை மிகவும் வாட்டியது. அவருக்கு கவுசல்யா என்ற அன்புமிகுந்த மனைவி முதலில் ... மேலும்
 
temple news

ராமாயணம் பகுதி-3 நவம்பர் 08,2010

தசரத சக்கரவர்த்தி மகிழ்ச்சிக் கடலில் மூழ்கிப் போனார். தாயார்கள் தங்கள் செல்லக் குழந்தைகளை பார்த்து ... மேலும்
 
temple news

ராமாயணம் பகுதி-4 நவம்பர் 13,2010

தசரதரின் முன் வந்து நின்ற அந்த இளைஞன் வேறு யாருமல்ல... லட்சுமணன் தான்... தம்பி உடையான் படைக்கு அஞ்சான் ... மேலும்
 
temple news

ராமாயணம் பகுதி-5 நவம்பர் 13,2010

அந்த அழகு விழிகளை ராமனின் கண்களும் சந்திக்கத் தவறவில்லை. அந்த நீலவண்ணக் கண்ணைக் கொண்டவன், அவளை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar