பதிவு செய்த நாள்
16
ஜூலை
2013
11:07
திருத்துறைப்பூண்டி: ராமர் கோவிலில், ஐந்தாமாண்டு கும்பாபிஷேக விழா நிறைவையொட்டி, ஷம்பத்ரா அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது.திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி நகரில் சீதா லட்சுமண அனுமத் சமேத ஸ்ரீராம பிரான் ஸ்வாமிக்கு, நேற்று முன்தினம் காலை, 7 மணிக்கு பகவத் அனுக்ஞையுடன், 17 புனிதநீர் கலசம் வைக்கப்பட்டு, சிறப்பு ஹோமம் நடந்தது. தொடர்ந்து ஸ்ரீராமர், சீதை, லட்சுமணர், பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு அபிஷேக ஆராதனை நடந்தது.பின்னர் மாலை, 3 மணிக்கு மூலவர் அலங்காரமும், ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தொடர்ந்து, ஸ்ரீராமர், சீதா திருக்கல்யாண உற்ஸவம் நடந்தது. இரவு, 7 மணிக்கு ஸ்வாமி திருவீதியுலா வந்து, பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதற்கான ஏற்பாட்டை யாதவ மஹா சபை சார்பில் நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் செய்திருந்தனர். விழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் திரளாக பங்கேற்று வழிபட்டனர்.