வத்திராயிருப்பில் நாராயணப்பெருமாள் கோயில் கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஜூலை 2013 11:07
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு சேதுநாராயணப்பெருமாள் கோயில் விழா, நாளை (ஜூலை17 ) கொடியேற்றத்துடன், துவங்குகிறது. வத்திராயிருப்பு ஊரின் மையப்பகுதியில் உள்ள இக்கோயில், இப்பகுதியை ஆண்ட மாறவர்மன் சுந்தரபாண்டியன் என்ற மன்னரது காலத்தில் கட்டப்பட்டது. முக்கியத்திருவிழாவாக பிரம்மோற்ஸவ விழா கொண்டாடப்படுவது வழக்கம். ஏழு நாட்கள் நடைபெறும் விழாவில், தினம் ஒவ்வொரு அலங்காரத்தில், சுவாமி எழுந்தருளி வீதியுலா செல்வார். நாளை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. ஏற்பாடுகளை கோயில் சேவாசமிதி டிரஸ்ட் தலைவர் ராஜகோபாலன், செயலாளர் நாராயணன், பொருளாளர் அழகர், நிர்வாகிகள், அறநிலையத்துறை நிர்வாக அதிகாரி சரவணன் செய்துள்ளனர்.