Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வடமதுரை திருவிழாவில் இன்று ... அமச்சியாரம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விநாயகர் சதுர்த்திக்கு தயாராகும் சிலைகள்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜூலை
2013
10:07

திருப்பூர்: திருப்பூரை அடுத்த அலகுமலையில், விநாயகர் சதுர்த்தி பிரதிஷ்டைக்காக, விநாயகர் சிலைகள் தயாராகி வருகிறது. இந்து முன்னணி சார்பில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்ட பகுதிகளில், ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும். வரும் செப்., 9ம் தேதி நடக்கும் சதுர்த்தி விழாவுக்காக, திருப்பூர் மாவட்டத்தில் 1,600; கோவை மாவட்டத்தில் 2 ஆயிரம், நீலகிரியில் 600, ஈரோடு மேற்கு மாவட்டத்தில் 600 சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன. சிலைகள் மூன்றரை, ஐந்தரை, ஏழரை, ஒன்பது அடி மற்றும் 11 அடி உயரத்தில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுகின்றன. விழுப்புரம் மாவட்டம் அரசூர் பகுதியை சேர்ந்த, 45 பேர் கொண்ட குழுவினர், அலகுமலையில், சிலை தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஜன., மாதம் துவங்கிய பணிகள், 90 சதவீதம் நிறைவடைந்து, சிலைகளுக்கு இயற்கை வர்ணம் பூசும் பணி நடக்கிறது. அன்ன வாகனம், மயில் வாகனம், கருட வாகனம், காமதேனு வாகனம், காளிங்க நர்த்தன (நாகம்) வாகனத்தில் அமர்ந்த விநாயகர் சிலைகளும், தாமரையில் அமர்ந்த கமல விநாயகர், ராஜ விநாயகர், கற்பக விநாயகர் என, 40க்கும் மேற்பட்ட வடிவங்களில் சிலைகள் தயாரிக்கப்படுகின்றன.

இந்து முன்னணி நிர்வாகிகள் கூறியதாவது: விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் நிறைவடையும். சதுர்த்தி விழாவுக்கு ஒரு நாள் முன்னதாக, அந்தந்த பகுதிகளுக்கு சிலைகள் அனுப்பி வைக்கப்படும். விழாவுக்கு பின், மூன்று நாட்கள், ஐந்து நாட்கள், ஏழு நாட்கள் கழித்து விசர்ஜனம் செய்யப்படும். காகித கூழ், கிழங்கு மாவு கொண்டு தயாரிக்கப்படுவதால், மீன்களுக்கு சிறந்த உணவாக பயன்படும். விவேகானந்தரின் 150வது பிறந்த நாளையொட்டி, அவரது ஆன்மிக கருத்துகளை பரப்பும் நோக்கத்தில், இந்தாண்டு விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படும், என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாஞ்சராத்திர தீபம் என்பது மகாவிஷ்ணு ஜோதி வடிவமாகத் தோன்றி, உலகைக் காத்த நாளைக் குறிக்கும் ஒரு தீப ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் மலை உச்சியில் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீப திருவிழாவையொட்டி, 2,668 அடி உயர ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீப திருவிழாவை ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் திருகார்த்திகை தீபத் திருவிழாவில் மகாதீபம் சொக்கப்பனை ஏற்றப்பட்டது.பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar