Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோயிலுக்கு வெறுங்கையுடன் செல்லக் ... இந்த பாட்டிக்கு லட்சம் ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பொறுமைசாலிகள் சக்தியில்லாதவர்களா!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜூலை
2013
05:07

*படித்தால் மட்டும்ஒருவனை பண்டிதன் என்று சொல்ல முடியாது. பொறுமை, விடாமுயற்சி, தர்மத்தை பின்பற்றுதல் ஆகிய குணங்களைக் கொண்டவனே நல்ல பண்டிதன்.
*மனதில் ஆசை இருந்தால் மட்டும் போதாது. அதைஅடைவதற்கான தகுதியும், முயற்சியும் இருந்தால் மட்டுமே எண்ணியதை பெற முடியும்.
*பிறர் கேட்டால் மட்டுமே பதில் சொல்லுங்கள். தானாகப் போய் வலிய எதையும் பிறருக்குச் சொல்லாதீர்கள்.
*ஒரு செயலைச்செய்ய வேண்டும் என்று தீர்மானித்து விட்டால், அதை ஆரம்பித்த பிறகு தயக்கம் கூடாது. மனதை வசப்படுத்தி முழுமூச்சாக செயலில் ஈடுபடுங்கள்.
*யார் ஒருவர் எல்லாரது நன்மையையும் விரும்புகிறாரோ, அவர் பசியில் உணவாய்இருக்கிறார்.
*கலக்கம் இல்லாத மனம் உடையவனாக இருங்கள். போற்றிப் புகழ்ந்தாலும், பழி தூற்றினாலும் சமபாவத்தில் இருப்பவனே சிறந்தவன்.
*இழிந்த செயல் மூலம் செல்வம் ஈட்ட முயலாதீர்கள். எல்லாம் தனக்குத் தெரியும் என்று ஒருபோதும் கர்வப்படுவது கூடாது.
*தன்னுடைய கடமையைச் செய்யாமல், காட்டில் காயும்நிலவாகவும், கடலில் பெய்யும் மழையாகவும் இருக்கிறான். அவனால் யாருக்கும் லாபமில்லை.
*பகைவனிடம் நட்பு பாராட்டுவதோ, நண்பனைப் பகைத்துக் கொண்டு கோபம் கொள்வதோ புத்திசாலியின் செயல் ஆகாது.
*நம்முடைய பலம், பலவீனம் இரண்டையும் சீர்தூக்கிப் பார்ப்பதே அறிவுள்ள செயல். நற்செயல்களைச் செய்வதில் தாமதம் கூடாது.
*ஒருவன் தன்னைச்சேர்ந்தவர்களுக்காக பாவச் செயல் செய்தாலும், அதற்கான பாவத்தை முழுமையாக அவனே அனுபவித்தாக வேண்டும்.
*ஆயுதத்தை உபயோகித்தால் ஒருவன் மட்டுமே இறப்பான். ஆனால், வேண்டாதஆலோசனையை வழங்கினால் ஒரு நாடே அழிந்துவிடும்.
*உலகம் பொறுமையுள்ளவனை சக்தியில்லாதவன் என்று நினைக்கலாம். ஆனால், அதை ஒரு குறையாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை.
*பிறரின் பொருளுக்கு ஆசைப்படுவது, அன்பு காட்டுபவரை அவமதிப்பது, வஞ்சகமாக பிறரை ஏமாற்றுவது ஆகிய குணங்களால் ஒருவன் நரகத்தை அடைவான்.
*அதிக தூக்கம்,பயம், சோம்பல், முயற்சியின்மை,பரபரப்பு, குரோத மனப்பான்மைஆகியவற்றால்ஒருவனிடமுள்ள செல்வம் அனைத்தும் கரைந்துவிடும்.
*நல்லெண்ணம், பேச்சில் இனிமை, இரக்கசிந்தனை, உள்ளத்தில் அமைதி கொண்ட மனிதராக வாழுங்கள்.
*இன்பதுன்பத்தை சமமாக கருதவேண்டும். இதனால், எதைக் கண்டும்சந்தோஷப்படவோ, துக்கப்படவோ வேண்டியிருக்காது.
*உலகில் வல்லவன் என்று கூட பெயர் எடுத்து விடலாம். ஆனால், நல்லவன் என்ற பேர் பெறுவது எளிதல்ல.  வல்லமையும், நற்குணமும்ஒரு சேர இருப்பதேஉயர்வானது.
-மகாபாரத விதுரர்

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

ஆணவம் கூடாது ஏப்ரல் 21,2026

ஹஜ்ரத் நுாஹ் நபியின் வழியில் வந்தவர்கள் ஷத்தாத், ஷதீத்.  இளவரசர்களான இவர்கள் இருவரும் சகோதரர்கள். ... மேலும்
 

சாமர்த்தியம் ஏப்ரல் 21,2026

ஒரு சிங்கத்திற்கு கடும்பசி. ஏதாவது தந்திரம் செய்து சாப்பிட நினைத்தது. அப்போது எதிரே சென்ற ... மேலும்
 

முதல் மாதம் ஏப்ரல் 21,2026

இஸ்லாமிய புத்தாண்டின் முதல் மாதம் மொகரம். இதன் பத்தாம் நாள் மொகரம் அனுசரிக்கப்படுகிறது. ... மேலும்
 
ஆப்பிரிக்காவிலுள்ள உகாண்டாவில் ஆதிவாசிகளான மசாயி என்பவர்கள் வாழ்ந்தனர். விவசாயிகளான இவர்கள் கடின ... மேலும்
 
* நேர்மையானவனுக்கு இருட்டிலும் வெளிச்சம் கிடைக்கும்.* சோதனை காலத்திலும் நேர்மையை விட்டு விலகாதீர். * ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar