Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இருக்கன்குடி கோயிலில் ... பக்தர்கள் பாதயாத்திரை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பார்த்தசாரதி கோவிலில் வாடகை காலக்கெடு முடிந்தது அதிரடி நடவடிக்கை எடுக்குமா அறநிலைய துறை?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஆக
2013
10:08

சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலுக்கு, வாடகை செலுத்துவதற்கான காலக் கெடு, நேற்றோடு முடிந்தது. இனிமேலாவது, வாடகை செலுத்தாதோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை, திருவல்லிக்கேணி யில் உள்ள பார்த்தசாரதி கோவிலுக்கு, 16.97 ஏக்கர் நிலமும், 42,380 சதுர அடியில் கட்டடங்களும் சொந்தமாக உள்ளன. சமீபத்தில், தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், அந்த கோவிலுக்கு செலுத்தப்பட வேண்டிய வாடகை பாக்கியில், 5 சதவீதம் மட்டுமே வசூலாகி உள்ளது, தெரிய வந்தது. இதுகுறித்து, தினமலர்’ நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலுக்கு, 1 லட்சம் ரூபாய்க்கும் மேல், வாடகை பாக்கி வைத்திருப்போரின், வீடு மற்றும் கடைகளில், கடந்த மாதம், இந்து சமய அறநிலைய துறை துணை கமிஷனர் ஜெகநாதன் தலைமையிலான, 15க்கும் மேற்பட்ட கோவில் பணியாளர்கள், ‘நோட்டீஸ்’ ஒட்டினர். அதன் விளைவாக, 14.65 லட்சம் ரூபாய், கோவிலுக்கு வசூலானது. திடீரென வாடகை செலுத்த முடியாமல் தவித்த வாடகைதாரர்கள், கோவில் நிர்வாகத்திடம், போதிய அவகாசம் வேண்டும்’ என, கோரிக்கை விடுத்தனர். நேற்றோடு, அதற்கான அவகாசம் முடிந்தது. இதையும் மீறி, வாடகை செலுத்தாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, அறநிலைய துறை அறிவித்திருந்தது. எனவே, கால அவகாசத் தையும் மீறி, வாடகை செலுத்த மறுப்போர் மீது, அறநிலைய துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்; அதுவே, ஆக்கிரமிப் பாளர்களுக்கு பாடமாக அமையும்’ என்பது, பக்தர்களின் கோரிக்கை.
நமது நிருபர்

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை: கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோயில் தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்வான கொடியேற்றம், ... மேலும்
 
temple news
புதுச்சத்திரம்: சேந்திரக்கிள்ளை அங்காளம்மன் கோவிலில், மயானக்கொள்ளை திருவிழா நடந்தது.விழா கடந்த 20ம் ... மேலும்
 
temple news
சங்கராபுரம்: சங்கராபுரம் ஆற்றுபாலம் பெரியாயி அம்மன் கோவிலில் நடந்த மாசி மாத திருவிழாவில் 100 கிலோ ... மேலும்
 
temple news
தியாகதுருகம்: சித்தலுார் பெரியநாயகி அம்மன் கோவிலில் மாசித் திருவிழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் ஹிந்து முன்னணி அமைப்பு சார்பில் நடந்த கந்த சஷ்டி கவசம் பாராயண ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar