Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சென்றாய பெருமாள் தேரோட்டம் ... வேளாங்கண்ணி தேவாலயத்தில் ஆண்டு திருவிழா கோலாகலம் வேளாங்கண்ணி தேவாலயத்தில் ஆண்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செம்பை வைத்தியநாத பாகவதர் இசை விழா ஆக 30 துவக்கம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

30 ஆக
2013
09:08

சென்னை: கர்நாடக இசையில், புகழ் பெற்ற செம்பை வைத்தியநாத பாகவதரின் நினைவாக, சென்னை, தி.நகர் கிருஷ்ண கான சபாவில், "செம்பை வைத்தியநாத பாகவதர் இசை விழா ஆக 30 காலை 9 மணிக்கு துவங்கி, ஆக 31 ம், செ 1ம்நடக்கிறது. கர்நாடக இசை கலைஞர்,கே.ஜே.ஜேசுதாசின், "திருவனந்தபுரம் தரங்கிணிஸரி இசைப் பள்ளி சார்பில், இவ்விழாவை நடக்கிறது. இதில், செம்பை வைத்தியநாத பாகவதரின் மகன் செம்பை சீனிவாசன், மருமகள் கோமதி சீனிவாசன் மற்றும் பிரதான சீடர்கள் உட்பட கர்நாடக இசையில் திறமை படைத்த பிரபல கலைஞர்கள் பங்கு பெறுகின்றனர். விழாவில், கர்நாடக இசை உலகில், 80 வயதை தாண்டிய, மூத்த பிரபல கலைஞர்கள் கவுரவிக்கப்பட உள்ளனர். இன்று நடக்கும் விழாவில், குரல் பிரிவில், கிருஷ்ணமூர்த்தி, வெங்கட்ராமன்; வயலின் - அனந்தராமன்; மிருதங்கம் - மெட்ராஸ் கண்ணன்; தம்புரா - லட்சுமி நாராயணன்; நாதஸ்வரம் - ராஜண்ணா, தவில் - பொறையாறு வேணு பிள்ளை ஆகியோருக்கு விருது வழங்கப்படுகிறது. நாளை, குரல் பிரிவில், பால முரளி கிருஷ்ணா, ஸ்ரீகாந்தன், தஞ்சாவூர் சங்கர ஐயர்; மிருதங்கம் - டி.கே. மூர்த்தி; நாதஸ்வரம் - அச்சல்புரம் சின்னத்தம்பி; தவில் - ராமலிங்கம், தம்புரா - வெங்கட்ராமன்; ஆர்மோனியம் - பல்லடம் வெங்கட்ரமண ராவ் ஆகியோருக்கும், செப்டம்பர், 1ம் தேதி, குரல் பிரிவில், மணக்கால் ரங்கராஜன், திருப்பூந்துருத்தி வெங்கடேசன், சுப்ரமணியன்; வயலின் - கிருஷ்ணன்; மிருதங்கம் - காரைக்குடி சந்திரமவுலி; நாதஸ்வரம் - நடராஜன்; தவில் - பாலு; ஜலதரங்கம் - ஆணையம்பட்டி கணேசன் ஆகியோருக்கும் விருது வழங்கப்படுகிறது. மேலும், கோபாலகிருஷ்ணன், ஜெய விஜயன், நேதனூரி கிருஷ்ணமூர்த்தி, பிரசாலா பொன்னம்மாள் ஆகியோருக்கு சிறப்பு விருது வழங்கப்படுகிறது. மூன்று நாட்களிலும், காலை, 9:00 மணி முதல் இரவு, 7:00 மணி வரை, கச்சேரிகளும், ஆக,30, ஆக,31 இரவு 7:00 - 7:30 வரை, விருது வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. செப்., 1ம் தேதி, இரவு, 7:30 மணி முதல், 9:15 வரை, விருது வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று, சிறப்பு நிகழ்ச்சியாக, கே.ஜே.ஜேசுதாஸ், கோபாலகிருஷ்ணன், ஜெயா விஜயன் ஆகியோரின், குரு சமர்ப்பண இசை நிகழ்ச்சி நடக்கிறது

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்:  திருவிசநல்லூர் ஸ்ரீதர அய்யாவாள் மடத்தில் கார்த்திகை அமாவாசை தினமான இன்று(19ம் தேதி) ... மேலும்
 
temple news
கோவை; கார்த்திகை மாதம் அமாவாசை தினத்தை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மதுரை: ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தின் தற்போதைய நிலை குறித்து அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம் புவனாம்பிகை உடனுறை பூலோகநாதர் கோவிலில், அலர்மேலு மங்கை தாயார் சமேத பிரசன்ன ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: கார்த்திகை மாத தேய்பிறை சிவராத்திரியையொட்டி, காஞ்சிபுரம் குபேரபட்டிணத்தில் அமைந்துள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar