Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிள்ளையார்பட்டி கோயிலில் ... பழங்கால குகை ஓவியங்கள் செஞ்சி அருகே கண்டுபிடிப்பு! பழங்கால குகை ஓவியங்கள் செஞ்சி அருகே ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வீட்டுக்குள் 5,800 விநாயகர் உருவங்கள்: வியக்க வைக்கிறார் தீவிர பக்தை!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

10 செப்
2013
10:09

ஊட்டி: ஊட்டியில், 5,800 விநாயகர் உருவங்களை சேகரித்துள்ள பெண், சதுர்த்தியை முன்னிட்டு, மெஹந்தியில் 35 உருவங்களை, கைகளில் வரைந்து வியக்க வைக்கிறார். ஊட்டி போலீஸ் துறையில், எஸ்.ஐ.,யாக பணிபுரியும் ஹரியின் மகள், விஷாலி மஞ்சு பாஷினி; விநாயகரின் தீவிர பக்தை. ஆறு ஆண்டுகளில் மட்டும், வித்தியாசமான விநாயகர் உருவங்கள், கீ செயின், படங்கள், கைவினைப் பொருட்களால் ஆன வடிவங்கள், விநாயகர் புகழ் பாடும் புத்தகங்களை சேகரித்து வைத்துள்ளார்; இதற்காகவே, அவரின் வீட்டில் ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. விஷாலினி கூறுகையில், விநாயகர், என் இஷ்டதெய்வம். ஓர் விபத்தில், நான் அணிந்திருந்த விநாயகர் டாலர், என்னை காப்பாற்றியது. அன்று முதல், நான் எப்பகுதிக்கு சென்றாலும், விநாயகர் உருவங்களை வாங்கி சேகரிப்பதை, வழக்கமாக்கி கொண்டேன். பின், உறவினர்கள், நண்பர்கள், விநாயகர் உருவங்களையே, எனக்கு பரிசாக வழங்குகின்றனர். எங்கள் வீட்டில் இதுவரை, 5,800க்கும் மேற்பட்ட விநாயகர் வடிவங்களை, சேகரித்து வைத்துள்ளேன். விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் விதத்தில், மெஹந்தி மூலம், 35 விநாயகர் வடிவங்களை கைகளில் வரைந்துள்ளேன். இந்த முயற்சிக்கு, என் பெற்றோர், ஊக்கம் அளிக்கின்றனர், என்றார். தந்தை ஹரி கூறுகையில், என் மகள் சேகரித்துள்ள விநாயகர் உருவங்கள் குறித்து, லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன; கின்னஸ் சாதனைக்கு தேவையான பணிகளில் ஈடுபட்டுள்ளோம், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மும்பை; மாட்டுங்கா சங்கர மடத்தின் கும்பாபிஷேகத்தை ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் பங்குனித் திருவிழாவில் நேற்று, ஆறு மணி நேரம் பக்தர்கள் ... மேலும்
 
temple news
பெருமாநல்லுார்: திருப்பூர் ஒன்றியம், தொரவலுாரில் உள்ள கோட்டை முனியப்ப சுவாமி கோவில் பொங்கல் திருவிழா ... மேலும்
 
temple news
திருப்பூர்: கருவலுார், ஸ்ரீமாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா, மார்ச் 17ம் தேதி பூச்சாட்டுடன் துவங்கியது; ... மேலும்
 
temple news
 உடுமலை: மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவையொட்டி, கோவில் திருக்கம்பத்துக்கு, பக்தர்கள் தீர்த்தம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar