விபூதியை இரண்டு விதமாகப் பூசிக் கொள்ளலாம். குளித்தவுடன், தண்ணீரில் குழைத்து கட்டைவிரல், சுண்டுவிரல் நீங்கலாக மற்றைய மூன்று விரல்களாலும் பட்டையாக இட்டுக் கொள்ள வேண்டும். மற்ற நேரங்களில் மேற்படி விரல்களால் புழுதியாகப் பூசிக் கொள்ள வேண்டும். பெரும்பாலானவர்கள் சிறிய கோடாக இட்டுக் கொள்கின்றனர். இதற்கு மோதிர விரலை உபயோகிக்க வேண்டும். ஆள்காட்டி விரலால் இடுவது கூடாது.