Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஊஞ்சல் சேவையில் ஸ்ரீவரதராஜபெருமாள்! காஞ்சி காமாட்சி கோவிலில் நவராத்திரி உற்சவம் 4ம் தேதி துவக்கம்! காஞ்சி காமாட்சி கோவிலில் நவராத்திரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஏர்வாடியில் சந்தனக்கூடு திருவிழா: மலர் தூவி பக்தர்கள் வரவேற்பு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 செப்
2013
12:09

கீழக்கரை: ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி பாதுஷா நாயகம் தர்காவில் 839வது தேசிய ஒருமைப்பாட்டு சந்தனக்கூடு ஊர்வலம் இன்று அதிகாலை நடந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் சந்தனக்கூடுவிற்கு மலர் தூவி வரவேற்றனர். கடந்த மாதம் செப்.,7ல் மவுலுது (புகழ்மாலை) ஓதப்பட்டு சந்தனக்கூடு விழா துவங்கியது.நேற்று மாலை ஐந்து மணிக்கு யானை மற்றும் குதிரை, தாரை, தப்பட்டையுடன் ஊர்வலமாக சென்று தர்காவில் போர்வை எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதை தொடர்ந்து நேற்று அதிகாலை சந்தனம் கரைக்கும் நிகழ்ச்சி நல்ல இபுறாகிம் மஹாலில் நடந்தது. ஏர்வாடி சந்தனக்கூடு உருவாக்குவதில் அனைத்து சமுதாய மக்களும் பங்கேற்பதால் ஆண்டுதோறும் மதநல்லிணக்க விழாவாக கொண்டாடி வருகின்றனர். யாதவர் மற்றும் முத்தரையர் சமூகத்தினர் சந்தனக்கூட்டை இழுத்து வந்தனர். ஊர்வலத்தில் ஆதி திராவிட சமூகத்தினர் புத்தாடை அணிந்து, தீப்பந்தங்களை பிடித்தும், பிறைக் கொடி ஏந்தி,பெண்கள் வழி நெடுகிலும் குலவையிட்டு வந்தனர். காலை ஐந்து மணிக்கு மின் விளக்குளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு தர்கா வளாகத்தை வந்தடைந்தது. தர்கா வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மலர்களை தூவி வரவேற்றனர்.தர்கா ஹக்தார்கள் பாதுஷா நாயகம் அடக்க ஸ்தலத்தில் சந்தனம் பூசி,போர்வையை போர்த்தினர்.அதன் பின் பக்தர்களுக்கு சந்தனம் வழங்கினர். வரும் அக்.,6ல் கொடியிறக்கம் நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது.விழா ஏற்பாடுகளை தர்கா ஹக்தார் நிர்வாக சபை தலைவர் அம்ஜத் ஹூசைன் தலைமையில், செயலாளர் செய்யது பாருக் ஆலிம் அரூஸி, துணை தலைவர் செய்யது சிராஜூதீன் மற்றும் நிர்வாக சபை உறுப்பினர்கள் செய்தனர்.கீழக்கரை டி.எஸ்.பி.,சோமசேகர் தலைமையில் 400 போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர்.

Default Image
Next News

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவக்கிரகங்களில், சூரியன் சிவாம்சம் கொண்டவர். இவர் தை மாதத்தில் தன் வடதிசைப் பயணத்தை தொடங்குகிறார். ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதுாரில், திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான, ... மேலும்
 
temple news
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயிலில் பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் ... மேலும்
 
temple news
 ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் குஜராத் சோமநாதர் ஜோதிர்லிங்கத்திற்கு வாழும் கலை ... மேலும்
 
temple news
 நெல்லிக்குப்பம்: வேணுகோபால சுவாமிக்கு நடந்த தைல காப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar