Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நவராத்திரி முதல்நாள்: எவ்வாறு வழிபட ... நவராத்திரி பவனிக்கு எல்லையில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மீனாட்சி அம்மன் கோயிலில் கொலு கண்காட்சி துவக்கம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 அக்
2013
10:10

மதுரை: நவராத்திரி கலை விழாவை முன்னிட்டு சர்வம் பக்தி மயம் பெயரில், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சிறப்பு கொலு கண்காட்சி நாளை (அக்.,5) காலை 7 மணிக்கு துவங்குகிறது. இக்கோயிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு 2012ல் தசதர்ப்பம் பெயரில் கொலு கண்காட்சி நடந்தது. இந்தாண்டு சர்வம் பக்திமயம் பெயரில் நடக்கவுள்ள சிறப்பு கொலு கண்காட்சியில் ஆயிரக்கணக்கில் பொம்மைகள் இடம் பெறவுள்ளன. இதற்கான வடிவமைப்பை சென்னை மயிலை மூவர் குழு மேற்கொண்டுள்ளது. நான்கு யுகங்களை குறிக்கும் வகையில் ஒவ்வொரு யுகத்தையும் தத்ரூபமாக விளக்க தனித்தனி கொலு பொம்மைகள் இடம் பெற்றுள்ளன. 108 சிவதாண்டவம்: தெய்வகடாச்சம், லட்சுமிகடாச்சம், கைலாயம், சிவபெருமானின் 108 சிவதாண்டவம், பஞ்சபூதங்களை குறிக்கும் கொலு பொம்மைகள் இடம் பெறுகின்றன. மதுரை பக்தி தலைப்பில் சித்திரை தேரோட்டம், தெப்பத்திருவிழா, கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளல், மீனாட்சி அம்மன் கோயிலின் சிறப்பு குறித்து விளக்கும் வகையில் கொலு அமைக்கப்பட்டுள்ளது. அம்மன் இரண்டாம் பிரகாரத்தில் சிறப்பு கொலு கண்காட்சிக்கு கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இன்று (அக்.,5) முதல் அக்.,14 வரை தினமும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை கண்காட்சியை காணலாம், என கோயில் நிர்வாகம் தெரிவிக்கிறது. தினமும் அலங்காரம்: நாளை (அக்.,5) ராஜராஜேஸ்வரி அலங்காரம். அக்., 6ல் கருங்குருவிக்கு உபதேசம் செய்தல். அக்., 7ல் பாணனுக்கு அங்கம் வெட்டியது. அக்., 8ல் நாரைக்கு முக்தி கொடுத்தது. அக்., 9ல் பிட்டுக்கு மண் சுமந்தது. அக்., 10ல் எல்லாம் வல்ல சித்தர் திருக்கோலம். அக்., 11ல் முத்தங்கி சேவை. அக்., 12ல் மகிஷாசுரமர்த்தினி திருக்கோலம். அக்., 13ல் சிவபூஜை திருக்கோலம். அக்., 14ல் விஜயதசமி. தினமும் மாலை 4.30 மணிக்கு கர்நாடக சங்கீதம், இதையடுத்து பரதநாட்டியம், பக்தி மெல்லிசை, ஆன்மிகச் சொற்பொழிவு, அக்.,14ல் மாலை 4.30 மணிக்கு வீணை இசை வழிபாடு மற்றும் புல்லாங்குழலில் தமிழிசை போன்ற கலைநிகழ்ச்சிகள் நடக்கவுள்ளன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலையில் உள்ள ஸ்ரீவாரி கோயிலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அக்டோபர் 20ம் தேதி தீபாவளி ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ரசாயி புரட்டாசி பிரமோற்ஸவ நிறைவை ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தாமிரபரணி ஆற்றின் கடைசி தடுப்பணை அருகே கிடைத்த அழகிய தீர்த்தங்கரர் சிற்பம் சுமார் 1100 ... மேலும்
 
temple news
கோவை;  புரட்டாசி மாதம் மூன்றாவது புதன்கிழமையை  முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜபதி ... மேலும்
 
temple news
புதுச்சேரி; பஞ்சவடீயில் நாளை (9ம் தேதி) திருப்பாவாடை உற்சவம் நடக்கிறது.புதுச்சேரி – திண்டிவனம் சாலையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar