பதிவு செய்த நாள்
09
அக்
2013
06:10
சுறுசுறுப்புடன் பணியாற்றும் விருச்சிகராசி அன்பர்களே!
நிழல் கிரகமான கேது 6ம் இடத்தில் நின்று நன்மை தந்து கொண்டிருக்கிறார். அவரால் பொருளாதார வளம் அதிகரிக்கும். பகைவர் தொல்லை நீங்கும். ஆடை, ஆபரணம் சேரும். ராசி நாயகன் செவ்வாய் தற்போது 10ம் இடத்திற்கு வந்துள்ளார். இதனால் அவரால் கடந்த மாதம் ஏற்பட்ட தடை மறையும். அதேநேரம் அவரால் உஷ்ணம், தோல், தொடர்பான நோய் வரலாம். சிலரது வீட்டில் பொருட்கள் களவு போக வாய்ப்பு உண்டு. ஆனால், செவ்வாய் மீது குருவின் பார்வை விழுவதால் பாதிப்பு பெரிய அளவில் இருக்காது. சுக்கிரன் இந்த மாதம் முழுவதும் நன்மை தருவார். அக்.31 வரை அவர் உங்கள் ராசியில் இருந்து பொருளாதார வளத்தை உயர்த்துவார். விருந்து, விழா என சென்று வருவீர்கள். அதன்பின் 2-ம் இடத்திற்கு செல்வதால் பணவரவை தருவதோடு செல்வாக்கு உயரும். அரசிடம் இருந்து விருது போன்றவை கிடைக்கும். வியாபாரிகளுக்கு அரசின் சலுகை கிடைக்கும்.சூரியன் சனி,ராகுவோடு இந்த மாதம் இணைகிறார். அவரால் பொருள் விரயம் ஏற்படும். தொழிலில் நஷ்டம் உருவாகலாம். நிர்வாகச் செலவு அதிகரிக்கும். உத்தியோகத்தில் விரும்பாத இடமாற்றம் வர வாய்ப்பு உண்டு. குருவின் பார்வை இவர் மீதும் விழுவதால் அவரால் அதிக பாதிப்பு உண்டாகாது. புதனும் தற்போது சாதகமற்ற இடத்தில் உள்ளார். எதிரிகள் தொல்லை வரலாம். உங்கள் முயற்சியில் பின்னடைவு ஏற்படலாம். உடல் நலத்தில் அக்கறை கொள்வது அவசியம். ஆனால், புதன் அக்.24 முத நவ.14 வரை வக்கிரம் அடைகிறார். அப்போது அவர் 11-ம் இடத்திற்கு செல்வதால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பொருளாதார வளம் மேம்படும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். எடுத்த காரியம் வெற்றி அடையும்.குருபகவான் சாதகமற்ற இடத்தில் இருந்தாலும் கவலை கொள்ள வேண்டாம். அவர் அக்.24 முதல் வக்கிரம் அடைவதால், கெடுபலனை தராமல் நன்மை தருவார்.
நல்ல நாட்கள்: அக்.19,20,21,22,23,29,30,31,நவ.1,2,5,6,9,10, 15,16
கவன நாட்கள்: அக்.24,25
அதிர்ஷ்ட எண்: 5,6 நிறம்: சிவப்பு, வெள்ளை
வழிபாடு: நவக்கிரங்களை வலம் வாருங்கள். துர்க்கையையும், முருகனையும் வணங்கி வாருங்கள். ராகு,சனிக்கு அர்ச்சனை செய்வது நல்லது. ஏழைகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள்.