Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருவாடானை தூய ஜெபமாலை தேர்பவனி ஆயுத பூஜை வழிபாடு வேதையில் கோலாகலம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஜயவீர கோவில் கும்பாபிஷேகம் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 அக்
2013
10:10

கும்பகோணம்: ஜயவீர ஆஞ்சநேயர் கோவில் மகாகும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். கோவில் நகரமான கும்பகோணத்தில் உள்ள வைணவதலங்களில் முக்கிய தலமாக கரபாணி சுவாமி கோவில் திகழ்கிறது. மாசி மாதத்தில் மக நட்சத்திரத்தன்று இக்கோவிலின் தேரோட்டம் வெகு விமர்சையாக நடந்து வருகிறது. கோவிலின் தெற்கு கோபுர வாசலில், ஜயவீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. புகழ்பெற்ற இக்கோவிலில் மகாகும்பாபிஷேகம் கடந்த, 2000ம் ஆண்டில் நடந்தது. மீண்டும் அக்கோவில் திருப்பணி செய்து, அதன் மகாகும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, ஆஞ்சநேயா, ஆஞ்சநேயா என்ற கோஷங்களை எழுப்பி வழிபட்டனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் கடந்த, 8ம் தேதி துவங்கியது. கடந்த வியாழக்கிழமை இரவு, நான்காம் கால யாகசாலை பூஜை நடந்தது. அதில் வேலுக்குடி கிருஷ்ணன், சிட்டி யூனியன் வங்கி தலைமை செயல் இயக்குனர் மற்றும் மேலாண் இயக்குனர் காமகோடி, ராயா கோவிந்தராஜன், ஆடிட்டர் சூரியநாராயணன், சிட்டி யூனியன் வங்கி தலைமை பொதுமேலாளர் மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஐந்தாம் கால யாகசாலை பூஜை நிறைவுற்று, அதிகாலை, 5.30 மணிக்கு புனித கலசர் புறப்பாடாகி, கரபாணி சன்னதி, கரபாணி தெற்குவீதி வழியாக வலம் வந்து, மூலவரின் விமான கோபுரத்துக்கும், மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு புனித நீர் அபிஷேகம் நடந்தது. விழாவுக்கு ஏற்பாடுகளை ஜயவீர ஆஞ்சநேயர் கோவில் தர்ம கர்த்தா குடும்பத்தினர் டாக்டர் கலைச்செல்வன், இந்தியன் வங்கி ரமணி, முத்துதாண்டவன் மற்றும் தமிழ்நாடு வர்த்தகர் நலக்கழக ர்வாகிகள் கணேஷ், சேதுமாதவன் மற்றும் ர்வாகிகள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, வீடு மற்றும் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விஷ்ணு ... மேலும்
 
temple news
ஆடிக்கிருத்திகை; திருத்தணி முருகன் கோவிலில் குவியும் பக்தர்கள்.. காவடிகளுடன் பரவசம்திருத்தணி; ... மேலும்
 
temple news
மாதான முத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற தீமிதி திருவிழாவில் 5000க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ ... மேலும்
 
temple news
கண்ணன் குழந்தை பருவத்தில் வெண்ணெய் திருடி உண்டு மகிழ்ந்தார் இதனால், கிருஷ்ணஜெயந்தியன்று பால், தயிர், ... மேலும்
 
temple news
சிதம்பரம்; 79வது சுதந்திர தின விழாவையொட்டி, சிதம்பரம் நடராஜர் கோவிலில், 152 அடி உயர ராஜகோபுரத்தில், பொது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar