Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! ஆலய தரிசன கட்டணத்தை ரத்து செய்ய கோரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 நவ
2013
10:11

கழுகுமலை: கழுகுமலை கழுகாசலமூர்த்தி குடவரைக் கோயிலில் கந்தசஷ்டி திருவிழா திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது. தூத்துக்குடி மாவட்டத்தின் சிறந்த சுற்றுலாத்தலமாக கழுகுமலையில் அமைந்துள்ள கழுகாசலமூர்த்தி குடவரைக் கோயில் தமிழகத்தில் அமைந்துள்ள முருகனின் அறுபடை வீடுகளுக்கு அடுத்தாற்போல் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். மேலும் இக்கோயிலில் முருகனின் ஒவ்வொரு சிறப்பு திருவிழாக்களும் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இதில் கந்தசஷ்டி திருவிழாவும், அதையொட்டி நடைபெறும் தாருகாசூரன் வதம், சூரசம்ஹாரம் ஆகிய விழா நிகழ்ச்சிகள் மிகவும் முக்கியமானவை. இந்தாண்டு கந்தசஷ்டி திருவிழா நடந்த 3ந்தேதி துவங்கி ஒவ்வொரு நாளும் கட்டளைதாரர் முறையில் சுவாமி வள்ளி தெய்வானை அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் திருவீதியுலா வந்தனர். இதையடுத்து கடந்த ஐந்தாம் திருநாளன்று தமிழகத்தின் முருகத்தலங்களில் எங்குமே நடைபெறாத சிறப்பாக தாருகாசூரன் வதம் நடந்தது. இதையடுத்த ஆறாம் திருநாளன்று சூரசம்ஹாரமும், ஏழாம் திருநாளன்று திருவீதியுலா வந்து தடம்பார்த்தல் நிகழ்ச்சியும், எட்டாம் திருநாளன்று தபசுக்காட்சியும் நடந்தது. கந்தசஷ்டி திருவிழாவின் மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான முருகன் தெய்வானை திருக்கல்யாண திருவிழா நடந்தது. இதையொட்டி கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் அதிகாலையில் நடைதிறக்கப்பட்டு திருவனந்தள் பூஜை நடந்தது. தொடர்ந்து உற்சவர் கழுகாசலமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனையும், உச்சிகால பூஜையும் நடந்தது. பின்னர் மாலையில் நடைதிறக்கப்பட்டு சுவாமி மணக்கோலத்தில் அலங்கரிக்கப்பட்டு பல்லக்கில் திருவீதியுலா வந்த பின்னர் மண்டபத்தில் எழுந்தருளினார். மேலும் தெய்வானை மணக்கோலத்தில் அலங்கரிக்கப்பட்டு திருமண மேடைக்கு எழுந்தருளல் நடந்ததுடன், திருமண நலங்கு பூஜைகள் நடந்தது. பின்னர் நூற்றுக்கணக்கான முருக பக்தர்களின் பக்தி கோஷம் விண்ணைமுட்டதெய்வானைக்கு சுவாமி திருநாண் பூட்டி திருக்கல்யாணம் நடந்தது. மேலும் சுவாமி மற்றும் தெய்வானைக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. திருக்கல்யாண சிறப்பாக பக்தர்களுக்கு மஞ்சள் கயிறு, குங்குமம் போன்ற மங்கலப்பொருகள் பிரசாதமாக வழங்கப்பட்ட பின்னர் திருமொய்யெழுதும் நிகழ்ச்சி நடந்தது. மேலும் கழுகுமலை பழனிச்சாமி சின்னத்தாயம்மாள் சார்பில் சுவாமி திருக்கல்யாண பொதுவிருந்து நடந்தது. விழாவில் கட்டளைதாரர் திருமாளிகை ஆதீனம் அனந்தம்மன் கோயில் செல்லச்சாமி, கோயில் நிர்வாக அதிகாரி தமிழானந்தன் உட்பட நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பெருமாளை வழிபடுவதற்கு சிறந்த நாள் திருவோணம். பெருமாளின் வாமன அவதாரத்தை போற்றும் நாள் இது. பெருமாள் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் மதகடி, வேம்படி மாரியம்மன் கோவிலில் 30ம் ஆண்டு சித்திரை திருவிழா நடந்தது. ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்; திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில், 2,000 ஆண்டுகள் பழமையானது. ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; மதுரையில் நடக்கும் முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு, கோவை அருகே கேரள ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள உடையவர் சன்னிதி, தமிழக அரசின், 2023 – -24ம் ஆண்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar