விழுப்புரம்: காகுப்பம் திருக்குறிப்பு தொண்டர் நகரில் அமைந் துள்ள ரேணுகாபரமேஸ்வரி ஆலய அரசமரம், வேம்பு மரம் விநாயகருக்கு இன்று பிரதிஷ்டை நடக்கிறது. விழாவை யொட்டி இன்று அதிகாலை 5:00 மணிக்கு ரேணுகாபரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடக்கிறது. தொடர்ந்து 7:30க்கு அரசமரம், வேம்புமரம் வினாயகருக்கு திருமணம் நடக்கிறது. பின்னர் பக்தர்களுக்கு விருந்து உபசாரங்கள் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை அப்பகுதி மக்கள் செய்கின்றனர்.